India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அமெரிக்க நாடான பெலிஸில் இருந்து சிறிய ரக விமானத்தை கத்திமுனையில் கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோரோஷல் நகரில் இருந்து சுற்றுலா தலமான பெட்ரோவுக்கு 14 பயணிகள், 2 விமானிகளுடன் அந்த விமானம் புறப்பட்டது. நடுவானில் கத்திமுனையில் ஒருவர் விமானத்தை கடத்த முயன்றபோது, பயணி ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொன்றார். கொல்லப்பட்டவர் அமெரிக்கர் என தெரியவந்தது.
தங்கத்தின் விலை ஆண்டு இறுதிக்குள் சவரன் ஒரு லட்சம் ரூபாயை எட்டி விடும் அளவுக்கு தினசரி உயர்ந்து வருகிறது. இதனால் சாமான்ய மக்களுக்கு இந்த மஞ்சள் உலோகம் எட்டாக் கனியாகி வருகிறது. எனினும், தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும் ஆசிய நாடுகளில் இந்தியா 2-வது இடத்தை பிடித்திருக்கிறது. மொத்தமாக இந்தியாவிடம் 854 மெட்ரிக் டன் அளவுக்கு தங்கம் இருக்கிறது. 2,263 மெட்ரிக் டன்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.
நடிகர் ஸ்ரீ நிலையை பலராலும் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. அவர் போதைக்கு அடிமையாகி விட்டார், எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை என்றெல்லாம் கருத்துகள் பரவி வருகிறது. இந்த நிலையில்தான் அவர் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை இயக்குநர் லோகேஷ் வெளியிட்டுள்ளார். அதில், அவர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், தவறான தகவல் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
IPL-ல் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதியின்படி, பந்து பேட்டில் படுவதற்கு முன், கீப்பரின் Gloves ஸ்டம்புக்கு முன்னால் இருந்தால், அது ‘No-ball’. இந்த விதியின் படி, நேற்று MI-யின் ரிக்கெல்டன் கேட்ச் கொடுத்து அவுட்டான போதும், ‘No-ball’ பெற்று தப்பித்தார். SRH-ன் கிளாசனின் Gloves ஸ்டம்புக்கு முன்னால் இருந்தது. இது நியாயமானது கிடையாது என பலரும் விமர்சிக்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலிய பிரதமர் மெலோனியை புகழ்ந்து தள்ளியது உலக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. வரி விதிப்புக்குப் பின் அமெரிக்கா சென்ற மெலோனி டிரம்ப்பை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், மெலோனியை தனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியதுடன், இத்தாலியின் சிறந்த பிரதமர் என அடுக்கடுக்காக பாராட்டினார்.
தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்று (ஏப்.18) கிராமுக்கு₹25 உயர்ந்ததால் 1 கிராம் ₹8,945-க்கும், சவரன் ₹71,560-க்கும் விற்பனையாகிறது. கடந்த 1-ம் தேதி ஒரு கிராம் ₹8,510-க்கு விற்பனையான நிலையில், 18 நாள்களில் கிராமுக்கு ₹435 அதிகரித்துள்ளது. இது வரும் நாள்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இமயமலை மானசரோவர் யாத்திரை செல்லும் 500 பக்தர்களுக்கு அரசு வழங்கும் மானியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை வழங்கப்பட்டு வந்த ₹50,000 மானியம் இனி ₹1 லட்சமாக உயர்த்தப்படும் என பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். அதே போல், நேபாளம், முக்திநாத் ஆன்மிக பயணத்திற்கான அரசு மானியம் ₹20,000–த்தில் இருந்து ₹30,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப்.18) சவரனுக்கு ₹200 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் ஒரு கிராம் ₹8,945-க்கும், சவரன் ₹71,560-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹110-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,10,000-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் நகைப் பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க..
இந்த போட்டோ உங்களை உலுக்காமல் இருக்காது. இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்த காசா சிறுவனின் போட்டோ தான் World Press Photo of the Year 2025 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனிய புகைப்படக் கலைஞர் சமர் அபு எலுஃப் எடுத்த போட்டோவில், 2 கைகளையும் இழந்து, முகத்தில் ‘எப்போது இந்த கொடுமை தீருமோ’ என நீங்காத சோகத்துடன் சிறுவன் அமர்ந்திருக்கிறான். உலகின் எதிர்காலத்தை போர்கள் இருட்டில் ஆழ்த்தி விடுகின்றன.
ரோஹித் ஓய்வு பெறப்போகும் நேரத்தில், ரசிகர்களுக்கு மறக்கமுடியாத தருணங்களை கொடுக்க வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார். IPL 2025-ல் ரோஹித்தின் பெர்ஃபாமன்ஸ் சீரானதாக இல்லை எனவும், அவர் பெரிய இன்னிங்ஸ் ஆட தவறுகிறார் என்றும் சேவாக் கூறினார். நடப்பு IPL தொடரில் இதுவரை ரோஹித் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது வருத்தமான விஷயமே. Retire ஆவதற்கு முன், ரோஹித் மிரட்டலான ஒரு இன்னிங்ஸை ஆடுவாரா?
Sorry, no posts matched your criteria.