News May 9, 2024

அதிகாரிகளுடன் சத்ய பிரதா சாஹூ ஆலோசனை

image

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், சத்ய பிரதா சாஹூ ஆலோசனை நடத்தியுள்ளார். வாக்கு எண்ணிக்கை நாளில் செய்ய வேண்டிய முன் ஏற்பாடுகள், மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை கதவின் முன்பு, கூடுதலாக ஒரு சிசிடிவி கேமராவை பொருத்தவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

News May 9, 2024

இந்துக்களின் எண்ணிக்கை 7.82% சரிந்தது

image

1950 – 2015 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை 7.82% சரிந்துள்ளதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தெரிவித்துள்ளது. அதன் ஆய்வறிக்கையில், இந்திய மக்கள் தொகையில், இந்துக்களின் எண்ணிக்கை 84.68 சதவீதத்தில் இருந்து 78.06% ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 7.84 சதவீதத்திலிருந்து 14% ஆக அதிகரித்து, 43% வளர்ச்சி பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News May 9, 2024

யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த வேண்டும்

image

ஆபாச கருத்துகள் அதிகமாக வெளியிடும் யூடியூப் சேனல்களில் நேர்காணல் செய்பவர்கள் A1 குற்றவாளியாக வரிசைப்படுத்தப்பட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. காவலர்களை ஆபாசமாகப் பேசிய வழக்கில் RedPix பெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமின் கோரியிருந்தார். அம்மனுவை விசாரித்த நீதிமன்றம், தற்போது தொல்லையாக மாறிவிட்ட யூடியூப் சேனல்களின் செயல்பாடுகளை அரசுகட்டுப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது.

News May 9, 2024

வெடி விபத்து உயிரிழப்புகளுக்கு இப்படி தீர்வு காணலாம்

image

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு கீழ்கண்ட யோசனைகள் மூலம் தீர்வு காணலாம். *ஆலைக்கு அனுமதி வழங்கும் முன்பு, உற்பத்தி விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என சோதிக்க வேண்டும் *விரிவான இட வசதியை உறுதிப்படுத்த வேண்டும் *பெண்கள், வயதானோர் பணிபுரிய கட்டுப்பாடு விதிக்க வேண்டும் *ஆலை இருக்கும் பகுதிகளில் மீட்பு வண்டிகள், ஆம்புலன்ஸ்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

News May 9, 2024

15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை

image

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரையிலான அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சேலம், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கக்கூடுமென்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

News May 9, 2024

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி பேட்டிங்

image

ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்கிறது. தரம்சாலாவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. ஆர்சிபி அணியில் மேக்ஸ்வெல் இடம்பெறவில்லை. பஞ்சாப் அணியில் ரபாடாவுக்கு பதில் லிவிங் ஸ்டோன் சேர்க்கப்பட்டுள்ளார்.

News May 9, 2024

மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார்: ராகுல் காந்தி

image

மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் மோடியின் கைகளில் இருந்து நழுவிச் சென்று விட்டதாகவும், ஆதலால் மக்களின் கவனத்தை அடுத்த 4 அல்லது 5 நாள்களில் திசை திருப்ப மோடி முயல்வார் என்றும் கூறிய ராகுல் காந்தி, மத்தியில் INDIA கூட்டணி அரசு அமைந்ததும் 30 லட்சம் பேருக்கு ஆகஸ்ட் மாதத்திற்குள் வேலை வாய்ப்பு அளிக்கப்படுமென உறுதியளித்தார்.

News May 9, 2024

பட்டாசு ஆலை விபத்துகளால் கண்ணீர் சிந்தும் குடும்பங்கள்

image

தொடரும் பட்டாசு ஆலை விபத்துகளால், பல குடும்பங்கள் கண்ணீர் சிந்துகின்றன. தீபாவளிக்காகவும், ஏற்றுமதிக்காகவும், சிவகாசி பட்டாசு ஆலைகளில் இரவு பகலாக உற்பத்தி நடைபெறுகிறது. அங்கு போதிய வசதி இல்லாததாலும், கவனக்குறைவாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதும், இழப்பீடு அறிவிப்பதும் வாடிக்கையாகி விட்டது. ஆனால் நிரந்தர தீர்வு காணப்படாததால் சொந்தங்களை இழந்து குடும்பத்தினர் தவிக்கின்றனர்.

News May 9, 2024

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் இரங்கல்

image

சிவகாசி கீழத்திருத்தங்கல் தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் இறந்த செய்தியை கேட்டு வேதனையடைந்தேன். விபத்தில், காயமடைந்தவர்களுக்கு அனைத்து உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படும். மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 9, 2024

ஹரியானா பாஜக ஆட்சிக்கு அதிகரிக்கும் நெருக்கடி!

image

ஹரியானா சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி அம்மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா கடிதம் எழுதியுள்ளார். அதில், முதல்வர் நயாப் சைனி தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சோம்பிர் உள்ளிட்ட 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றுள்ளனர். இதனால் ஆளும் பாஜக அரசுக்கு தற்போது பெரும்பான்மை இல்லை என்பது தெளிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!