India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தன்னை அவமரியாதையாக நடத்தினாலோ, கேட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளை தர மறுத்தாலோ திமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுப்பேன் என தவாக வேல்முருகன் கூறியுள்ளார். 2021 தேர்தல் முடிந்ததில் இருந்தே திமுகவுக்கும், வேல்முருகனுக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், இவர் வைக்கும் கோரிக்கைகளை திமுக ஏற்குமா, கூட்டணியில் தவாக நீடிக்குமா என மீண்டும் சலசலப்பு கிளம்பியுள்ளது.

இந்தியாவில் 64% பெண்கள் சானிட்டரி நாப்கின் பயன்படுத்துகின்றனர். ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்தப்படுகிறது. அவற்றிலுள்ள வேதிப்பொருள்கள் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து அதன் ஆபத்துகளை காணலாம். இதற்கு பதிலாக மென்ஸ்ட்ருவல் கப், காட்டன் நாப்கின் போன்ற மாற்றுகளை பயன்படுத்தலாம். இதை SHARE பண்ணலாமே!

RTE-ன் படி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அக்.30 & 31 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்காக 81,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அக்.30-ல், விண்ணப்பங்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை நடைபெறும். அக்.31-ல், விண்ணப்பங்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில், குலுக்கல் முறையில் (Random Selection) மாணவர் தேர்வு & சேர்க்கை நடத்தப்படவுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் S.I.R. தொடங்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தியாகராய நகர் தொகுதி வாக்காளர் நீக்கம், சேர்ப்புக்கு எதிரான வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் உள்ளிட்ட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்குவதாக ECI தெரிவித்துள்ளது.

தன் சக நடிகரை விட தனக்கு குறைந்த சம்பளம் கிடைத்திருக்கிறது, ஆனால் அது தன்னை பாதிக்கவில்லை என நடிகை பிரியாமணி கூறியுள்ளார். தன்னுடைய சந்தை மதிப்பு என்னவென்று தனக்கு தெரியும் என்ற அவர், தகுதியான சம்பளத்தைதான் தான் கேட்பேன் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால், நடிகைகள் அதிக சம்பளம் கேட்பது தவறில்லை எனவும், ஆனால் தான் அதிகமாக கேட்கமாட்டேன் எனவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

வயதானவர்கள், மதுப் பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே இருந்துவந்த கொழுப்புக் கல்லீரல் (ஃபேட்டி லிவர்) நோய், தற்போது குழந்தைகளைகூட பாதிக்கிறது. இந்நோய் வந்தால், பெரிதாக எந்த அறிகுறியும் தெரியாது என்பதே இதை இன்னும் கொடியதாக ஆக்குகிறது. எனவே, இந்நோய் உங்களுக்கு வராமல் தடுக்கவும், அந்நோயில் இருந்து விடுபடவும் உதவும் உணவுகளை மேலே போட்டோக்களில் கொடுத்துள்ளோம். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யலாமே.

இசையமைப்பாளர் சபேஷ் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக சிறுநீரக பிரச்னை காரணமாக மாதம் 2 முறை டயாலிசிஸ் செய்து வந்திருக்கிறார். அதன்படி, கடந்த 21-ம் தேதி வடபழனியில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் டயாலிசிஸ் செய்துகொண்டிருந்த அவருக்கு மூளையில் ரத்தம் கசிந்து ஸ்ட்ரோக் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவருக்கு 2 நாளாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று உயிர் பிரிந்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தலுக்காக 5 சின்னங்களை தவெக தேர்வு செய்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளைஞர்கள், பெண்களை கவரும் வகையில் இந்த சின்னங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாம். முன்னதாக பரிந்துரையில் இருந்த ஆட்டோ, விசில் சின்னங்கள் தற்போது பட்டியலில் இல்லை என்கின்றனர். நவம்பர் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையத்தில் இதற்காக விண்ணப்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த 5 சின்னங்கள் என்னவா இருக்கும்?

உலகின் பெஸ்ட் ஆல்ரவுண்டரான ஜடேஜா, ரஞ்சி தொடரில் சவுராஷ்டிரா அணிக்காக மீண்டும் விளையாடவுள்ளார். நாளை தொடங்கவுள்ள ம.பி., அணிக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்கவுள்ளார். அடுத்து தொடங்கவுள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடருக்கு தயாராகும் விதமாக ஜடேஜா இந்த போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜியோ ஹாட்ஸ்டாரில் இப்போட்டி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

SBI வங்கி வாடிக்கையாளரா நீங்கள்? நாடு முழுவதும் நாளை(அக்.25) மதியம் 1.10 மணிக்கு வங்கியின் UPI, IMPS, YONO ஆகிய இணைய சேவைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக NEFT & RTGS சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. மீண்டும் மதியம் 2:10 மணிக்கு இயல்பு நிலைக்கு திரும்பும். இந்த இடைப்பட்ட நேரத்தில் ATM & UPI லைட் சேவைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE.
Sorry, no posts matched your criteria.