India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடப்பாண்டு IPL தொடர் 22ஆம் தேதி கொல்கத்தாவில் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்க உள்ளது. நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், நடிகை திஷா பதானி, கத்ரீனா கைஃப் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போல இல்லாமல் இந்த ஆண்டு, போட்டி நடைபெறும் 13 மைதானங்களிலும் தொடக்க விழா நடத்த பிசிசிஐ திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் தொடர்ந்து 3 வது நாளாக ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 148 புள்ளிகள் உயர்ந்து 75,449 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 73 புள்ளிகள் அதிகரித்து 22,907 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவடைந்து. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 31 பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகியுள்ளது.
விலை உயராத பொருளே இருக்காது போல. தற்போது எம்.சான்ட், பி.சான்ட் விலைகள் உயர்ந்துள்ளன. 1 டன் எம்.சான்ட் ₹650இல் இருந்து ₹1,250ஆகவும், பி.சான்ட் ₹750இல் இருந்து ₹1,500ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஒரு லாரி எம்.சான்ட் (6 unit) ₹55,000ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால், வீடு கட்டும் செலவு 1 சதுர அடிக்கு ₹100 அதிகரிக்கும். எனவே, விலையை முறைப்படுத்த வேண்டுமெனவும் அரசுக்கு காேரிக்கை எழுந்துள்ளது.
TVK சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்குமாறு நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். தங்கள் மாவட்டங்களில் உள்ள மாநகரம், நகரம், ஒன்றியம், வார்டு மற்றும் வட்டம் என அனைத்து இடங்களிலும் கட்சி நிர்வாகிகள் தண்ணீர் பந்தல் அமைக்க பரிந்துரைத்துள்ளார். மேலும், தாங்கள் அமைத்த தண்ணீர் பந்தலில் தண்ணீர் உள்ளதா? என தினந்தோறும் தவறாமல் கவனிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டின் பணக்கார எம்எல்ஏ, மும்பை காட்கோபார் (கிழக்கு) தொகுதி பாஜக எம்எல்ஏவான பராக் ஷா ஆவார். அவருக்கு ரூ.3,400 கோடி சொத்து இருப்பதாக ADR தெரிவித்துள்ளது. அவருக்கு அடுத்து, பணக்கார எம்எல்ஏ டி.கே. சிவக்குமார் (காங்.,), அவருக்கு ரூ.1,413 கோடி சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மே.வங்க பாஜக எம்எல்ஏ நிர்மல் குமாரே மிகவும் ஏழை எம்எல்ஏ, அவருக்கு ரூ.1,700 சொத்தே இருப்பதாக ADR கூறியுள்ளது.
AI-யின் வளர்ச்சி, ஒருபுறம் ஆச்சரியத்தை தந்தாலும் மறுபுறம் பயத்தையும் சேர்த்தே தருகிறது. அப்படியொரு சம்பவத்தைதான் AI தற்போது செய்திருக்கிறது. இத்தாலியின் பிரபலமான IL FOGILO நாளிதழின் ஒருநாள் செய்தித்தாளையே AI தயாரித்து கொடுத்துவிட்டது. இதைதான் அந்நிறுவனம் நேற்று விற்பனை செய்துள்ளது. ஹெட்லைன்ஸ், தலையங்கம், செய்திகள் என 100 ஜர்னலிஸ்டுகளின் வேலையை அசால்ட்டாக செய்து முடித்திருக்கிறது AI.
ஜப்பானைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பிரபல அனிமேஷன் தொடர் இயக்குநர் ஷெகேக்கி ஆவாய் (71) காலமானார். 1980 முதல் பல்வேறு அனிமேஷன் கேரக்டர்களை அவர் உருவாக்கியுள்ளார். பல்வேறு அனிமேஷன் தொடர்களையும் அவர் இயக்கியுள்ளார். அவற்றில், அட்டாக் ஆன் டைட்டன், மை ஹீரோ அகாடமியா, நருடோ, டோரேமான், டெர்மினேட்டர் ஜீரோ, சூசைட் ஸ்குவாடு ISEKAI உள்ளிட்டவை புகழ்பெற்றவை ஆகும். இதில் நீங்கள் பார்த்த சீரியல் எது?
ஐபிஎல் தொடரில் CSK மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியை காண்பதற்கே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் தொடர்களில் 33 முறை நேருக்கு நேர் மோதிய நிலையில், CSK 21 போட்டிகளில் வென்றுள்ளது. பெங்களூரு அணி 11 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. பெங்களூரு அணிக்கு எதிராக CSK இந்த முறையும் வெற்று பெறுமா? கமெண்ட் பண்ணுங்க…
இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டியது போதாதென்று, தற்போது மீண்டும் ஒரு அராஜகத்தில் கேரளா ஈடுபட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் பிடிபட்ட 20 தெரு நாய்களை, அங்குள்ள மாநகராட்சி ஊழியர்கள், கன்னியாகுமரி எல்லையில் உள்ள கடச்சல் பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். இதனை கவனித்த பொதுமக்கள், அவர்களை போலீஸில் ஒப்படைத்த நிலையில், தெரு நாய்களை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது முதல், அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட MLAக்கள், சட்டசபையில் தனியே செயல்பட்டு வந்தனர். அவர்கள் அதிமுக MLAக்களுடன் இதுவரை சபையில் பேசாத நிலையில், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இன்று அவைக்கு வந்த வைத்திலிங்கத்திடம், அதிமுக MLAக்கள் சகஜமாக பேசினார்கள். அதிமுக மீண்டும் ஒன்றிணையுமா? கமெண்ட் பண்ணுங்க…
Sorry, no posts matched your criteria.