India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்துகளை மக்களுக்கு PM மோடி தெரிவித்துள்ளார். இந்நாள் தரும் ஊக்கத்தில் கடுமையாக உழைத்து நமது சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்குவோம் என தனது X தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் 12-வது முறையாக PM மோடி செங்கோட்டையில் கொடியேற்ற உள்ளார்.
நாடு முழுவதும் ஆண்டுக்கு ₹3,000 செலுத்தி பயணம் செய்யும் FAStag திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் வணிக நோக்கமற்ற கார், ஜீப், வேன்கள் நாடு முழுவதும் 200 முறை டோல்கேட்களில் எவ்வித கட்டணமுமின்றி பயணிக்கலாம். Rajmarg Yatra செயலியில் PASS வழங்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களது செல்போன் எண், வாகன பதிவு எண், பாஸ்டேக் ஐடி உள்ளிட்டவற்றை பதிவு செய்து ரசீதை பெற்றுக் கொள்ளலாம். SHARE IT.
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப், புடின் இருவரும் அலாஸ்காவில் சந்தித்து பேச உள்ளனர். 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் போரினால் உலகளவில் கச்சா எண்ணெய் விற்பனை, பொருளாதார ஸ்திரத்தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் முயன்று வருகிறார். இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டால் இந்தியா மீதான வரியும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
₹1937 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது X பதிவில், 13,409 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதில்லை; முதலீடுகளை வைத்து வேலைவாய்ப்புகளாக மாற்றுவதாகவும் தெரிவித்தார்.
பெரம்பலூர், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில்
வாயில் துணியை கட்டிக்கொண்டுதான் பூசாரிகள் பூசை செய்கின்றனர். இக்கோயிலில், உக்கிரமாக இருக்கும் அம்மனை, பூசாரிகளின் மந்திரம் மேலும் உக்கிரமாக்கும் என்பதால், வாயில் துணி கட்டிக் கொள்கின்றனர். மேலும், இக்கோயில் வாரத்தில் திங்கள் & வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திறந்திருக்கும். மதுரையை எரித்த கண்ணகியே இங்கு கோயில் கொண்டு இருக்கிறாள் எனவும் கூறப்படுகிறது.
தோனியின் கேப்டன்சியை, அதற்கு முந்தைய தலைமுறையும், அவருக்கு அடுத்த தலைமுறையும் எப்போதும் கொண்டாடி வருகிறது. இந்நிலையில், தெ.ஆப்பிரிக்க வீரர் வெய்ன் பர்னெல் தனது ALL-TIME ODI அணியின் கேப்டனாக தோனியை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது பிளேயிங் 11-ல் சச்சின், ஆம்லா, விராட், ஏபி டிவில்லியர்ஸ், ஹஸி, அஃப்ரிடி, வாசிம் அக்ரம், லீ, முரளிதரன், வக்கார் யூனிஸ் இடம்பெற்றுள்ளனர். இதில் யாரேனும் விடுபட்டுள்ளனரா?
சுதந்திர தினத்தில் திருட முடியாத ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதில் உறுதியேற்போம் என CM ஸ்டாலின் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், உண்மையான சுதந்திரம் என்பது மதவெறியை நிராகரித்தல், பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவருதல் எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நமது சுதந்திர போராளிகளின் கனவுகளை நிறைவேற்றி அனைவரும் சமத்துவம், கண்ணியம் மற்றும் மரியாதையுடன் வாழ வழிவகை செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று(ஆக.14) மீண்டும் 10 காசுகள் சரிந்து ₹87.57 ஆக உள்ளது. இதனிடையே, கடந்த ஜூலை மாதத்தில், மொத்த விலை பணவீக்கமும் மைனஸ் 0.58% என எதிர்மறையாக பதிவாகி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இதுதான் மிகவும் குறைவான பணவீக்க விகிதமாகும். உணவு பொருள்கள், கனிம எண்ணெய், இயற்கை வாயு ஆகியவற்றின் விலை சரிவால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
நாட்டின் 79-வது சுதந்திர தினம் ‘Naya Bharat’ என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. அதாவது, வளங்கள், பாதுகாப்பு மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்கும் ‘வளர்ச்சியடைந்த பாரதம் 2047’ என்ற இலக்கை நோக்கிய பயணத்தையே இந்த நயா பாரத் குறிக்கிறது. இதனையொட்டி டெல்லி செங்கோட்டையில் 12-வது முறையாக கொடியேற்றும் PM மோடி, நாட்டு மக்களிடம் இது குறித்து உரையாற்றுகிறார்.
காங்., ஆட்சிக் காலத்திலேயே அரசுத் துறைகள் அதிகளவில் தனியார்மயமாக்கப்பட்டதாக அமைச்சர் L.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உ.பி., பிஹார், குஜராத் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது TN வளர்ச்சியில் பின்னோக்கி உள்ளதாகவும் விமர்சித்தார். மேலும், தூய்மை பணியாளர்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்த அவர், சமூக நீதியைப் பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி இல்லை என சாடினார்.
Sorry, no posts matched your criteria.