India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசேன் கொல்லப்பட்டதற்கு, டவுன் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரை முழுமையாக விசாரிக்காததே காரணம் எனக் கூறப்படுகிறது. வக்பு வாரிய சொத்துகள் தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் இருந்துள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக அவர் புகார் அளித்ததாகவும், ஆனால் போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமிழக மலைகளில் ட்ரெக்கிங் செய்ய சுற்றுலா பயணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். ஏப்ரல் முதல் மலைப்பாதைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதால் ட்ரெக்கிங் செய்பவர்கள் தமிழகத்தின் அழகை கண்டு ரசிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். Trek TamilNadu மூலம் கடந்த 3 மாதங்களில் 4,792 பேர் மலையேறியுள்ளதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.63.43 லட்சம் வருவாய் கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
‘கூலி’ படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தில் நடித்து வந்தார். அவருடன் நாகர்ஜுனா, சத்யராஜ், கன்னட நடிகர் உபேந்திரா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சென்னை, ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 10 அல்லது தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
தங்களது சொகுசு காருக்கு பேன்ஸி நம்பர் வாங்குவது பலரின் விருப்பமாக உள்ளது. ஆனால், துபாயைச் சேர்ந்தவர்கள் இதில் ஒரு படி மேல். முகமது பிங்கட்டி என்ற தொழிலதிபர், தனது குழுவை, கார் நம்பருக்கான ஏலம் எடுப்பதற்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு ‘DD 5’ என்ற பேன்ஸி நம்பரை ₹82 கோடிக்கு அந்த குழு ஏலம் எடுத்துள்ளது. கார் நம்பருக்காக ஏலத்தில் இவ்வளவு தொகை செலவு செய்வது இதுவே முதல்முறை.
மத்திய அமைச்சர்கள் 2024இல் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளில் 75% நிறைவேற்றப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங் கேள்விக்கு, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்தார். அப்போது 2024இல் அமைச்சர்கள் 160 வாக்குறுதிகள் அளித்ததாகவும், அதில் 39 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கார்கள் விலையை மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ் ஆகியவை விரைவில் உயர்த்தவுள்ளன. தயாரிப்பு செலவு அதிகரித்து விட்டதால், வரும் ஏப்ரல் மாதம் முதல் அனைத்து கார்கள் விலையையும் 4% உயர்த்த இருப்பதாக மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே காரணத்தை முன்வைத்து, வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வணிக பயன்பாடு கார்கள் விலையை 2% உயர்த்தப் போவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
ஏடிஎம் கார்டு திருடுப் போதல், வங்கிக் கணக்கில் பணம் மாயமாதல் போன்ற எந்த பிரச்னையாக இருந்தாலும், முதலில் கைக்கொடுப்பது வங்கிகள்தான். எனவே, வங்கிகளின் வாட்ஸ் அப் சேவை எண்கள் செல்போனில் இருத்தல் அவசியம். • எச்டிஎப்சி – 70700 22222. • எஸ்பிஐ – 90226 90226. • கனரா – 90760-30001 • ஐடிஎப்சி – 95555 55555. • இந்தியன் வங்கி – 87544 24242. ஐசிஐசிஐ – 86400 86400. • யூனியன் வங்கி – 96666 06060.
இளையராஜாவின் சாதனை மகுடத்தில் மற்றொரு வைரக்கல்லாய் அமைந்திருக்கிறது சிம்பொனி அரங்கேற்றம். இந்நிலையில், பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். பிரதமருடனான புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த இளையராஜா, மறக்க முடியாத சந்திப்பு எனக் குறிப்பிட்டுள்ளார். சிம்பொனி உள்பட பல விஷயங்கள் குறித்து தாங்கள் பேசிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
*நகைக் கடன் பெற RBI-யின் புதிய விதிமுறைகள்.
*இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் 342 பேர் பலி.
*அடுத்த 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்: IMD அறிவிப்பு.
*சிறுமியை பலாத்காரம்: காமெடி நடிகருக்கு 20 ஆண்டுகள் சிறை.
*செங்கோட்டையனுக்கு சப்போர்ட் பண்ண இபிஎஸ்: சட்டசபையில் சுவாரஸ்யம்.
*சக்திவாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்.
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 1,131 புள்ளிகள் இன்று ஒரே நாளில் உயர்வடைந்தன. சர்வதேச பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று ஆரம்பம் முதல் ஏற்றத்துடன் காணப்பட்டது. இது இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச்சந்தையில் வர்த்தக நேர முடிவில் 1,131 புள்ளிகள் உயர்ந்து 75,301ஆக வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 325 புள்ளிகள் அதிகரித்து 22,834ஆக வர்த்தகமானது.
Sorry, no posts matched your criteria.