India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஃபுட் பால் லெஜண்ட் மெஸ்ஸியின் இந்திய பயணம் உறுதியாகியுள்ளது. வரும் டிச., 12-ல் இந்தியா வரும் அவர் கொல்கத்தா, அகமதாபாத், மும்பை, டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். மேலும், இந்த பயணத்தின் போது சச்சின், தோனி, கோலி, கில், ஷாருக்கான், ரன்வீர் சிங் உள்ளிட்ட பிரபலங்களையும் சந்திக்க உள்ளார். டிச.15-ல் பிரதமரின் இல்லத்தில் வைத்து PM மோடியை சந்திப்பதோடு, அவரது பயணம் நிறைவடைகிறது.
இந்தியாவும் (யானை), சீனாவும் (டிராகன்) இணைந்து பணியாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரண்டும் மிகப்பெரிய வளரும் நாடுகள் எனவும், இருநாட்டு வளர்ச்சிக்கும் இணைந்து பணியாற்றுவது தான் சரியான தேர்வாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. இந்திய பொருள்களுக்கான அமெரிக்க வரிவிதிப்பு, PM மோடியின் சீன பயணங்களுக்கு மத்தியில் அந்நாடு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.
வங்கிக் கணக்கில் இருந்து IMPS டிரான்ஸ்பர் முறையில் பணம் பரிமாற்றம் செய்வதற்கான கட்டணங்களை உயர்த்துவதாக SBI வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, ₹25,000 வரையான தொகைக்கு கட்டணம் இல்லை. ஆனால், ₹25,000 முதல் ₹1,00,000 வரை- ₹2+GST, ₹1,00,000 முதல் ₹2,00,000 வரை- ₹6+GST, ₹2,00,000 முதல் ₹5,00,000 வரை- ₹10+GST கட்டணம் இருக்கும். இந்த புதிய கட்டண விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
இன்று உங்கள் கையில் ₹1 கோடி இருந்தால், 2050-ல் அதன் மதிப்பு ₹29.53 லட்சத்திற்கு சமமாக இருக்கும். இன்று ₹1 கோடிக்கு கிடைக்கும் வீடு, 2050-ல் ₹3.4 கோடியாக இருக்கும். இதற்கு காரணம் பணவீக்கம். பொருட்களின் விலை அதிகரித்து மக்களின் வாங்கும் திறன் குறையும். கடந்த 20-25 ஆண்டுகளில் சராசரி பணவீக்கம் 6%-க்கும் அதிகமாக உள்ள நிலையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு 5% என்று தொடர்ந்தால் கூட மேற்கூறியதுதான் நடக்கும்.
இது திரைப்பட கதையல்ல, 1962 இந்திய- சீன போரில் ஈடுபட்ட நம் வீரர்களின் உண்மைக் கதை. லடாக்கில், 16,000 அடி உயரத்தில் ரேசாங் லா பனிமலையில் 5000 வீரர்களுடன் சீனப்படை முன்னேறியது. அவர்களை வெறும் 120 வீரர்களுடன் எதிர்கொண்டார் மேஜர் சைத்தான் சிங் பாட்டி. அலையலையாய் வந்த சீனர்களை, கடைசிமூச்சு உள்ளவரை எதிர்த்து போரிட்டனர் நம் வீரர்கள். 110 பேர் வீரமரணம் அடைந்தாலும், இறுதியில் லடாக்கை காத்தது வீரவரலாறு!
அப்பா தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள். என்னால் உங்கள் மீது அவதூறு சுமத்தப்பட்டுள்ளது. நான் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன். ஜார்க்கண்ட் பலாமுவில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் மகன் சுஷாந்த்(30) தனது தற்கொலைக்கு முன்பு எழுதிய வரிகளை இவை. மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் மன அழுத்தத்தில் இருந்த அவர், வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
சுதந்திர தின உரையில் RSS-ஐ புகழ்ந்ததன் மூலம், PM மோடி விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்திவிட்டதாக ஐதராபாத் MP ஓவைசி விமர்சித்துள்ளார். விடுதலை போராட்டத்தில் RSS எந்த பங்களிப்பையும் செய்யவில்லை எனவும், ஆங்கிலேயர்களுக்கு RSS சேவகம் செய்ததாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், சீனாவை விட சங் பரிவாரங்களின் வெறுப்பும், பிரித்தாளும் கொள்கையும் தான் நமது மிகப்பெரிய எதிரிகள் என்றும் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் கூலியுடன் களமிறங்கிய ‘வார் – 2’ படம் முதல் நாளில் ₹52.5 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘வார் 2’ அதன் முதல் பாக வசூலைக்(₹53 கோடி) கூட தொடவில்லை. படத்திற்கு கலவையான விமர்சனங்களே வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் குறையும் என கூறப்படுகிறது. அதேவேளையில், ரஜினியின் <<17409522>>‘கூலி’, ₹140 கோடி<<>> வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விவசாயிகள், மீனவர்கள் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது என அமெரிக்க வரிவிதிப்பை PM மோடி எதிர்த்துள்ளார். நான் சுவர் போல் நேராக நிற்பேன், வளைந்து கொடுக்க மாட்டேன் என டிரம்ப்பை அவர் மறைமுகமாக சாடியுள்ளார். மேலும், நமது தேவைகளுக்காக பிற நாடுகளை சார்ந்திருப்பது என்பது அழிவுக்கான சான்று எனவும், தற்சார்பே நமது தேச நலனை காக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் மையம் (District Industries Centre – DIC) உருவாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மேனேஜரை அணுகி தொழில் தொடங்க வங்கிகள் மூலம் மானியத்துடன் கடன் பெறலாம். நாம் தொடங்கும் தொழிலை பொறுத்து ₹10 லட்சம் முதல் அதிகபட்சமாக ₹5 கோடி வரை கடன் பெறலாம். உதாரணமாக, ₹10 லட்சம் கடன் பெற்றால் அதில் மானியமாக ₹3.5 லட்சத்தை அரசே செலுத்தும். SHARE IT
Sorry, no posts matched your criteria.