News August 15, 2025

மாவட்டந்தோறும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி

image

தமிழக அரசின் சார்பில் சிறப்பு ஓட்டுநர் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் 2 பயிற்சி மையங்கள், மாவட்ட அளவில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆகியவை தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின உரையில் CM அறிவித்த 9 அறிவிப்புகளில் 8-வது அறிவிப்பாக வந்த இது, மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News August 15, 2025

7 நாள்களில் தங்கம் விலை சவரனுக்கு ₹1,520 குறைந்தது

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 7-வது நாளாக குறைந்துள்ளது. கடந்த 8-ம் தேதி ₹75,760-க்கு விற்பனையான 22 கேரட் தங்கம், அதன் பிறகு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், இன்று 1 கிராம் ₹9,280-க்கும், சவரன் ₹74,240-க்கும் விற்பனையாகிறது. முதல் வாரத்தில் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம், 2-வது வாரத்தில் சற்று சரிந்துள்ளது நடுத்தர மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

News August 15, 2025

சுதர்சன சக்ரா மிஷனில் இந்தியா: PM மோடி

image

கிருஷ்ணரின் சுதர்சன சக்கரத்திலிருந்து உத்வேகம் பெற்று நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை விரிவுபடுத்துதல் & நவீனமயமாக்கலை நோக்கி நாடு நகரும் என PM மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தனது சுதந்திர தின உரையில், 2035-க்குள் உள்நாட்டு கண்டுபிடிப்புகள், தற்சார்பு பொருளாதாரம், வலுவான பாதுகாப்பு கட்டமைப்பு ஆகியவற்றை நோக்கி சுதர்சன சக்ரா மிஷனில் நாடு இயங்க இளைஞர்கள் உறுதிபூணுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 15, 2025

மலைபோல் குவிந்த வாழ்த்துகளுக்கு ரஜினி நன்றி

image

நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டு கால திரைப்பயணத்தை பறைசாற்றி, திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த CM ஸ்டாலின், EPS, கமல், மோகன்லால், இளையராஜா உள்ளிட்ட அனைவருக்கும் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல் அனைவருக்கும் 79-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News August 15, 2025

முடிவுக்கு வந்த தூய்மை பணியாளர்களின் போராட்டம்!

image

சென்னையில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்ததாக அரசு தெரிவித்துள்ளது. <<17403280>>காலை உணவு, பணியின்போது மரணித்தால் ₹10 லட்சம் காப்பீடு<<>>, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அரசின் 6 அறிவிப்புகளுக்கு போராட்ட குழுவினர் CM ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பணி நிரந்தரம் வேண்டும், தனியார்மயமாக்கல் வேண்டாம் என கடந்த 2 வாரங்களாக தூய்மை பணியாளர்கள் நடத்திய போராட்டம் பேசுபொருளானது கவனிக்கத்தக்கது.

News August 15, 2025

பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

image

✪ரத்தமும் <<17409691>>தண்ணீரும் <<>>ஒன்றாக ஓடாது: சுதந்திர தின விழாவில் PM மோடி ஆவேசம்
✪சென்னை <<17410130>>கோட்டையில் <<>>கொடியேற்றிய CM ஸ்டாலின்
✪கொட்டும் மழையில் <<17411614>>தேசியக் <<>>கொடிக்கு மரியாதை செலுத்திய ராகுல்
✪தொடர்ந்து <<17411085>>சரியும்<<>> தங்கம்: சவரனுக்கு ₹80 குறைவு
✪ஆசியக் கோப்பை: <<17409302>>PAK <<>>மேட்ச்சை புறக்கணிக்க ஹர்பஜன் வலியுறுத்தல்
✪ அரங்கம் அதிரட்டுமே.. முதல் நாளில் ₹140 கோடி வசூலித்த ‘கூலி’

News August 15, 2025

இவையும் இந்திய தேசத்தின் கொடிகள் தான்!

image

இன்று நம் மனதில் ஆழமாக பதிந்திருக்கும் இந்திய தேசிய மூவர்ணக் கொடிக்கு முன்பு, இந்திய நாட்டை அடையாளப்படுத்த பல கொடிகள் உபயோகப்படுத்தப்பட்டன. தற்போது உள்ள கொடி குறித்து அறிய <<17410370>>இங்கே <<>>கிளிக் செய்யவும். பிரிட்டிஷ் அரசின் கீழ் இருந்த ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு 1880 முதல் 6 வகையான கொடிகள் பயன்படுத்தப்பட்டன. இவற்றின் வண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், இலக்கு சுதந்திரமாகவே இருந்தது.

News August 15, 2025

தமிழகத்தின் குரல்: முதல்வர்களுக்கு கிட்டிய உரிமை

image

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட PM சுதந்திர தினத்தில் கொடியேற்றும்போது, அதே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட CM ஏன் கொடியேற்றக் கூடாது என்ற கேள்வியை எழுப்பினார் அன்றைய CM கருணாநிதி. தொடர்ந்து, அப்போதைய PM இந்திரா காந்திக்கு பலமுறை கடிதங்கள், நேரில் வலியுறுத்தல், சட்டப்பேரவையில் தீர்மானம் என அழுத்தம் கொடுத்தார். பின்பு, 1974-ல் முதல்வர்களுக்கு கொடியேற்றும் உரிமையை இந்திரா காந்தி வழங்கினார்.

News August 15, 2025

தலைமை மீது அப்செட்டில் MP தங்க தமிழ்செல்வன்!

image

திமுக தலைமை மீது MP தங்க தமிழ்செல்வன் அதிருப்தியில் இருக்கிறார். <<17279741>>அரசு விழா மேடையில் தன்னை அவமதித்த<<>> ஆண்டிபட்டி MLA மகாராஜனுக்கு எதிராக அவர் தலைமையிடம் முறையிட்டுள்ளார். ஆனால், MLA மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மா.செ.,வாக இருந்தும் தனக்கு மதிப்பில்லை என நிர்வாகிகள் சிலரிடம் புலம்பியுள்ளாராம். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த மோதல் கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News August 15, 2025

ஏன் ரோஹித் வெற்றிகரமான கேப்டன்?

image

கிரிக்கெட்டில் ரோஹித்தின் கேப்டன்சிக்கு தனித்தன்மை உண்டு. இந்நிலையில், ஏன் ரோஹித் சர்மா ஒரு வெற்றிகரமான கேப்டனாக ஜொலிக்கிறார் என்று புவனேஷ்வர் குமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ரோஹித் ஒரு முதிர்ச்சியான கேப்டன் என்றார். ஒவ்வொரு வீரர்களின் பலத்தையும் புரிந்துகொண்டு, அவர்களை எவ்வாறு பயன்படுத்துவது என்று அவருக்கு நன்றாகத் தெரியும் எனக் குறிப்பிட்டார். ரோஹித் கேப்டன்சியில் மறக்க முடியாத மொமண்ட் எது?

error: Content is protected !!