News March 14, 2025

நெடுஞ்சாலைத்துறைக்கு ₹20,772 கோடி ஒதுக்கீடு!

image

நெடுஞ்சாலைத் துறைக்கு ₹20,772 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். கோவையில் 12.5 கிமீ நீளத்திற்கு புறவழிச்சாலை அமைக்க ₹348 கோடியும், நெல்லையில் 12.4 கிமீ நீளத்திற்கு அமைக்க ₹225 கோடியும் ஒதுக்கப்படுகிறது. அதே போல் நெடுஞ்சாலைகளை பசுமையாக்க வேம்பு, புளியமரக்கன்றுகள் நடப்படும் என்றும் பட்ஜெட்டில் அவர் தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

விசைத்தறிகளை நவீனப்படுத்த ₹50 கோடி!

image

விசைத்தறிகளை நவீனப்படுத்த ₹50 கோடி ஒதுக்கப்படும். உயர்மதிப்புடைய ஆடைகளை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கைத்தறித் துறைக்கு ₹1,980 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அதேபோல, விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ₹673 கோடி ஒதுக்கப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

தமிழகத்திற்கு வருகிறது மிக அதிவேக ரயில்கள்!

image

தமிழகத்தில் மிக அதிவேக ரயில்கள் இயக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, சென்னை – விழுப்புரம், சென்னை – வேலூர் இடையே மணிக்கு 160 கி.மீ. வேகத்திலான ரயில்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் மூலமாக இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

News March 14, 2025

கால் இறுதியில் லக்சயா சென்…

image

பர்மிங்காமில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் லக்சயா சென் காலிறுதிக்கு முன்னேறினார். 2ஆது சுற்று ஆட்டம் ஒன்றில் அவர் இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லக்சயா சென், 21-13, 21-10 என்ற நேர்செட்டில் கிறிஸ்டியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

News March 14, 2025

ஆழியாறு, வெள்ளிமலையில் புதிய புனல் மின்நிலையங்கள்!

image

தமிழகத்தில் புதிய புனல் மின்நிலையங்கள் அமைக்க பட்ஜெட்டில் ₹11,721 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெள்ளிமலையில் 1,100 மெகாவாட் திறன் கொண்ட புனல் மின்நிலையம் அமைக்கப்படுகிறது. அதேபோல, ஆழியாறு பகுதியிலும் 1,800 மெகாவாட் திறன் கொண்ட புனல் மின்நிலையம் அமைகிறது.

News March 14, 2025

3 மாநகராட்சிகளுக்கு 1,125 மின்சாரப் பேருந்துகள்

image

போக்குவரத்துக்குத் துறைக்கு ₹12,964 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை- 905, கோவை- 75, மதுரை – 100 என மொத்தம் 1,125 மின்சாரப் பேருந்துகள் வாங்கப்படும். 700 டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் (CNG) இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்க ₹70 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறிய அவர், கிண்டியில் ₹50 கோடியில் பன்முக போக்குவரத்து முனையமும் அமைக்கப்படும் என்றார்.

News March 14, 2025

BREAKING: இவர்களுக்கு மாதம் ₹2,000

image

பெற்றோரை இழந்த சுமார் 50 ஆயிரம் குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ₹2,000 வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பங்களுக்கான உதவித்தொகை ₹500ஆக உயர்த்தப்படும் என்றும், 10 மாற்றுத் திறனாளிகளை பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு (ஒவ்வொரு ஊழியருக்கும்) ₹2,000 ஊதிய மானியத் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

9 இடங்களில் சிப்காட்.. 17,500 பேருக்கு வேலைவாய்ப்பு!

image

சிட்கோ மூலம் 9 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் 17,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் – திருமுடிவாக்கம், மதுரை கருத்தபுளியம்பட்டி, விழுப்புரம் – சாரம், கரூர் – நாகம்பள்ளி, தஞ்சை – நடுவூர், திருச்சி – சூரியூர், நெல்லை – நரசிங்கநல்லூர், ராமநாதபுரம் – தனிச்சியம் ஆகிய இடங்களில் இந்த SIPCOT-கள் அமையவுள்ளன.

News March 14, 2025

மதுரை, கடலூரில் காலணி தொழிற்பூங்கா!

image

மதுரை, கடலூர் மாவட்டங்களில் புதிய காலணி தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காக்களை அமைக்க ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் மதுரை, கடலூர் மாவட்ட மக்கள் 20,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 14, 2025

வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி மையத்துக்கு ₹ 1 கோடி!

image

நீலகிரி, கோவை, நெல்லை, மதுரை, பள்ளிக்கரணையில் காணப்படும் வேட்டைப் பறவைகளை பாதுகாக்க, ₹ 1 கோடி நிதியில் ஆய்வு மையம் அமைக்கப்படும். இதன் மூலம் வேட்டைப் பறவைகளை பாதுகாப்பதற்கான திட்டங்கள் தீட்டப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். பல்லுயிர் சமநிலையை பாதுகாக்க தனுஷ்கோடியை புதிய பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!