India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேது பகவான் உத்திரம் நட்சத்திரத்தின் 3ஆம் பாகத்தில் இருந்து 2ஆம் பாகத்திற்கு சென்றுள்ளார். இந்த இடமாற்றம் கடகம், சிம்மம், துலாம் ஆகிய ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப் போகிறது. வாழ்க்கையில் பல இனிய மாற்றங்கள் நிகழும். ஆரோக்கியம் மேம்படும். எதை தொட்டாலும் பண வரவு இருக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்டநாள் கஷ்டங்கள் தீரும். முதலீடுகள் பெரும் லாபங்களை கொடுக்கும். குழந்தை யோகம் உண்டு.
பெரியாரை இழிவுபடுத்தி பேசியதாக சீமானுக்கு எதிராக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீமான் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதி, எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? வழக்கு எண்களின் விவரங்கள் என்ன? உள்ளிட்ட எந்த தகவலும் இல்லாமல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.
ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, பின்னர் தூக்கியெறியப்பட்டவர் ஹர்திக் பாண்ட்யா. தற்போது ரசிகர்களின் அன்பை அவர் மீண்டும் பெற்றிருக்கிறார். இதுபற்றி பேசிய அவர், என்னை சுற்றி நடந்த தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்தாமல், கடினமாக உழைத்தேன். டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு, எனது வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. எனக்கு எதிராக இருந்த ரசிகர்களின் அன்பு, எனக்கு மீண்டும் கிடைத்துள்ளது எனக் கூறினார்.
ராஜஸ்தானில் ஆண் குழந்தை பெறாத விரக்தியில், பிறந்து 17 நாட்களே ஆன பெண் குழந்தையை பெற்றத் தாயே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. பெண் குழந்தை பிறந்ததால் மன உளைச்சலில் இருந்த அந்த பெண், தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து பச்சிளம் குழந்தையை கொலை செய்துள்ளார். கணவர் கொடுத்த புகாரின் பேரில் அந்த பெண்ணை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். ஆணோ, பெண்ணோ அனைவரும் சமம் என்பதை சமூகம் எப்போதுதான் உணருமோ?
தெருவில் திரியும் நாய், பூனை, பசு போன்ற விலங்குகளுக்கும் நமது சட்டத்தில் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. வேண்டுமென்றே வாகனங்களால் மோதி அவற்றை கொன்றாலோ, காயப்படுத்தினாலோ காவல்நிலையத்தில் புகார் தரலாம். அங்கு IPC சட்டத்தின் 428,429ஆவது பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்த வேண்டும். அந்த பிரிவில் வழக்குப்பதிவானால், ரூ.2,000 அபராதம் (அ) 5 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வழி ஏற்படும்.
மதுரை மாவட்டம் கீழக்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டில் உட்கரை கச்சிராயிருப்பை சேர்ந்த மகேஸ்பாண்டி உயிரிழந்ததை கேள்விப்பட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்ததாக அவர் கூறியுள்ளார். அவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஸ்போர்ட்ஸ் 18 என்ற பெயரில் 4 விளையாட்டு சேனல்களை ரிலையன்ஸ் ஒளிபரப்பியது. அண்மையில் ஜியோ, வால்ட் டிஸ்னியின் ஹாட்ஸ்டார் ஒன்றாக இணைக்கப்பட்டன. அப்போது சேனல்களை இணைக்கவும் முடிவானது. அதன்படி, வால்ட் டிஸ்னி குழுமத்தின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களுடன் ஸ்போர்ட்ஸ் 18 சேனல்கள் ஒன்றாக இணைந்தன. இதனால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளன.
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஜுனைத் கான், ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. ரம்ஜான் நோன்பு கடைபிடித்துக் கொண்டிருந்தவர், எதுவும் உண்ணாமல் கடும் வெயிலில் விளையாடியதால், தாக்குபிடிக்க முடியாமல் பலியானார். முன்னதாக, போட்டியின் போது கூல்டிரிங்ஸ் குடித்து, ரம்ஜான் நோன்பை கடைப்பிடிக்க தவறியதாக ஷமி மீது விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 9 மாதங்களுக்கு பிறகு நாளை அதிகாலை பூமிக்கு திரும்பவுள்ளார். இந்நிலையில், சுனிதாவுக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில், ‘நீங்கள் பல ஆயிரம் மைல் தூரத்தில் இருந்தபோதும், எங்கள் இதயத்தின் அருகிலேயே இருக்கிறீர்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார். பூமி திரும்பியதும் இந்தியாவுக்கு வருமாறு சுனிதாவுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கட்சி ஆரம்பித்தது முதல் திமுக அரசையும், மத்திய பாஜக அரசையும் விஜய் சாடி வருகிறார். ஆனால் அதிமுகவை இதுவரை ஒருமுறை கூட விமர்சித்தது இல்லை. தலைவா படத்தால் அதிமுக, விஜய் இடையே முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனினும், கட்சி ஆரம்பித்தபிறகு அதுபற்றியும் விஜய் பேசவில்லை. இதை சுட்டிக்காட்டும் அரசியல் ஆர்வலர்கள், 2026 தேர்தலில் 2 கட்சிகளும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதோ என கேள்வி எழுப்புகின்றனர்.
Sorry, no posts matched your criteria.