News March 20, 2024

மக்களவைத் தேர்தலில் டெபாசிட் தொகை எவ்வளவு?

image

தமிழகத்தில் 7 தனித்தொகுதிகள் உள்பட 39 தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. பொதுத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டெபாசிட் தொகையாக ரூ.25,000 செலுத்த வேண்டும். இதே போன்று, தனித்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டெபாசிட் தொகையாக ரூ.12,500 செலுத்த வேண்டும். தேர்தலில் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெறத் தவறினால் வேட்பாளர் டெபாசிட் இழப்பர்.

News March 20, 2024

ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிக்க வேறு வழியில்லை

image

ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிக்க ரஃபா நகரில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது அவசியமென பைடனிடம் தெளிவுப்படுத்தி விட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். எகிப்து எல்லையை ஒட்டிய ரஃபா நகரில் இஸ்ரேல் ராணுவ தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதற்கு, அங்கு ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லையென நெதன்யாகு கைவிரித்துள்ளார்.

News March 20, 2024

இரவு வானில் மிளிரும் Whirlpool கேலக்ஸி!

image

பூமியில் இருந்து 30 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள Whirlpool கேலக்ஸியின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் தரவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் நாசா, இரவு வானில் உள்ள பிரகாசமான சுழலும் Whirlpool கேலக்ஸி, அதன் பிரமாண்ட கம்பீரத்தை காட்டும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

News March 20, 2024

இன்று வேட்புமனுத்தாக்கல் தொடக்கம்

image

தமிழகத்தில் மக்களவை மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் 27ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுத் தாக்கல் பெறப்படும். 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். மார்ச் 30ஆம் தேதி மனுக்களை பெற கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

News March 20, 2024

பாஜக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்கும் கம்யூனிஸ்டுகள்!

image

திருவனந்தபுரத்தில் பாஜக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரம் செய்வதாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றம்சாட்டியுள்ளார். திருவனந்தபுரத்தில் பேசிய அவர், ‘கடந்த 2 தேர்தல்களில் பாஜக இரண்டாமிடம் பெற்றுள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியில் ஒற்றுமை இல்லையென பாடமெடுக்கும் கம்யூனிஸ்டுகள், தற்போது எனக்கு எதிராக செய்யும் பிரச்சாரம் பாஜகவுக்கு உதவியாக போய் முடியும்’ என்றார்.

News March 20, 2024

வரலாற்றில் இன்று!

image

➤1602 – டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி அமைக்கப்பட்டது. ➤1854 – அமெரிக்காவின் குடியரசுக் கட்சி விஸ்கான்சின் ரிப்போன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. ➤1915 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டார். ➤ 1948 – சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் நடைபெற்றது ➤1956 – பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை அடைந்தது. ➤2003 – ஈராக் மீது அமெரிக்கக் கூட்டு படைகள் ராணுவ நடவடிக்கையை தொடங்கின.

News March 20, 2024

இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நிறுத்தும் கனடா

image

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனையை நிறுத்த கனடா முடிவு செய்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலோனி ஜோலி தெரிவித்துள்ளார். காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இதுவரை 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சமீபகாலமாக பொதுமக்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதை அடுத்து, கனடா நாடாளுமன்றத்தில் ஆயுதங்கள் விற்பனைக்கு தடை விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News March 20, 2024

கட்டடம் இடிந்த விபத்தில் பலி 10 ஆக உயர்ந்தது

image

கொல்கத்தாவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. கொல்கத்தாவின் கார்டன் ரீச் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் ஞாயிறு நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 17க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் காணாமல் போன இருவரை தேடும் பணியில் மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 20, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

◾பால்: அறத்துப்பால்
◾ இயல் : இல்லறவியல்
◾அதிகாரம்: ஒழுக்கமுடைமை
◾குறள்: 138 நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.
◾விளக்கம்: நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.

News March 20, 2024

சச்சினை விட சிறந்த பேட்ஸ்மேன் கோலி தான்!

image

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து புகழாரம் சூட்டியுள்ளார். அரசியலில் இருந்து மீண்டும் கிரிக்கெட் வர்ணனையாளராக மாறியுள்ள சித்து, ‘ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடும் கோலி, 3ஆவது பேட்ஸ்மேனாக விளையாடக் கூடாது. கோலி ஓய்வுப் பெறுவதற்கு முன்னர் நிச்சயம் கோப்பையை வெல்ல வேண்டும்’ என்றார்.

error: Content is protected !!