India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிய 12 நாள்களில் 42 ஆயிரம் மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு சேர்க்கை தொடங்கிய 10 நாள்களில் 80,000 மாணவர்கள் வரை சேர்க்கப்பட்ட நிலையில், இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை சற்று மந்தமாகவே நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 37,553 பள்ளிகளில் 2025 – 26 கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை கடந்த 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
2026 தேர்தலில் ADMK-BJP கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் EPS செயல்பாடுகள் இருப்பதாக, பலரும் கருத்து கூறி வருகின்றனர். அதற்கு காரணம் EPS-இன் X பதிவுதான். அதில், பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதுதான் 7.5% இட ஒதுக்கீடு, காவிரி மேலாண்மை ஆணையம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் ஆகிய நல்ல திட்டங்களைச் செய்ததாக வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
மாசி மக பெளர்ணமியான இன்று சிவ வழிபாடு அனைவருக்கும் நன்மையை ஏற்படுத்தும். சந்திரனும், சூரியனும் நேருக்கு நேர் சந்திக்கும் நாள் தான் பெளர்ணமியாக கூறப்படுகிறது. இன்றைய தினத்தில் சூரிய, சந்திர வழிபாடும் எடுத்த காரியத்தில் வெற்றியைத் தரும். அதிலும் மாசி மாதத்தில் வரும் இந்த நிறைந்த பெளர்ணமி நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதும் சாலச் சிறந்தது.
மஹாராஷ்டிராவின் தானேவில் ஒரே இரவில் 14 கடைகளில் நடந்த கொள்ளை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதிர்ச்சியடைந்தது கடைகாரர்கள் அல்ல; கொள்ளையர்கள்தான். 14 கடைகளில் 8ல் மட்டுமே கல்லா பெட்டியில் பணம் இருந்துள்ளது. மற்ற கடைகளில் இல்லை. கிடைத்த பணமும் வெறும் ₹27,000 தான். காரணம் அனைத்துமே UPI பரிவர்த்தனை. இதனால் பெரிய இழப்பில் இருந்து தப்பியிருப்பதாக நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் கடைகாரர்கள்.
காசா, உக்ரைன் போர்களில் மத்தியஸ்தராக செயல்பட்ட அமெரிக்க சிறப்பு பிரதிநிதி விட்காஃப் இந்த வாரம் மாஸ்கோ செல்லவுள்ளார். உக்ரைன், தனது பிடிவாதத்தை விட்டு இறங்கியதை அடுத்து, போர் நிறுத்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்திருக்கிறது அமெரிக்கா. ரஷ்யாவுடன் பேசி போரை நிறுத்த, விட்காஃபை மாஸ்கோவுக்கு அனுப்பவுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். புதினும் இதற்கு சம்மதிப்பார் என டிரம்ப் நம்புகிறார்.
காய்கறிகள் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பீட்ரூட்- ₹10 – ₹12, கத்திரிக்காய்- ₹15 – ₹40, கேரட்- ₹15 – ₹40, தேங்காய்- ₹25, தக்காளி- ₹10 – ₹16, உருளைக்கிழங்கு-₹15 – ₹20, இஞ்சி-₹40, முருங்கைக்காய்- ₹30க்கும் விற்பனையாகிறது. கடந்த 2 நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருவதால் காய்கறிகள் விலை உயரும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியதால் கவலை அடைந்துள்ளனர்.
‘குட் பேட் அக்லி’ படத்தில் நிறைய சர்ப்ரைஸை அடுக்கி வைத்திருக்கிறாராம் ஆதிக். அதில் ஒரு தகவல் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக். படத்தில் அஜித்துடன் சிம்பு ஒரு சின்ன கேமியோ ரோலில் நடித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. ஃபேன் பாய் சம்பவமாக ஆதிக் எடுத்து வரும் படத்தில், அடுத்தடுத்த ஆனந்த வெள்ளத்தில் ரசிகர்களை மொத்தமாக ஆதிக் மூழ்கடித்துவிடுவார் போலயே!
மூடிஸ் ரேட்டிங்ஸ் நிறுவனம், கடந்த நிதியாண்டில் 6.3% இருந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த நிதியாண்டில் 6.5%ஆக அதிகரிக்கும் என கணித்துள்ளது. குறிப்பாக அரசின் மூலதன செலவு, நடுத்தர வருமானம் பெறும் மக்களுக்கான வரி விலக்கு, நுகர்வை ஊக்குவித்தல் மூலம் இவை சாத்தியம் எனக் கூறியுள்ளது. உலகளவில் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சி அதிவேகமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
ஓம் விருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருஹ் ப்ரசோதயாத்
பொருள்:
இடப்பக்கத்தில் கொடியை வைத்திருக்கும் குரு பகவானே, எப்போதும் உங்கள் அருட்கரங்களால் அருள்மழை பொழியும் ப்ரகஸ்பதியே, என் வாழ்வில் உள்ள தீமைகளை அகற்றி நன்மைகளை அளித்திட வேண்டுகிறேன்.
பள்ளி மாணவர்கள் போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் OBC, EBC & DNT பிரிவினருக்கு பிரதம மந்திரி (PM YASASVI) கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 10ஆம் வகுப்பிற்கு ₹75,000, +2க்கு ₹1.25 லட்சமும் வழங்கப்படும். இதற்கு, <
Sorry, no posts matched your criteria.