India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருமணம் செய்து கொள்கிற எண்ணத்தை தான் கைவிட்டுவிட்டதாக நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த அவர், “25 வயதில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அப்போது அமையவில்லை. இப்போது எனக்கு 40 வயதாகிறது. இதன் பிறகு திருமணம் செய்யும் எண்ணமில்லை. கடைசி வரை தனிமையான வாழ்க்கைக்குப் பழகிக்கொள்ளப் போகிறேன்” எனக் கூறியுள்ளார்.

பீகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 17, ஜேடியு 16 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளன. பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சி சமீபத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. இதைத் தொடர்ந்து, தொகுதிப் பங்கீடு குறித்து இரு கட்சித் தலைவர்களும் ஆலோசனை நடத்திய நிலையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 தொகுதிகள், கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து X பக்கத்தில், வாழ்க்கை மிகவும் கடினமானது என தனது புகைப்படத்துடன் அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர் ஒருவர் ஆறுதல் கூறியதற்கு, அப்படி நடக்காது என நினைப்பதாக அவர் கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வேல்ஸ் நாட்டில் 3 வயது சிறுமி கண்ணாடி துகள்கள், மரத்துண்டுகளை உணவாக சாப்பிடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிகா சிண்ட்ரோம் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள வைண்டர் என்ற சிறுமி, கடந்த சில மாதங்களாக கற்கள், பஞ்சு உள்ளிட்ட கையில் கிடைத்ததை எல்லாம் விழுங்கியுள்ளார். எந்த விதமான ஊட்டச்சத்தும் இல்லாத, உணவு அல்லாத பிற பொருள்களைச் சாப்பிடுவதுதான் பிகா சிண்ட்ரோம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ரஷ்யாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் 88% வாக்குகளை பெற்று மீண்டும் அதிபராக தேர்வானார். உலகிலேயே மிகப்பெரிய நாடான ரஷ்யாவில் 6 ஆண்டுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறும். இந்த நிலையில், 5ஆவது முறையாக போட்டியிட்ட புதின், அதிபர் தேர்தலில் வெற்றி வாகை சூடினார். இதனிடையே, ரஷ்ய அதிபராக மீண்டும் தேர்வான புதினுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ஸ்ரீ பள்ளிகளை தமிழ்நாட்டில் தொடங்கும் திமுக அரசின் முடிவை நாதக தலைவர் சீமான் கண்டித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “PM SHRI பள்ளிகள் திட்டத்தை அமல்படுத்த ஒத்துக்கொண்ட திமுக அரசு தமிழக மாணவர்களுக்கு துரோகம் செய்துள்ளது. 2024-25 ஆம் கல்வியாண்டில் பாஜகவின் புதிய கல்விக்கொள்கையான ஸ்ரீ பள்ளி திட்டத்தை தமிழகத்தில் தொடங்கி, மாநிலக் கல்வியைக் காவி மயமாக்குவதுதான் திராவிட மாடலா” என்றார்.

நாட்டில் மின்சார வாகனங்கள் தயாரிப்பை ஊக்குவிக்க புதிய மின்வாகன கொள்கை பெரிதும் உதவும் என்று மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “புதிய மின்வாகன கொள்கை, உயர் விலை கார்கள் & ஆடம்பர வாகனங்களுக்கானது. எனவே, இது உள்நாட்டு தயாரிப்பாளர்களை பாதிக்க வாய்ப்பில்லை. ஏதேனும் பாதிப்பு இருந்தாலும், குறைவாகவே இருக்கும்” எனத் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் பரப்புரையை மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் துவங்க உள்ளார். திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பரப்புரையை துவங்குகிறார். அதனை தொடர்ந்து 23ஆம் தேதி திருவாரூரில் பரப்புரையை தொடர்கிறார். டெல்டாவில் பரப்புரையை முடித்த பிறகு கொங்கு மண்டலத்தில் முதல்வர் பரப்புரையை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

1998 கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்தால் தான் கொங்கு மண்டலத்தில் பாஜக மக்களிடையே செல்வாக்கு பெற்றது என்று சொல்லலாம். இன்று அச்சம்பவம் நடந்த பகுதியை பிரதமர் மோடி விசிட் செய்திருப்பது தேர்தலில் பாஜகவுக்கு கைகொடுக்கும் என அக்கட்சியினர் நினைக்கின்றனர். ஆனால், அதிமுக கூட்டணி இல்லாமல் தேர்தலைச் சந்திப்பது, வலுவான கட்சி கட்டமைப்பு இல்லாதது போன்றவை பாஜகவுக்கு முன் மிகப்பெரிய சவால்களாக உள்ளன.

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் சில முக்கிய நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என சிபிஐ தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் ஓராண்டுக்கு முன் கைதான ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ, அவ்வாறு வழங்கினால் விசாரணை பாதிக்கும் எனக் கூறியுள்ளது. முன்னதாக இதே வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.