India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்கள் வரிப்பணத்தை CM ஸ்டாலின் விளம்பரங்களுக்கு வீணடித்து கொண்டிருப்பதாக அண்ணாமலை சாடியுள்ளார். சாலைகள் அமைக்க, பாலங்கள் கட்ட என ₹78,000 கோடி செலவிட்டுள்ளதாக அரசு கூறுகிறது; ஆனால் பல கிராமங்களில் இன்னும் சாலை வசதிகள் செய்யப்படவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், நான்கரை ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல், ஆட்சி முடியும் நேரத்தில், உங்களுடன் ஸ்டாலின் என்று நாடகமாடுவதாகவும் சாடியுள்ளார்.

‘லோகா’வை தொடர்ந்து Vampire கதைக்களத்துடன் வெளிவந்துள்ள ‘தம்மா’ திரைப்படமும் நல்ல வசூலை குவித்து வருகிறது. பேய், சாமி, சூப்பர்ஹீரோவை தொடர்ந்து இந்திய சினிமா இப்போது Vampire கதைக்களத்திற்குள் புகுந்துள்ளது. ஆனால் இந்தியாவுக்கு தான் இது புதுசு. ஆங்கிலத்தில் பல படங்கள், வெப் சீரிஸ்கள் Vampire-ஐ மையமாக கொண்டு வெளியாகியுள்ளன. அப்படி மிகவும் பிரபலமான படங்கள், சீரிஸ்கள் பற்றி அறிய மேலே ஸ்வைப் பண்ணுங்க.

தமிழக அமைச்சரவை கூட்ட முடிவின்படி, தூய்மைப்பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. காலை, மதியம், இரவு என 3 வேளை தூய்மைப்பணியாளர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் 29,000 பேருக்கு தினசரி உணவு வழங்க ₹186 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்பின், அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

ஆசியான் மாநாட்டில் பங்கேற்கும் அதிபர் டிரம்ப்பை நேரில் சந்திப்பதை தவிர்க்கவே, PM மோடி மாநாட்டிற்கு செல்லவில்லை என்று காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். காஸா உச்சி மாநாட்டையும் டிரம்ப் வருகையாலே மோடி தவிர்த்ததாக குற்றம்சாட்டியுள்ள ஜெய்ராம் ரமேஷ், உலக தலைவர்களுடன் புகைப்படம் எடுத்து, தன்னை விஸ்வகுருவாக பிரகடனப்படுத்தும் வாய்ப்பை மோடி தவற விட்டுள்ளதாக கிண்டலடித்துள்ளார்.

சினிமாவில் ஹாட்ரிக் வெற்றி என்பது அரிதான ஒன்று. அந்த பட்டியலில் இணைந்துள்ளார் நடிகர் பிரதீப் ரங்கநாதன். அவரது நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘டியூட்’ திரைப்படம், உலக அளவில் ₹100 கோடி வசூலை தாண்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கெனவே ‘கோமாளி’ மற்றும் ‘லவ் டுடே’ திரைப்படங்கள் ₹100 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், 3-வது முறையாக தொடர்ந்து ‘டியூட்’ திரைப்படமும் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

தீபாவளி காரணமாகவே PM மோடி ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை என்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். மோடியின் முடிவை மதிப்பதாக கூறிய அவர், PM மோடி காணொலி மூலம் கலந்து கொள்வார் என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, காணொலி மூலம் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ள PM மோடி, ஆசியான் – இந்தியா இடையேயான உறவை வலுப்படுத்த எதிர்நோக்கியுள்ளதாக தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உ.பி.,யின் நொய்டாவில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் பச்சிளம் குழந்தைக்கு கொடுத்த தவறான சிகிச்சையால், கையை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தவறான ஊசி தான் காரணம் என்றும், இதுபற்றி ஹாஸ்பிடலில் கூறியும் கண்டுகொள்ளவில்லை எனவும் பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. இதை விசாரிக்க 3 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது. இம்மாதிரியான மருத்துவ தவறுகளை எப்படி தடுப்பது?

கரூர் சம்பவத்துக்கு, விஜய் தாமதமாக வந்தது, போக்குவரத்து நெரிசல் ஆகியவை காரணமாக சொல்லப்பட்டது. இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க ஜெ., பாணியில் தன்னுடைய பிரசாரத்தை மீண்டும் தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ஹெலிகாப்டரில் பிரசாரம் செய்ய முடிவெடுத்திருக்கிறாராம். இதற்காக ஒரு நிறுவனத்திடம் 4 ஹெலிகாப்டர்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக பனையூர் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

தீபாவளிக்கு வெளியான ‘பைசன்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த அண்ணாமலை, பல காட்சிகளில் தன்னையே பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிந்தது என தெரிவித்துள்ளார். மேலும், தடைகள் அனைத்தையும் கடந்து சாதித்து காட்டிய மணத்தி கணேசன் கதையை மாரி செல்வராஜ் சிறப்பாக காட்டியிருக்கிறார் எனவும், சமூகத்தில் ஒற்றுமை வேண்டும் எனவும் பதிவிட்டிருக்கிறார்.

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப் , PM மோடியை போனில் அழைத்து வாழ்த்து கூறியதோடு, பாக்., போர் குறித்து பேசியதாக தெரிவித்திருந்தார். ஆனால், Call-ல் அப்படி எதுவும் பேசப்படவில்லை என வெளியுறவுத்துறையில் சிலர் கூறுகின்றனர். டிரம்ப் தொடர்ந்து இதுபோன்ற விஷயங்களை செய்வதால் PM மோடி அப்செட் ஆகியிருக்கிறாராம். இதனாலேயே ஆசியன் மாநாட்டில் அவர் நேரடியாக <<18078238>>பங்கேற்கவில்லை<<>> என கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.