India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் வரி விதித்துள்ளதால், ஐரோப்பிய நாடுகளில் தயார் செய்யப்படும் ஒயின், ஷாம்பெயின் மற்றும் மதுபானங்களுக்கு 200% வரியை டிரம்ப் அறிவித்து அதிரடி காட்டியுள்ளார். அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் நாடுகள், அதிக வரி விதிக்கக் கூடாது என டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த புதிய வரி விதிப்பு ஏப்.1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
பித்தப்பையில் கல் இருந்தால், இரத்த ஓட்டத்தில் பிலிரூபின் (Bilirubin) அதிகரிக்கும். இதன் விளைவாக, அடர் நிறத்தில் சிறுநீர் வெளியேறும். பித்தப்பையிலிருந்து செல்லும் பித்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு, இரத்த ஓட்டத்தில் பித்தம் படியும். இதன் விளைவாக, சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறும். மஞ்சள் காமாலைக்கு வழிவகுக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் உடனே டாக்டரை அணுகுங்கள் மக்களே..!
பவுர்ணமி மற்றும் வார இறுதி நாள்களையொட்டி கூட்ட நெரிசலைத் தவிர்க்க இன்றும், நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக TNSTC அறிவித்துள்ளது. அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 270 பேருந்துகளும், நாளை 275 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. குறிப்பாக இவை திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், நெல்லை, மதுரை, கோவை, சேலம், குமரி, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 – 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கலாக உள்ள நிலையில், ADMK எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அறையில் காலை 8.30 மணிக்கு இக்கூட்டம் நடைபெறவுள்ளது. காலை 9.30 மணிக்கு பட்ஜெட் தாக்கலாகிறது. அதன் பின்னர், மாலை 6.30 மணிக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற இருப்பது கவனிக்கத்தக்கது.
சிவகார்த்திகேயனின் பராசக்தி படப்பிடிப்பில், மலையாள நடிகர் பாசில் ஜோசஃப் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கிவரும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொழும்புவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட பிரபலங்கள் படத்தில் உள்ள நிலையில், பாசிலும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு, TN அரசு மாதம் தலா ₹1,000 வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் இத்தொகை, நாளை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதனிடையே, இன்றைய தமிழக பட்ஜெட்டில் மகளிர் உதவித்தொகை திட்டம் இன்னும் விரிவுபடுத்தப்பட்டு, ₹1,000ல் இருந்து ₹2,500 ஆக உயர்த்தி அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எலியும், பூனையுமாக இருந்த பாமக, தவாக மீண்டும் நெருக்கம் காட்ட ஆரம்பித்துள்ளது. வேல்முருகனை சந்தித்த பாமக நிர்வாகிகள், அக்கட்சியின் நிழல் பட்ஜெட் நகலை வழங்கினர். இதனை X பக்கத்தில் பகிர்ந்துள்ள வேல்முருகன், ‘அய்யா, சின்னய்யாவுக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார். பாமகவிலிருந்து விலகிய பிறகு ராமதாஸ், அன்புமணியை கடுமையாக விமர்சித்து வந்த வேல்முருகனின் இந்த திடீர் மனமாற்றம் அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது.
ஐபிஎல் விதிகளை மீறியதற்காக இங்கிலாந்து வீரர் ஹாரி புருக்குக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. நடப்பாண்டு IPLல சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியால் ₹6.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட அவர், இறுதி நேரத்தில் தன்னால் அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என தெரிவித்தார். இது விதிகளுக்கு புறம்பானது என்பதால் ஹாரி புருக் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.
லடாக்கின் கார்கிலில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. கார்கிலில் அதிகாலை 2.50 மணிக்கு பூமிக்கடியில் 15 கி.மீ ஆழத்தில் மையமாக கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவாகியுள்ளது. இதன் தாக்கம் ஜம்மு – காஷ்மீர், இமாச்சல் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். நிலநடுக்க பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
சபரிமலையில் பங்குனி மாத பூஜைக்காக கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. தொடர்ந்து நாளை முதல் வரும் 19 ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். இம்மாதம் முதல் தரிசனத்தில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, 18ஆம் படியேறியதும் கொடிமரம் வழியாக சென்று நேரடியாக ஐயப்பனை தரிசிக்கலாம். இதன் மூலம் பக்தர்களுக்கு ஐயப்பனை தரிசிப்பதற்கான நேரம் கூடுதலாக கிடைக்கும்.
Sorry, no posts matched your criteria.