India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை உலகம் முழுவதும் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் மொத்தம் 540 கோடி பேர் பார்த்துள்ளனர். குறிப்பாக, பைனலில் இந்தியா, நியூசிலாந்து மோதிய போட்டியை 124.2 கோடி பேர் பார்த்துள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் போட்டியை 60.2 கோடி, இந்தியா, ஆஸி. போட்டியை 66.9 கோடி பேர் பார்த்துள்ளனர். இந்திய விளையாட்டுப் போட்டிகள் லைவில் இதுவொரு புதிய சாதனையாகக் கருதப்படுகிறது.
உ.பி.,யைச் சேர்ந்த சதீஷின் (45) மனைவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பெண் அருகில் இருந்த கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஊழியராக இருந்த தர்மேந்திர மாவி, அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். இதை அப்பெண் கணவனிடம் கூற, அவர் உறவினர்களுடன் சென்று மாவியின் ஆணுறுப்பை கத்தியால் வெட்டியுள்ளார். இது சரியான தண்டனை என்கின்றனர் நெட்டிசன்கள். நீங்க என்ன சொல்றீங்க?
பிரபல மலையாள எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளருமான கே.கே. கொச்சு காலமானார். நீண்ட நாட்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், அவர் உயிரிழந்தார். கே.கே. கொச்சு, கேரள சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். நெருக்கடி நிலையின்போது 16 நாட்கள் சிறையில் இருந்தார். அவர் எழுதிய தலித்தியன், கேரளா ஸ்டோரி, டிஸ்டன்ஸ் ஆப் புத்தா உள்ளிட்ட புத்தகங்கள் முக்கியமானவை ஆகும்.
பிஹாரைச் சேர்ந்த தேவி, கடந்த பிப்.23ல் தனது குடும்பத்துடன் மகா கும்பமேளாவிற்கு சென்றுள்ளார். கும்பமேளா கூட்டநெரிசலில் தொலைந்து போனவர், அங்கிருந்து ரயில் ஏறி ஜார்க்கண்டின் கர்வா மாவட்டத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். அவரை, உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் சோனி தேவி தங்க இடம் கொடுத்து பராமரித்துள்ளார். அவரை போட்டோ எடுத்து சோஷியல் மீடியாவில் போட, தேவியின் மகன் தன் தாயைக் கண்டுபிடித்து அழைத்து சென்றுள்ளார்.
திருப்பதியில் ஸ்பெஷல் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி, நடிகை ரூபினியிடம் ₹2.27 லட்சம் மோசடி செய்துள்ளனர். ரூபினி, வெங்கடாசலபதியின் தீவிர பக்தை என தெரிந்து கொண்ட சரவணன் என்ற நபர் அவரை அணுகியுள்ளார். மேலும், பல பிரபலங்களுக்கு ஸ்பெஷல் தரிசனங்களை ஏற்பாடு செய்ததாக போலியான புகைப்படங்களை காட்டி சரவணன் மோசடி செய்துள்ளார். 1980களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களில் ரூபினி நடித்துள்ளார்.
‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் லீக்காகி வேகமாக பரவிய நிலையில், அது தற்போது டெலீட் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த வீடியோவை பார்த்தவர்கள், ரவி மோகன் வெறித்தனமாக வில்லத்தனம் காட்டுவதாகவும், நிச்சயம் சம்பவம் உறுதி எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர். இலங்கையில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது SK கெரியரில் முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த வங்கிகள் சங்கம் (UFBU) சார்பில், வரும் 24, 25ஆம் தேதிகளில் நாடு தழுவிய ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு நாள்களும் வங்கிகள் செயல்படாது. இந்திய வங்கிகள் அசோசியேஷனுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், UFBU இந்த ஸ்டிரைக்கை அறிவித்துள்ளது. வாரத்திற்கு 5 நாள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளனர்.
PNB வங்கியில் 350 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ஆபீசர்-கிரெடிட், ஆபீசர்-இன்டஸ்ட்ரீ, மேனேஜர்-ஐடி, சீனியர் மேனேஜர்-ஐடி, மேனேஜர் -டேட்டா சயின்டிஸ்ட், மேனேஜர்- சைபர் செக்யூரிட்டி, சீனியர் மேனேஜர்- சைபர் செக்யூரிட்டி ஆகியவை அந்த பணியிடங்கள். இதற்கான விண்ணப்பப்பதிவு <
மதவெறியர்களால் ஹோலி பண்டிகை சிறுபான்மையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் பண்டிகையாக மாறியுள்ளதாக முன்னாள் J&K முதல்வர் மெஹ்பூபா முஃப்தி கவலை தெரிவித்துள்ளார். அதிகாரத்தில் இருப்பவர்களும் இதற்கு துணை போவதாகவும், இந்தியா விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது எனவும் அவர் கூறியுள்ளார். இந்து vs முஸ்லிம் என எதிரெதிராக நிறுத்துவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
IPL 2025இல் விளையாடப் போகும் 10 அணிகளின் கேப்டன்கள் யார்-யார் என பார்க்கலாம். 1) சிஎஸ்கே – ருதுராஜ் கெய்க்வாட் 2) ஆர்சிபி – ரஜத் படிதார் 3) கேகேஆர் – அஜிங்யா ரஹானே 4) எல்எஸ்ஜி – ரிஷப் பன்ட் 5) பஞ்சாப் – ஸ்ரேயாஸ் ஐயர் 6) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பேட் கமின்ஸ் 7) ஆர்.ஆர். – சஞ்சு சாம்சன் 8) குஜராத் டைட்டன்ஸ் – சுப்மன் கில் 9) மும்பை இந்தியன்ஸ் – ஹர்திக் பாண்டியா 10) டெல்லி அணி- அக்சார் படேல்.
Sorry, no posts matched your criteria.