News October 24, 2025

இவர்தான் அடுத்த தலைமை நீதிபதியா?

image

வரும் நவ.23-ம் தேதியுடன் CJI BR கவாய் 65 வயதை எட்டுவதால், ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், அடுத்த CJI-க்கான தேடலில் மத்திய அரசு இறங்கியுள்ளது. சீனியாரிட்டி அடிப்படையில் தகுதியானவரை பரிந்துரைக்க கோரி BR கவாயிடம் அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய CJI-க்கான ரேஸில் மூத்த நீதிபதி சூர்ய காந்த் முன்னிலையில் உள்ளார். அவரே நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

News October 23, 2025

உலகை ஆளப்போகும் தொழில்துறைகள்

image

உலகம் வேகமாக மாறி வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில், சில தொழில்துறைகள் வளர்ச்சி அடைந்து, உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, நமது வாழ்கை முறையையும் மாற்றி அமைக்கும். அவை என்னென்ன தொழில்துறைகள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. வேறு ஏதேனும் தொழில்துறை உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.

News October 23, 2025

தேவா வீட்டில் சோகம்… நிறைவேறாத ஆசை

image

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷ் (எ) சபேசன் இன்று காலமானார். இந்நிலையில், அவரது நிறைவேறாத ஆசை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அந்த காலத்து கே.வி.மகாதேவன் முதல் அனைத்து மூத்த இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி இருந்தாலும், எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பணியாற்றும் பாக்கியம் தனக்கு கிடைக்கவில்லை என்ற ஏக்கம் உள்ளதாக சபேஷ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளதை பலரும் பகிர்கின்றனர். RIP

News October 23, 2025

பணமழை கொட்டப் போகும் 3 ராசிகள்

image

சுக்கிர பகவான் வரும் நவ.2-ம் தேதி, தனது சொந்த ராசியான துலாமுக்குள் அடியெடுத்து வைப்பதால் பின்வரும் 3 ராசிகளுக்கு அதிக நற்பலன்கள் கிடைக்குமாம்: *துலாம்- தொழில்ரீதியாக முன்னேற்றம் அடையும், திருமண உறவு வலுப்பெறும் *தனுசு- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும், முதலீடுகள் லாபம் தரும் *மகரம்- வேலையில் முன்னேற்றம், பதவி உயர்வுக்கு வாய்ப்பு, வியாபாரம் செழிக்கும், எதிர்பாராத தனவரவு கிடைக்கும்.

News October 23, 2025

பிஹார் தேர்தலின் கிங் மேக்கர் இவர்தானா?

image

பிஹாரில் எதிர்க்கட்சிகளின் DCM வேட்பாளராக VIP கட்சி தலைவர் முகேஷ் சஹானி அறிவிக்கப்பட்டுள்ளார். மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 15 இடங்களில் மட்டுமே இவரது கட்சி போட்டியிடுகிறது. இவர் சார்ந்த நிஷாத் சமூகம் பிஹார் மக்கள் தொகையில் வெறும் 2.5% ஆகும். ஆனால், அனைத்து மாவட்டங்களிலும் இந்த சமுதாய மக்கள் பரவி வாழ்வதால், பிரதான கட்சிகளின் வெற்றி, தோல்விகளை முடிவு செய்யும் முக்கிய சமூகமாக உள்ளது.

News October 23, 2025

இன்னும் 5 வருடத்தில் இவை அனைத்தும் அழிந்துவிடும்!

image

சில விஷயங்கள் நம் வாழ்வை எளிதாக மாற்றி, இந்நாள் வரை பயனளித்து வருகின்றன. ஆனால், டெக்னாலஜி வளர்ச்சியடைய இவை, கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் இவை முற்றிலுமாக அழிந்து விடும் என்றே கூறப்படுகிறது. அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும். வேறு என்ன டெக்னாலஜிலாம் காலப்போக்கில் மறைந்து விடும் என நினைக்கிறீங்க?

News October 23, 2025

உடனே அனைத்து பள்ளிகளிலும்

image

கனமழை காரணமாக ராமநாதபுரத்தில் தொடக்க பள்ளியின் கட்டடம் விரிசல்களுடன் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சியினர் ஒரு வீடியோ வெளியிட்டனர். இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது. விரிசல்களுடன் இருக்கும் பள்ளி கட்டடங்களை போர்க்கால அடிப்படையில் சரி செய்யவும், நோய் தொற்று பரவாமல் இருக்க, பள்ளிகளில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றவும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

News October 23, 2025

வங்கிக் கணக்கு இருக்கிறதா… முக்கிய அறிவிப்பு

image

வங்கி வாடிக்கையாளர்களுக்கு நாமினிகளை (வாரிசுதாரர்கள்) நியமிப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் வரும் நவ.1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, *ஒருவர் தனக்கு நான்கு நாமினிகள் வரை நியமிக்கலாம். *அந்த 4 பேரில் யார் முதன்மை நாமினி, யாருக்கு எவ்வளவு சதவீதம் பங்கு என்பதையும் நிர்ணயிக்கலாம் *டெபாசிட்ஸ், லாக்கர், லாக்கரில் வைக்கும் பொருள்கள் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும்.

News October 23, 2025

லோடு மேன் பேச்சை கேட்டு EPS கூறுகிறார்: உதயநிதி

image

EPS கூறியது போல் செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை என DCM உதயநிதி தெரிவித்துள்ளார். தஞ்சையில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நெல் கொள்முதல் தொடர்பாக <<18072011>>EPS<<>> பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும், லோடு மேன் ஒருவர் கூறிய தகவலை வைத்து நாளொன்றுக்கு 800 மூட்டைகள் நெல் கொள்முதல் என கூறுவதாகவும் விமர்சித்துள்ளார்.

News October 23, 2025

நாளை காலை முதலே இதை நிறுத்துங்க!

image

ஒரு மாதத்திற்கு டீ குடிப்பதை நிறுத்தினால் உடலில் பல நன்மைகள் நடப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, டீ குடிப்பதை நிறுத்தினால், ஆழ்ந்த உறக்கம் கிடைக்குமாம். அதுமட்டுமல்ல, பதற்றம், Dehydration பிரச்னைகள் குறையும். செல்களில் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்கள் குறையும், செரிமான பிரச்னை உள்ளிட்டவைகள் சரியாகுமாம். எனவே, நாளை காலையில் இருந்தே இதை ட்ரை பண்ணி பாருங்க மக்களே!

error: Content is protected !!