News October 24, 2025

SPORTS ROUNDUP: சாதனை நாயகியாக மாறும் ஸ்மிருதி

image

*வியன்னா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினர் சின்னர், ஸ்வெரேவ் *புரோ கபடி லீக்: ஜெய்ப்பூரை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது பாட்னா பைரேட்ஸ் *வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ODI தொடரை கைப்பற்றிய வங்கதேசம் *சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த மெக் லானிங் சாதனையை சமன் செய்த ஸ்மிருதி மந்தனா *தெற்காசிய தடகள போட்டி ராஞ்சியில் இன்று தொடக்கம்

News October 24, 2025

கலவர வழக்கு: அமைச்சர் சிவசங்கர் விடுதலை

image

2015-ல் கல்குவாரி உரிமை தொடர்பாக அப்போதைய குன்னம் தொகுதி MLA-வும், இப்போதைய அமைச்சருமான சிவசங்கர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலவரம் ஏற்பட்டு காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக சிவசங்கர் உள்பட 31 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி, சிவசங்கர உட்பட 27 பேரை(4 பேர் இறந்துவிட்டனர்) சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்யப்பட்டனர்.

News October 24, 2025

குல்தீப் ஓரங்கட்டப்பட கம்பீர் காரணமா?

image

3 வடிவிலான கிரிக்கெட்டிலும் விக்கெட் எடுக்கும் திறமை குல்தீப்புக்கு உண்டு. எனினும் ஆல்ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் குல்தீப் அணியில் இருந்தாலும், XI-ல் விளையாடுவது இல்லை. ஆஸி., தொடரில் அக்‌ஷர், வாஷிங்டன் என 2 ஆல்ரவுண்டர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர் ஓரங்கட்டப்பட்டுள்ளார். பேட்டிங்கிற்கு கம்பீர் கொடுக்கும் முக்கியத்துவமே இதற்கு காரணம் என ரசிகர்கள் SM-ல் குற்றம்சாட்டி வருகின்றனர்.

News October 24, 2025

இந்த பழங்கள் சாப்பிட்டால் சளி கிட்டவே நெருங்காது!

image

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே நம்மை முதலில் வாட்டி வதைப்பது சளிதான். இதை தடுக்க சில பழங்களை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சளி அண்டவே அண்டாது. ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, மாதுளை உள்ளிட்டவை சளி உங்களை நெருங்காமல் பார்த்துக்கொள்ளும் என டாக்டர்கள் கூறுகின்றனர். அதேபோல் மழைகாலத்தில் நாம் தவிர்க்கும் ஆரஞ்சு, தர்பூசணி உள்ளிட்டவையும் சளி பிடிக்காமல் தடுக்க உதவுமாம்.

News October 24, 2025

கரூர் விவகாரம்: CBI பதிவு செய்த FIR கோர்ட்டில் தாக்கல்

image

கரூரில் கூட்ட நெரிசலில் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்து அவர்கள் தங்களது விசாரணையை தொடங்கினர். இந்தநிலையில், கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ தரப்பில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். கரூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் அடுத்த கட்ட விசாரணையை வரும் நாட்களில் தீவிரப்படுத்த உள்ளனர்.

News October 24, 2025

வாரன் பஃபெட்டின் பொன்மொழிகள்

image

*பணக்காரர்கள் நேரத்தில் முதலீடு செய்கிறார்கள், ஏழைகள் பணத்தில் முதலீடு செய்கிறார்கள். *தூங்கும் போதும் பணம் சம்பாதிக்கும் ஒரு வழியை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால், நீங்கள் சாகும் வரை வேலை செய்வீர்கள். *நேர்மை மிகவும் விலையுயர்ந்த பரிசு, மலிவான நபர்களிடம் அதை எதிர்பார்க்காதீர்கள். *ஒருபோதும் ஒற்றை வருமானத்தை சார்ந்திருக்காதீர்கள். இரண்டாவது மூலத்தை உருவாக்க முதலீடு செய்யுங்கள்.

News October 24, 2025

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ED சம்மன்

image

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில், கடந்த ஜூன் மாதம் நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர். பின்னர் சென்னை HC இருவருக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது. இந்நிலையில், இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி ஸ்ரீகாந்த் வரும் 28-ம் தேதியும், கிருஷ்ணா 29-ம் தேதியும் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 24, 2025

சிந்திக்க தூண்டும் PHOTOS

image

சில படங்கள் நம் மனதில் தங்கி, இந்த உலகைப் பார்க்கும் விதத்தையே மாற்றுகின்றன. இவை யதார்த்தங்கள் மற்றும் ஞானத்தை பிரதிபலிக்கின்றன. ஒருசில விஷயங்களை, வித்தியாசமாகப் பார்ப்பதன் மூலம் தெளிவு கிடைக்கிறது என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன. சிந்திக்க தூண்டும் சில போட்டோக்களை, மேலோ பகிர்ந்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. பிடித்திருந்தா நண்பர்களுக்கு share பண்ணுங்க.

News October 24, 2025

NATIONAL ROUNDUP: டெல்லியில் செயற்கை மழை

image

*தெலுங்கானா இடைத்தேர்தலில் 130 பேரின் மனு தள்ளுபடி *இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவராக மணீஷ் சர்மா நியமனம் *காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லியில் அக்.29 செயற்கை மழை பொழிய வைக்க திட்டம் *கல்வியின் மூலம் கேரளா வளர்ச்சியடைவதற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பாராட்டு *டெல்லியை தொடர்ந்து ஹரியானா பஞ்சாப்பில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்ததாக தகவல்

News October 24, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 498
▶குறள்:
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
▶பொருள்:சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்.

error: Content is protected !!