India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை அருகே இந்தி டியூசனுக்கு சென்ற நபர், டீச்சருடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றியதால் கைது செய்யப்பட்டுள்ளார். தும்பாக்கத்தை சேர்ந்த யோகேஸ்வரன் (33), 39 வயதான டீச்சரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவருடன் தனிமையிலிருந்துள்ளார். 6 வயது மூத்தவர் எனக் கூறி டீச்சரை விட்டுவிட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்யத் திட்டமிட்டதால், டீச்சர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்ததால் யோகேஸ்வரன் கைதாகியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை முதல் முறையாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8%ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தனிநபர் ஆண்டு வருமானம் ₹2.78 லட்சமாக அதிகரித்துள்ளது; இது தேசிய சராசரியைவிட 1.64 மடங்கு அதிகம் என்றும், சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பட்ஜெட் அமையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு <<15744608>>இந்தியில் <<>>மட்டும் பதிலளிப்பதற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுவும் ஒரு நவீன இந்தித் திணிப்பு தான். இதை அனுமதிக்க முடியாது. இதற்கு எரிவாயு நிறுவனங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் இந்தித் திணிப்பைக் கைவிட்டு, தமிழில் வாடிக்கையாளர் சேவை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
வந்தவாசி தொகுதி முன்னாள் எம்எல்ஏ குணசீலன் உடல்நலக்குறைவால் காலமானார். வந்தவாசி திமுக கோட்டையாக இருந்தது. அந்த கோட்டையை 2011இல் உடைத்து, அதிமுக சார்பில் போட்டியிட்டு குணசீலன் அபார வெற்றி பெற்றார். அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த அவர், மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். மக்களின் அன்பை பெற்ற அவரது மறைவிற்கு இபிஎஸ் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
வாங்கிய கடனுக்காக இளம்பெண் ஒருவர், கொலை செய்யப்பட்டுள்ளார். டோக்கியோவில் ஐரி (22), லைவ் ஸ்ட்ரீமிங்கில் இருந்தபோது, கடன் கொடுத்த டக்கனோ (42), அவரை கத்தியால் குத்தி இருக்கிறார். ‘ஹெல்ப்’ என ஐரியின் அலறல் சத்தம் மட்டுமே கடைசியாக கேட்டுள்ளது. அத்துடன் அவரது உயிர் பிரிந்து விட்டது. இப்போது, கடனுக்காக கொலை செய்த டக்கனோவால் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியுமா? பணம் தான் திரும்ப கிடைக்குமா?
TNல் 1967ல் ஆட்சியைப் பிடித்த திராவிட சித்தாந்தம் இன்று ஆலமரமாக பரவியிருக்கிறது. புதிதாக எந்த கட்சி உதயமானாலும், திராவிடம் என்ற கருப்பொருள் நிச்சயம் இருக்கும். அதற்கு விஜய்யும் விதிவிலக்கல்ல. ஆனால், மாற்றுக் கருத்தியல் கட்சியான பாஜக, அந்த கட்டமைப்பை உடைக்கும் அரசியலை தொடங்கியிருக்கிறது. பெரியாரை வைத்தே திமுகவை மடக்க, தமிழை கையில் எடுத்திருக்கிறது பாஜக என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து (2/2)
இண்டேன், பாரத் கேஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் சமையல் எரிவாயு விற்பனை செய்து வருகின்றன. இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கான இலவச தொலைபேசி அழைப்பில் (1800 2333 555) தொடர்பு கொண்டு, வாடிக்கையாளர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து புகார் அளித்தால், இந்தியில் பதிலளிக்கப்படுகிறதாம். இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள், உடனே தமிழில் சேவை வழங்க வலியுறுத்தியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் தங்கை திருமணத்தின் போது, எடுக்கப்பட்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சாக்ஷி பண்டிற்கு லண்டன் தொழிலதிபர் அங்கித் சவுத்ரி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. டேராடூனில் ஒரு சொகுசு ஹோட்டலில் இத்திருமணம் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு தோனி, ரெய்னா, பண்ட் ஆகியோர் டான்ஸ் ஆடிய வீடியோ தான் நேற்று இணையத்தில் வைரலானது.
அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் படத்திற்கு அட்லீ பெரிய பட்ஜெட்டை நீட்ட, சன் பிக்சர்ஸ் ஒதுங்கி விட்டதாம். அடுத்ததாக இப்படத்தை அல்லு அர்ஜுன், தில் ராஜுவிடம் எடுத்து செல்ல அட்லீ ₹100 கோடி சம்பளம் கேட்டாராம். ஏற்கனவே, அட்லீயின் குருவால் சுமார் ₹150 கோடி வரை இழந்த தில் ராஜூ, எப்படி மீண்டும் இவ்வளவு பெரிய பணத்தை கொடுப்பது என யோசனையில் இருக்கிறாராம். சம்பளமே ₹100 கோடினா… பட்ஜெட் எவ்வளவு இருக்கும்?
மகளிர் உரிமைத்தொகை குறித்து பல்வேறு விவாதங்கள் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளன. அதற்கு காரணம் நாளை தாக்கலாகும் TN Budget. புதுவையில் நேற்றைய பட்ஜெட்டின் போது இந்த நிதி ₹1,000லிருந்து ₹2,500 ஆக உயர்த்தப்பட்டது. கர்நாடகா, மகாராஷ்டிராவில் தலா ₹1,500, பஞ்சாபில் ₹1,200 வழங்கப்படும் நிலையில், இத்திட்டத்திற்கு வித்திட்ட தமிழகத்திலும் ₹2,500ஆக உயர்த்த வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது.உங்கள் கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.