India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் தமிழக அரசு சார்பில் நடைபெறவிருக்கும், தொகுதி மறு சீரமைப்புக்கு எதிரான கூட்டத்திற்கு தெலங்கானா & கர்நாடக அரசுகள் சம்மதித்துள்ளன. தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். ஒடிஷாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கும் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். கேரளா, பஞ்சாப் & மேற்கு வங்க அரசுகள் இதுவரை பதிலளிக்கவில்லை.
பிரபல பளுதூக்குதல் வீரர் சதீஷ் சிவலிங்கம், அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். காமன்வெல்த் போட்டிகள் & காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 6 தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்த இவர், அர்ஜுனா விருதையும் பெற்றவர். வேலூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான இவரை, வரும் சட்டமன்றத் தேர்தலில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என தெரிகிறது.
ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிம்புவின் 51வது படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளார் அஸ்வத் மாரிமுத்து. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சிம்பு ரசிகரான தனக்கு தனுஷையும் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார். காதல், ஆக்ஷன், த்ரில்லர் கலந்த கதை ஒன்றை தனுஷிடம் கூறி இருப்பதாகவும் இயக்குநர் அஸ்வத் கூறியுள்ளார். சிம்பு பட இயக்குநருக்கு தனுஷ் க்ரீன் சிக்னல் காட்டுவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்…!
சாம்பியன்ஸ் டிராபி முடிஞ்சுபோச்சு, அடுத்ததா ஐபிஎல் பாக்கலாம்னு ஃபேன்ஸ் ரெடியாகிட்டாங்க. ஆனால், நட்சத்திர ஆட்டக்காரராக திகழும் ஹர்திக் பாண்டியா, அதற்கு ஒருபடி மேலாக டார்கெட் ஃபிக்ஸ் செய்துள்ளார். இந்தியாவுக்காக மேலும் பல ஐசிசி கோப்பைகளை வெல்ல விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். 2026ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை தூக்குவதுதான் தனது அடுத்த இலக்கு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை பனையூரில் விஜய்யின் காரை தவெகவினர் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு மாவட்டச் செயலாளராக ஆர்.கே.மணியை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்த தொண்டர்கள் காரை மறித்து விஜய்யிடம் மனு அளித்தனர். திருவொற்றியூர் பகுதியை தனி மாவட்டமாக பிரித்து அதற்கு செயலாளரை நியமிக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். நடு ரோட்டில் காரை நிறுத்திய விஜய், அவர்களிடம் மனுவைப் பெற்றுக்கொண்டார்.
நாளை தாக்கல் ஆகவிருக்கும் தமிழக அரசு பட்ஜெட் பற்றி இன்று வெளியான இலச்சினையில் ‘₹’ எழுத்துக்கு பதில் ‘ரூ’ பயன்படுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் தமிழக அரசு, 15 அலுவல் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை முதல்வர் உபயோகித்து உள்ளதாகக் கூறியுள்ளது. இது தாய்மொழி தமிழ் மீதான பற்றை பறைசாற்றும் வகையில் இருப்பதாகவும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது அல்ல என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது.
நகத்தின் கலரை வைத்தே ஒருவரின் ஆரோக்கியத்தை சொல்லலாம். வெளிர் நகங்கள்: ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகையாக இருக்கலாம் *நடுவில் வெள்ளை கலர்: கல்லீரல் பிரச்சனையை குறிக்கிறது *கருப்பு கோடுகள்: சரும புற்றுநோயின் அறிகுறி *மஞ்சள் நிறம்: நகத்தில் பூஞ்சை தொற்று *வெள்ளை புள்ளிகள்: நகம் முழுவதும் இருந்தால், துத்தநாகக் குறைபாட்டை குறிக்கிறது. ஆரோக்கியமான நகங்களின் பளபளப்பாக, ஓரங்களில் வெள்ளையாக இருக்கும்.
TN பட்ஜெட் லோகோவை அரசு வெளியிட்டுள்ளது. அதில், ரூபாயின் ₹ சின்னத்திற்கு மாற்றாக, ரூ என்ற எழுத்து இடம்பெற்றுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை, தமிழரால் வடிவமைக்கப்பட்ட சின்னத்தை அரசு மாற்றி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், நாடு முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த சின்னம், முன்னாள் திமுக MLA-ன் மகன் <<15746386>>உதயகுமார்<<>> வடிவமைத்ததுதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹட்சன் நிறுவனம் அதன் ஆரோக்யா பாலின் விலையை உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், நிறை கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ₹76இல் இருந்து ₹80ஆக உயர்த்தப்படுவதாகவும், 400 கிராம் தயிரின் விலை ₹32இல் இருந்து ₹33ஆக உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் பால் விலை உயர்த்தப்பட்ட நிலையில், ஒரே மாதத்தில் மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
ஜார்க்கண்டைச் சேர்ந்த அபிஷேக் ஸ்வார்ன்கர், ஜெர்மனியில் விஞ்ஞானியாக பணியாற்றியவர். இந்தியா திரும்பிய அவர், மொஹாலியில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் திட்ட இயக்குநராக வேலை பார்த்து வந்தார். விஞ்ஞானி அபிஷேக் தான் வசித்து வந்த வீட்டின் முன், பைக்கை நிறுத்தக் கூடாது என அக்கம்பக்கத்தினர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, நடந்த மோதலில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.