India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு திரட்டும் நோக்கில் திமுக பிரதிநிதிகள் குழு, ஒடிசா Ex CM நவீன்பட்நாயக், ஆந்திர Ex CM ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது. அதன் தொடர்ச்சியாக இன்று தெலங்கானா CM ரேவந்த் ரெட்டிக்கும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.
மனித தோலுக்கு ஒத்த பண்புகளை கொண்ட செயற்கைத்தோலை ஃபின்லாந்தின் ஆல்டோ பல்கலை., விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹைட்ரோ ஜெல் என அழைக்கப்படும் இந்த பொருள், உடலில் ஏற்படும் காயத்தை 4 மணி நேரத்தில் 90% அளவுக்கு குணப்படுத்திவிடுமாம். அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் முழுமையாக காயம் ஆறிவிடுமாம். இந்த புதிய கண்டுபிடிப்பு செயற்கைத்தோல் தொழில்நுட்பத்திற்கு புத்துயிர் கொடுத்திருக்கிறது.
இன்ஸ்டா மோகம் எவ்வளவு ஆபத்தில் முடியும் என்பதற்கு மற்றொரு உதாரணமாக அமைந்துள்ளது இச்சம்பவம். கேரளாவில் இன்ஸ்டாவில் பிரபலமாக நினைத்த இளம்பெண் ஒருவர், ஹபீஸ் சஜீவ் என்ற இன்ஸ்டா பிரபலத்துடன் சேர்ந்து பல வீடியோக்கள் செய்துள்ளார். பெண்ணுடன் வீடியோ எடுக்க அவரது வீட்டுப் பக்கத்தில் குடிபெயர்ந்த ஹபீஸ், அவரை பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது. பெண் அளித்த புகாரின் பேரில் ஹபீஸ் சஜீவை போலீசார் கைது செய்துள்ளனர்.
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறப்படும் கல்யாணத்தை, இதற்கெல்லாமா நிறுத்துவாங்க எனத் தோன்றுகிறது. தனது வருங்கால கணவர் தன்னிடம் சொல்லாமல், அவரின் தாயுடன் சேர்ந்து வீடு வாங்கியதால், அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் கல்யாணத்தை நிறுத்தி விட்டார். ‘கனவு இல்லத்தை நாங்கள் இருவரும் சேர்ந்து வாங்குவோம் என எதிர்பார்த்தேன், அவரின் தாயுடன் எப்படி நான் வீட்டை பகிர்வது என்ற கேள்வியை அப்பெண் முன்வைக்கிறார்.
மகாகும்பமேளாவில் ₹30 கோடி வரையில் சம்பாதித்த பிண்டு மஹ்ரா என்னும் படகோட்டியின் அதிர்ஷ்டமே, துரதிர்ஷ்டமாக மாறியுள்ளது. அவரை ₹12.8 கோடி வரி கட்டும் படி, IT துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது சரிதானா என்று நெட்டிசன்கள் கேட்கின்றனர். எந்தவித மோசடியும் அவர் செய்யவில்லை, கிடைத்த வாய்ப்பைப் சரியாக பயன்படுத்தினார். அதற்கு இப்படியா என வினவுகின்றனர். இந்த வரி விதிப்பு சரிதானா?
குக்கிராமங்களில் கூட இணைய சேவையை வழங்க ஏர்டெலும், ஜியோவும் மஸ்கின் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் சேவை ஒப்பந்தத்தை பெற்றுள்ளன. பக்கத்து நாடான பூட்டானில் ஸ்டார்லிங்கின் இணைய சேவை மாதம் ₹3,000க்கு கிடைக்கிறது. இந்தியாவில் ₹4,200க்கு கிடைக்கலாம். ஆனால், ஸ்டார்லிங்கை விட குறைவான விலையிலும், அதிவேகத்திலும் இங்குள்ள பைபர் பிராட்பேண்டிலேயே இணைய சேவை கிடைக்கிறது. ஸ்டார்லிங்க் மின்னுமா? உங்கள் கருத்து என்ன?
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹440 உயர்ந்து சவரன் ₹65,000-ஐ நெருங்கியுள்ளது. கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இந்த வாரம் ஏறுமுக வாரம் என்பதுபோல், தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாகக் கடந்த 2 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹800 உயர்ந்துள்ளது. அதேபோல் வெள்ளி விலையும் கடந்த 2 நாட்களில் கிராமுக்கு ₹2 உயர்ந்து ₹110க்கு விற்பனையாகிறது.
சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வரும் திட்டம் மீண்டும் தாமதமாகியுள்ளது. 9 மாதங்களுக்கு மேலாக ISSல் சிக்கியிருக்கும் சுனிதாவையும், வில்மோரையும் பூமிக்கு அழைத்து வர ஃபால்கன் 9 ராக்கெட்டை இன்று ஏவுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் ஹைட்ராலிக் சிஸ்டத்தில் கோளாறு ஏற்பட்டதால் விண்ணில் பாய்வது நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எல்லாம் சரியாக நடந்தால் வரும் 19 ஆம் தேதி சுனிதா பூமிக்கு திரும்புவார்.
ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து, ₹65 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹440 உயர்ந்து ₹64,960க்கும், கிராமுக்கு ₹55 உயர்ந்து ₹8,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹110க்கும் விற்பனையாகிறது.
இன்ஸ்டாவில் 17 மில்லியன் ஃபாலோவர்ஸை பெற்ற முதல் IPL அணி எனும் பெருமையை CSK பெற்றுள்ளது. இந்த க்ரேஸுக்கு முக்கிய காரணம், தோனி என்ற சகாப்தம் அணியில் இருப்பதுதான். அவரை, தொடர்ந்து விளையாட வைக்கவே இந்த ஆண்டின் IPL விதிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் சென்னை அணியின் மவுசு கூடுகிறதே தவிர, கொஞ்சமும் குறையவில்லை. வரும் 23 ஆம் தேதி CSK தனது முதல் போட்டியில் MI அணியை எதிர்கொள்கிறது.
Sorry, no posts matched your criteria.