India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக Ex MP மைத்ரேயன் திமுகவில் இணைந்தது அக்கட்சிக்கு பலமாக பார்க்கப்படும் அதேவேளையில் விமர்சனத்திற்கும் ஆளாக்கப்பட்டுள்ளது. 1991-ல் RSS-ல் இணைந்த மைத்ரேயன் அங்கிருந்து BJP, பின்னர் அதிமுக, பின்னர் மீண்டும் BJP, மீண்டும் அதிமுக அங்கிருந்து தற்போது திமுக என பல கட்சிகளில் பயணப்பட்டுள்ளார். திராவிட கொள்கையுடைய திமுகவில் ஒரு RSS காரர் எப்படி என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். உங்கள் கருத்து?
தலைமை பண்பு இல்லாதவர் EPS என OPS குற்றம்சாட்டிய நிலையில் அதற்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். இரட்டை இலையை எதிர்த்து வழக்கு தொடர்ந்த OPS, EPS-ஐ விமர்சிக்க தகுதியற்றவர் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், EPS ஆளுமை பண்போடு செயல்படுவதாக பாராட்டிய அவர், தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் திமுக அடக்குமுறையை கையாண்டுள்ளதாகவும் பேட்டியில் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 6 மாதங்களில் 6 போர்களை, தான் நிறுத்தியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் மோதலின் போது 6 -7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், தான் தலையிடவில்லை என்றால் அது அணுஆயுத போராக வெடித்திருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா காரணம் அல்ல என இந்தியா மறுத்தாலும், பேசும் இடங்களிலெல்லாம் தானே போரை நிறுத்தியதாக டிரம்ப் தம்பட்டம் அடித்து வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் PM மோடி, சுதந்திர தினத்தில் கொடியேற்றும் போது, அவரின் தலைப்பாகை தனி கவனம் பெறுகிறது. ராஜஸ்தானி தலைப்பாகை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள அவர், அதன் நிறத்தை மட்டும் ஒவ்வொரு ஆண்டும் மாற்றுகிறார். 5 மீட்டர் துணியில் தயாரிக்கப்படும் இந்த தலைப்பாகை சுயமரியாதையின் அடையாளமாக கருதப்படுகிறது. 2014- 2025 வரை PM மோடி அணிந்த தலைப்பாகைகளை மேலே அடுத்தடுத்த படங்களில் கொடுத்துள்ளோம்.
வைரமுத்து ஒரு ‘Me too’ குற்றவாளி, அவர் மீது பல பெண்கள் புகார் அளித்துள்ளதாக H.ராஜா கடுமையாக சாடியுள்ளார். திமுக ஆட்சி என்பதால் வைரமுத்து இன்னும் கைது செய்யப்பட்டவில்லை என்றும் விமர்சித்துள்ளார். ராமரை அவமரியாதையாக பேசிய வைரமுத்து ஒரு மனநோயாளி எனவும் அவரை ஒருமையில் சாடியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் <<17369941>>வைரமுத்து ராமரை இழிவுபடுத்தியதாக <<>>ஏற்கெனவே போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பஹல்காமில் மதத்தின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு இந்தியா பதிலடி கொடுத்து அவர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளதாக சுதந்திர தின உரையில் PM மோடி குறிப்பிட்டுள்ளார். செங்கோட்டையில் ஆவேசமாக பேசிய அவர், பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்கள் நம்மிடம் எடுபடாது என்றார். சிந்து நதி இந்திய விவசாயிகளுக்கு சொந்தமானது எனவும் அதனை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம், ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓடாது என்றார்.
◆சின்சினாட்டி ஓபன்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சின்னர் அரையிறுதிக்கு முன்னேறினார்.
◆2-வது T20-யில் ஆஸி. வீரரின் Ben Dwarshuis-ன் விக்கெட்டை வீழ்த்திய SA வீரர் கார்பின் போஷ், விதியை மீறி கொண்டாடியதால், அவருக்கு ICC ஒரு Demerit பாயிண்ட் கொடுத்துள்ளது.
◆WI-க்கு எதிராக தொடரை இழந்த PAK. அணி வீரர்கள் சொந்த ரெக்கார்டுக்காக விளையாடுவதால் தான் தோல்வி என Ex வீரர் சோயிப் அக்தர் விமர்சனம்.
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு EPS தனது வாழ்த்துகளை தமிழக மக்களுக்கு தெரிவித்துள்ளார். நாடு விடுதலை பெற போராடி தன் இன்னுயிர் நீத்த தியாகச் செம்மல்களை, போற்றி வணங்கி நினைவுகூர்வதாக EPS தெரிவித்துள்ளார். மேலும், குடும்ப ஆட்சி எனும் மன்னராட்சி அகற்றப்பட்டு, முன்னோர்கள் போராடி பெற்ற மக்களாட்சி நிலைத்திட, நல்லாட்சி அமைத்திட உறுதியேற்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று வெளியான ‘கூலி’ திரைப்படம் முதல் நாளில் சுமார் ₹140 கோடி வரை வசூலித்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டில் ₹30 கோடியும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ₹65 கோடியும், வெளிநாடுகளில் ₹75 கோடி வரை வசூலித்திருக்கிறதாம். அடுத்த மூன்று நாள்கள் விடுமுறை என்பதால், வசூல் மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. நீங்க படம் பாத்தாச்சா.. எப்படி இருக்கு?
ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். எல்லையில் நமது இராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்வதை ஒப்பிடும் போது ஒரு போட்டியை தவிர்ப்பது சிறிய காரியம் தான் என்றார். இருநாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளுக்கு முடிவு எட்டும் வரை பாகிஸ்தான் உடனான போட்டிகளை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.