News March 19, 2025

தனியாரை விட பால் விலை ₹16 குறைவு: அமைச்சர்

image

பால் கொள்முதல் குறித்து பேரவையில், MLA நந்தகுமார் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், பால் விற்பனையில் தனியாரை விட ஆவின் ₹16 குறைவாக விற்பதாக கூறினார். மேலும், ஆவின் நிறுவனத்தை நட்டம் இல்லாமல் நடத்த வேண்டும் எனக்கூறிய அவர், பால் விற்பனை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆட்சியை விட தற்போது 11 லட்சம் லிட்டர் கூடுதலாக பால் கொள்முதல் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

News March 19, 2025

திமுக கொடிகளை 15 நாள்களில் அகற்றுங்கள்: துரைமுருகன்

image

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள DMK கொடிகளை 15 நாள்களுக்குள் அகற்றிவிட்டு விவரங்களை தலைமைக்கு அனுப்ப துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத ரீதியிலான அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்றக் கடந்த 6ஆம் தேதி ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

News March 19, 2025

2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு

image

பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் எப்போது வழங்கப்படும் என பேரவையில், MLA சேகர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக ஆட்சி அமைந்த பிறகு பதிவு செய்து காத்திருந்த 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், மீதமுள்ள விவசாயிகளுக்கு CMன் அனுமதி பெற்று முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்படும் என்றார்.

News March 19, 2025

வைகோ பேசியதை நீக்குக: நிர்மலா ஆவேசம்

image

இலங்கை கடற்படையுடன் இந்திய கடற்படையும் கைகோர்த்து தமிழக மீனவர்களுக்கு எதிராக செயல்படுவதாக வைகோவின் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்திய கடற்படை மீதான குற்றச்சாட்டை வைகோ திரும்ப பெற வேண்டும்; அந்த பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்திய நிர்மலா, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

News March 19, 2025

கொலையாளிகளுக்கு நிச்சயம் தண்டனை: CM ஸ்டாலின் உறுதி

image

நெல்லையில் ஓய்வு பெற்ற SI ஜாகிர் உசேன் கொலை சம்பவத்தில் கொலையாளிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என CM ஸ்டாலின் கூறியுள்ளார். பேரவையில், அதிமுக கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசிய அவர், கொலை செய்யப்படுவதற்கு நிலப் பிரச்சனையே காரணம் என்றும், கொலைக்கு முன்னர் அவர் வெளியிட்ட வீடியோ குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

News March 19, 2025

BREAKING: CSK போட்டிக்கான டிக்கெட் விற்றுத் தீர்ந்தன

image

CSK vs MI மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கிய நிலையில், 1 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்தன. 38,000 பேர் மட்டுமே அமரக் கூடிய வசதி கொண்ட சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், ஆன்லைன் புக்கிங் செய்ய 2.50 லட்சம் பேர் காத்திருந்தனர். இதில் பலருக்கும் டிக்கெட் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். வரும் 23ஆம் தேதி போட்டி நடைபெற உள்ளது.

News March 19, 2025

ஜிம்னாஸ்டிக்ஸ் ஜாம்பவான் காலமானார்

image

உலக ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் தனியிடம் பெற்றவர் ஜப்பானை சேர்ந்த அகினோரி நகாயாமா(83). 1968 ஒலிம்பிக்கில் 4 தங்கம், 1972 ஒலிம்பிக்கில் 2 தங்கம், மேலும் 2 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்கள் வென்ற நகாயாமா, உலக சாம்பியன் போட்டிகளிலும் 6 தங்கம் உள்பட 12 பதக்கங்கள் வென்றவர். ஜப்பான் ஜிம்னாஸ்டிக்ஸின் அடையாளமாக இருந்த அவர், இரைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. RIP

News March 19, 2025

திமுக முன்னாள் எம்பியின் உதவியாளர் கொலை

image

DMK EX எம்பி குப்புசாமியின் உதவியாளரும், தொமுச நிர்வாகியுமான குமார் (71) படுகொலை செய்யப்பட்டார். ECR-ல் உள்ள உறவினர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த கும்பலை தட்டிக்கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், தாம்பரத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சென்ற குமாரை காரில் கடத்திச் சென்று, செஞ்சி அருகே கொலை செய்து சடலத்தை புதைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

News March 19, 2025

வீடு வீடாக ரேஷன் விநியோகம் குறித்து ஆய்வு: சக்கரபாணி

image

வீடு வீடாக சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்வது குறித்து ஆய்வு செய்யப்படும் என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஆந்திரா, கர்நாடகாவில் உள்ளதுபோல், தமிழகத்திலும் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்குவது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இது குறித்து உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க..

News March 19, 2025

CSK மேட்ச் பார்க்க 2.50 லட்சம் பேர் வெயிட்டிங்!

image

சென்னையில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள CSK vs MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. ஆன்லைனில் டிக்கெட் வாங்க 2.50 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். அதேநேரம், சேப்பாக்கம் மைதானத்தில் 38,000 பேர் மட்டுமே அமர்ந்து பார்க்க முடியும். எனவே, முன்பதிவு செய்ய காத்திருக்கும் அத்தனை பேருக்கும் டிக்கெட் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். ஒருவரால் 2 டிக்கெட்கள் மட்டுமே புக் செய்ய முடியும்.

error: Content is protected !!