India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய அணியின் ஓப்பனர் Hitman ரோஹித் சர்மா 74 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். 17 ரன்களுக்குள் கில் & கோலி ஆகியோரை இழந்து தடுமாறிய இந்திய அணிக்கு ரோஹித்தும், ஷ்ரேயஸ் ஐயரும் வலுசேர்த்து வருகின்றனர். இந்திய அணி தற்போது வரை 21.5 ஓவர்களில் 94/2 ரன்களை எடுத்துள்ளது.

டியூட் படத்தில் தாலி செண்டிமெண்ட், ஆணவக்கொலை இதைபற்றிய காட்சிகளும் இடம்பெற்றிருந்தது பலதரப்பட்ட விவாதங்களை கிளப்பியது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த டைரக்டர் கீர்த்தீஸ்வரன், இது தமிழ்நாடு. இங்கு ஒரு ‘பெரியவர்’ இருந்தார். அவர் வழியில் வந்துதான் நாங்கள் இதையெல்லாம் பேசுறோம். இதற்கு முன் நிறைய பேர் சொன்னதை, நாங்களும் அடுத்த தலைமுறைக்கு சொல்கிறோம். இனியும் சொல்வோம் என பதிலளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் திமுக <<18078637>>MLA பொன்னுசாமியின்<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இருமுறை MLA-வாக தேர்வாகி பழங்குடியின மக்கள் மற்றும் கட்சியின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டவரின் இழப்பு திமுகவுக்கு பேரிழப்பு என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், MLA பொன்னுசாமியை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தொகுதி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் உயர்வுடன் இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 738 புள்ளிகள் உயர்ந்து 85,165 புள்ளிகளிலும், நிஃப்டி 206 புள்ளிகள் உயர்ந்து 26,074 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. கடந்தாண்டு செப்டம்பரில் சென்செக்ஸ் 85,978 புள்ளிகள் தொட்டதே புதிய உச்சமாக இருந்த நிலையில், மீண்டும் புதிய உச்சத்தை நோக்கி செல்வதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

◆முடி, தோல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் இந்த கஞ்சி உதவும் ➥பாசிப்பயறு, வேர்க்கடலை, கொண்டைக்கடலை, நட்ஸ் வகைகளுடன், சிறுதானியங்களை சேர்த்து சத்து மாவாக அரைத்து கொள்ளுங்கள் ➥தானியங்கள் குறைவாகவும், பயறு வகைகள் அதிகமாகவும் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள் ➥2 ஸ்பூன் அளவு மாவை எடுத்து, நன்கு கரைத்து உப்பு சேர்த்து, கஞ்சியாக்கி குடித்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். SHARE.

தமிழகம் முழுவதும் பெய்து வரும் பரவலான மழையால் அனைத்து நீர்த்தேக்கங்களும் நிறைந்து வருகின்றன. நீர்வள துறை பராமரிப்பில் உள்ள 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 224 TMC ஆகும். இதில், தற்போது 196.897 TMC அதாவது 87.77% தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 14, 141 பாசன ஏரிகளில், 1,522 ஏரிகள் 100%, 1,842 ஏரிகள் 76% முதல் 99% வரை நிரம்பியுள்ளன.

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக, வரும் 28-ம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். அதைத்தொடர்ந்து வரும் 29-ம் தேதி தான் பிறந்த ஊரான திருப்பூருக்கு செல்லும் நிலையில், அவரது தாயாரை சந்தித்து ஆசி பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின் CPR, தனது சொந்த ஊருக்கு முதல் முறையாக செல்கிறார்.

மழை நிவாரண பணிகள் குறித்து பேச EPS-க்கு அருகதை இல்லை என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் மழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு செய்த அவர், ஆளும்கட்சியாக இருந்தபோது கால்கூட தரையில் படாமல்தான் EPS பணியாற்றினார் என விமர்சித்தார். மேலும், கொரோனா காலத்தில் கூட உயிரை துச்சமென நினைத்து களத்தில் பணியாற்றியது அன்றைய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்தான் என்றார்.

➤இதன் 4 இலையை கசக்கி முகர்ந்து பார்த்தால் போதும், தலைவலி நீங்கிவிடும். ➤வியர்வை நாற்றம் அடிக்காமல் இருக்க, ஒரு கைப்பிடி பச்சிலை இலைகளைப் பறித்து நீரில் நன்கு ஊற வைத்து, அந்த தண்ணீரில் குளித்தால் உடல் நறுமணமாக இருக்கும். ➤காது வலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த இலையின் சாற்றை, சில சொட்டுகள் விட்டால் வலி நீங்கும். ➤வாயுத்தொல்லை இருப்பவர்கள், இந்த இலையை பச்சையாக மென்று தின்றால் பிரச்னை சரியாகும்.

தங்கம் விலை சவரனுக்கு ₹320 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,500-க்கும், சவரன் ₹92,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. USA – சீனா இடையேயான புவிசார் அரசியல் சுமூகமாக மாறியது, முதலீட்டாளர்கள் தங்கம் மூலம் கிடைத்த பங்குகளை விற்று லாபம் ஈட்ட முடிவு செய்தது உள்ளிட்ட காரணங்களே விலை சரிவுக்கு காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.