News March 21, 2024

ஆளுநருக்கு எதிரான மனு இன்று விசாரணை

image

ஆளுநர் ரவி பொன்முடியை அமைச்சராக நியமிக்காததற்கு எதிரான தமிழக அரசின் மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்ய வேண்டுமென்ற மனு மீதும் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற உள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்வதாக தமிழக அரசு அந்த மனுவில் குற்றம் சாட்டியுள்ளது.

News March 21, 2024

ஆப்கனை வெல்லுமா இந்தியா?

image

உலக கோப்பை (ஆசிய பிரிவு) கால்பந்து 2ஆவது கட்ட தகுதிச் சுற்றில் இன்று இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. சவுதி பிரின்ஸ் சுல்தான் மைதானத்தில் இன்று நடக்கும் 3ஆவது போட்டியில் இந்திய அணி (117), ஆப்கனை (158) வென்றால், உலக கோப்பை கால்பந்து மூன்றாவது கட்ட தகுதிச் சுற்றுக்கு, முதல் முறையாக முன்னேறும். ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி ஆப்கனை வென்றது குறிப்பிடத்தக்கது.

News March 21, 2024

புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவது நிறுத்தம்

image

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. அதே போல், தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. இதனால் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவதை உணவு வழங்கல் துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

News March 21, 2024

விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

image

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அதிகாலையில் 4 கார்களில் வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக உடன் கூட்டணியை முறித்துகொண்ட அதிமுக இத்தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

News March 21, 2024

ஏழைகளின் ஆசிர்வாதம் எனக்கு உள்ளது

image

ஏழை மக்களின் ஆசிர்வாதம் தனக்கு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நியூஸ் 18 தொலைக்காட்சி கருத்தரங்கில் பேசிய அவர், “என்னை முகலாய மன்னர் அவுரங்கசீப்புடன் எதிர்க்கட்சியினர் ஒப்பிட்டு குற்றம்சாட்டியுள்ளனர். இது 104வது அவதூறாகும். எதிர்க்கட்சியினர் விமர்சித்தாலும், ஏழைகளின் ஆசிர்வாதம் எனக்கு உள்ளது. எனது அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த நாட்டு மக்கள் முடிவெடுத்துவிட்டனர்” என்றார்.

News March 21, 2024

திமுக வேட்பாளர்களுடன் நாளை ஆலோசனை

image

வேட்புமனுத் தாக்கல் குறித்து வேட்பாளர்களுடன் திமுக தலைமை நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. ஆர்.எஸ்.பாரதி தலைமையில் காணொலி வாயிலாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில், மூத்த வழக்கறிஞர் இளங்கோ வேட்புமனுத் தாக்கல் குறித்த ஆலோசனைகளை வழங்குவார் என்று தெரிகிறது. இத்தேர்தலில் திமுக சார்பில் புதுமுகங்கள் 11 பேருக்கு சீட் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

News March 21, 2024

அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

image

மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்பட 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளதாக தெரிகிறது. அந்த வகையில், 16 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று இபிஎஸ் வெளியிட்டார். இதில் ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தன், மதுரை சரவணன் உள்ளிட்டோருக்கு சீட் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று வெளியாக உள்ள 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில், மீதமுள்ள 17 வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 21, 2024

தமிழ்நாடு காங். வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

image

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது. திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களாக யாரை தேர்வு செய்வது என்பது தொடர்பாக கட்சி மேலிடத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. அதன் அடிப்படையில் இன்றிரவுக்குள் பட்டியல் வெளியிடப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

News March 21, 2024

குரூப்- 2 பதவிக்கு நேர்முக தேர்வு

image

குரூப்-2 பதவியில் 29 காலி பணியிடங்களை நிரப்ப 3ம் கட்ட நேர்முக தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதான தேர்வில் தேர்ச்சியடைந்து தரவரிசையில் முன்னிலை பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி பணி ஒதுக்கீடு முடிந்து வருகிறது. இதில் காலியாக உள்ள 29 பணியிடங்களுக்கு இன்று 3ம் கட்ட நேர்முக தேர்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இப்பணியில் சேர விரும்புவோர் விவரங்களை பதிவு செய்ய 3 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.

News March 21, 2024

தோனி ஒரு அதிசயம்

image

கிரிக்கெட் விளையாடுவதில் உள்ள அபார திறமை காரணமாக தோனி சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கிறார் என்று வர்ணனையாளர் நவ்ஜோத் சிங் சித்து புகழாரம் சூட்டியுள்ளார். தோனி குறித்து பேசிய அவர், “தோனி 42 வயதில் கிரிக்கெட் விளையாடுவது ஒரு அதிசயம். தொடர்ந்து கிரிக்கெட் விளையாடாத பட்சத்தில் ஆடுகளத்தில் தடுமாற்றம் ஏற்படும். பாண்டிங், சச்சின் போன்றோர் கூட பேட் பிடிக்க தவித்தனர். தோனி விதிவிலக்காக உள்ளார்” என்றார்.

error: Content is protected !!