India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கட்டிப் பிடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை FACT CHECK செய்து பார்த்தபோது, அது உண்மையில்லை எனவும், சீன ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2021இல் 2 பேரும் சந்திக்கையில் எடுத்த வீடியோவை இதற்காக பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.
கணவர் <<15809593>>செளரப்பை <<>>ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்று கூறுபோட்ட முஸ்கான், சிக்கிவிடக் கூடாது எனத் திட்டமிட்டுள்ளார். கொலைக்கு பிறகு செளரப் செல்போனுடன் ஹிமாச்சல் சென்ற இருவரும், அங்கிருந்து செளரப் தங்கைக்கு, வாட்ஸ்அப்பில் மெசேஜ்கள் அனுப்பியுள்ளார். ஹோலிக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். ஆனால் போன் அழைப்பை மட்டும் தவிர்த்துள்ளார். எனினும், போலீசில் சிக்கிவிட்டார்.
கடந்த மார்ச் 8ஆம் தேதி லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இசைஞானி இளையராஜா சாதனை படைத்தார். இதற்கு பிரதமர், முதல்வர், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் அவரை வாழ்த்து மழையில் நனைத்தனர். அந்த வகையில் நடிகர் சிவக்குமார், அவரது மகன் சூர்யா மற்றும் மகள் பிருந்தாவுடன் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்தினார். அப்போது சிவகுமார் தங்க சங்கிலியை அவருக்கு பரிசாக அணிவித்தார்.
திருமணத்தை பதிவு செய்ய வேண்டுமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதுகுறித்து 2006இல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பெண்கள் நலனுக்காக திருமணப் பதிவு கட்டாயம் என சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டது. அதன்படி, 1955 இந்து திருமணச் சட்டம் (அ) 1954 சிறப்பு திருமணச் சட்டத்தின்கீழ் 90 நாட்களுக்குள் பதிவு செய்யலாம். அந்த சான்று, சொத்துரிமை, விவாகரத்து, குழந்தை பாதுகாப்புக்கு மிகவும் அவசியம் ஆகும்.
செல்போன் வெடித்து ஒருவருக்கு ஆணுறுப்பே பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ம.பி.,யில் மார்க்கெட் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்த இளைஞரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த போன் திடீரென வெடித்தது. இதில் அவரின் ஆணுறுப்பு சேதம் அடைந்ததுடன், கீழே விழுந்ததால் தலையிலும் காயமடைந்தார். செகன்ட் ஹேண்ட் போனை இரவு முழுவதும் சார்ஜ் போட்டதே இதற்கு காரணம் என்கின்றனர். ஓவர் சார்ஜ் போடாதீங்க BROTHERS!
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் குடும்பத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விராட் கோலி அண்மையில் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பிசிசிஐ செயலாளர் சாக்கியா, சிலர் கோபப்படுவதற்காக பிசிசிஐ விதிகள் மாற்றப்படாது எனக் கூறினார். முன்னதாக, வெளிநாடுகளில் விளையாட செல்லும் இந்திய அணி வீரர்கள், தங்கள் குடும்பத்தினரை அழைத்துச் செல்லக்கூடாது என பிசிசிஐ உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ஆக உள்ளது. இதனை 62 ஆக உயர்ந்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகளால் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஓய்வு பெறும் வயதை உயர்த்தவோ, குறைக்கவோ திட்டம் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் சிறுவயது நண்பர் தன்மாய் ஸ்ரீவஸ்தவா (46), இந்த IPLஇல் நடுவராக களமிறங்கவுள்ளார். கோலியும், ஸ்ரீவஸ்தவாவும் 2008இல் நடந்த UNDER 19 உலகக்கோப்பை போட்டியில் விளையாடியுள்ளனர். இப்போட்டியில் அதிக ஸ்கோர் எடுத்தவரே ஸ்ரீவஸ்தவாதான். ஆரம்பக்கால IPLஇல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவர், பிறகு அம்பயரிங் ஃபீல்டை தேர்ந்தெடுத்தார்.
ED நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஐகோர்டில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. டாஸ்மாக் விவகாரத்தில் ED விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும், சோதனையில் டாஸ்மாக் ஆவணங்களை பறிமுதல் செய்ததை சட்டவிரோதம் என அறிவிக்கவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலக சோதனைக்கு பின், ₹1000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக ED தெரிவித்தது.
ரயிலில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல 1989 ரயில்வே சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், ஸ்டவ், தீப்பெட்டி, லைட்டர், பட்டாசு ஆகியவை அடங்கும். தடையை மீறி இவற்றை ரயில்களில் கொண்டு சென்றால், ரூ.1,000 அபராதம் (அ) 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். சேதம், உயிரிழப்பு ஏற்பட்டால், அதற்கும் அவரே பொறுப்பாவார். SHARE IT.
Sorry, no posts matched your criteria.