News March 13, 2025

பட்ஜெட் லோகோவில் ‘₹’ இல்லை- அண்ணாமலை கண்டனம்

image

TN பட்ஜெட் லோகோவை அரசு வெளியிட்டுள்ளது. அதில், ரூபாயின் ₹ சின்னத்திற்கு மாற்றாக, ரூ என்ற எழுத்து இடம்பெற்றுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை, தமிழரால் வடிவமைக்கப்பட்ட சின்னத்தை அரசு மாற்றி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், நாடு முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த சின்னம், முன்னாள் திமுக MLA-ன் மகன் <<15746386>>உதயகுமார்<<>> வடிவமைத்ததுதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 13, 2025

ஒரு லிட்டர் பால் விலை ₹80

image

ஹட்சன் நிறுவனம் அதன் ஆரோக்யா பாலின் விலையை உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், நிறை கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ₹76இல் இருந்து ₹80ஆக உயர்த்தப்படுவதாகவும், 400 கிராம் தயிரின் விலை ₹32இல் இருந்து ₹33ஆக உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் பால் விலை உயர்த்தப்பட்ட நிலையில், ஒரே மாதத்தில் மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

News March 13, 2025

பார்க்கிங் தகராறு – பறிபோனது விஞ்ஞானியின் உயிர்

image

ஜார்க்கண்டைச் சேர்ந்த அபிஷேக் ஸ்வார்ன்கர், ஜெர்மனியில் விஞ்ஞானியாக பணியாற்றியவர். இந்தியா திரும்பிய அவர், மொஹாலியில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் திட்ட இயக்குநராக வேலை பார்த்து வந்தார். விஞ்ஞானி அபிஷேக் தான் வசித்து வந்த வீட்டின் முன், பைக்கை நிறுத்தக் கூடாது என அக்கம்பக்கத்தினர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, நடந்த மோதலில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.

News March 13, 2025

இந்த ‘₹’ குறியீட்டின் கதை தெரியுமா..?

image

தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ள இந்திய ரூபாயின் குறியீட்டை திருச்சியை சேர்ந்த உதயகுமார் என்பவர் தான் வடிவமைத்தார். தேவநாகரி எழுத்து ‘र’ (ra) என்பதையும், நேர்கோடு இல்லாத ‘R’ ஆகியவற்றை சேர்த்து இது உருவாக்கப்பட்டது. தேவநாகரி சமஸ்கிருதம், ஹிந்தி, மராத்தி போன்ற இந்திய மொழிகளை எழுதப் பயன்படுத்தப்படும் எழுத்து முறை. இந்த குறியீடு ஜூலை 15, 2010ல் இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

News March 13, 2025

சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த திமுக அரசு: இபிஎஸ்

image

அவிநாசி தம்பதியினர் படுகொலையை சுட்டிக்காட்டி, ‘வருமுன் காப்பதும் இல்லை – பட்டும் திருந்துவதும் இல்லை’ என்ற நிலையில் சட்டம் ஒழுங்கை தறிகெட்ட நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதாக இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தனிமனித பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது திமுக அரசு என சாடிய அவர், சர்வாதிகாரி என்று தன்னை தானே சொல்லி கொண்டால் மட்டுமே சட்டம் ஒழுங்கை சீர் செய்துவிட முடியாது என்று ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.

News March 13, 2025

தொல்லியல் அறிஞர் மா.சந்திரமூர்த்தி மறைவு

image

தமிழக தொல்லியல் துறை முன்னாள் இணை இயக்குநரும், தொல்லியல் அறிஞருமான மா.சந்திரமூர்த்தி (80) உடல் அடக்கம் செய்யப்பட்டது. நாகையை சேர்ந்த இவர், கொற்கை, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வுகள் மூலம் பல தனித்துவ அடையாளங்களைக் கண்டறிந்துள்ளார். நேற்று முன்தினம் மூச்சுத் திணறல் காரணமாக மறைந்த நிலையில், போரூரில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

News March 13, 2025

‘தமிழ் வாழ்க’.. திருமணத்தில் கோஷமிட்ட புதுமண ஜோடி!

image

அரசு மட்டுமல்ல, தமிழக மக்கள் மத்தியிலும் ஆங்காங்கே மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனநிலையை காண முடிகிறது. சென்னை பூந்தமல்லியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றின் போது மணமக்கள் கையில் ‘தமிழ் வாழ்க’ என்ற பதாகைகளை ஏந்தி, மும்மொழிக்கு எதிராக முழக்கமிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலரின் கவனத்தை பெற்றுள்ளது. உங்கள் கருத்து என்ன?

News March 13, 2025

பட்ஜெட்டில் ₹-க்கு பதில் ‘ரூ’

image

2025-26 பட்ஜெட் நாளை தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதற்கான இலச்சினையை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் இந்திய ரூபாய் குறியீட்டிற்கு (₹), பதிலாக ரூ இலச்சினை பயன்படுத்தியுள்ளார். கடந்த பட்ஜெட்டில் ₹ பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது மொழி சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், ₹ என்ற குறியீட்டை தவிர்த்து, தமிழ் எழுத்தான ‘ரூ’ என்பதை முதன்மைப் படுத்தி உள்ளார்.

News March 13, 2025

நாளை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

image

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை(மார்ச் 14) திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 6.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம், தொகுதியில் கள நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News March 13, 2025

சீமானின் உதவியாளர், பாதுகாவலருக்கு ஜாமின்!

image

சீமானின் உதவியாளர் சுபாகர், பாதுகாவலர் அமல்ராஜூக்கு சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. சீமான் வீட்டில் போலீசார் ஒட்டிய சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், இருவர் மீதும் இருவேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மறு உத்தரவு வரும் வரை இருவரும் பூக்கடை காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!