India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலக ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் தனியிடம் பெற்றவர் ஜப்பானை சேர்ந்த அகினோரி நகாயாமா(83). 1968 ஒலிம்பிக்கில் 4 தங்கம், 1972 ஒலிம்பிக்கில் 2 தங்கம், மேலும் 2 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்கள் வென்ற நகாயாமா, உலக சாம்பியன் போட்டிகளிலும் 6 தங்கம் உள்பட 12 பதக்கங்கள் வென்றவர். ஜப்பான் ஜிம்னாஸ்டிக்ஸின் அடையாளமாக இருந்த அவர், இரைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. RIP
DMK EX எம்பி குப்புசாமியின் உதவியாளரும், தொமுச நிர்வாகியுமான குமார் (71) படுகொலை செய்யப்பட்டார். ECR-ல் உள்ள உறவினர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த கும்பலை தட்டிக்கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், தாம்பரத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சென்ற குமாரை காரில் கடத்திச் சென்று, செஞ்சி அருகே கொலை செய்து சடலத்தை புதைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வீடு வீடாக சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்வது குறித்து ஆய்வு செய்யப்படும் என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஆந்திரா, கர்நாடகாவில் உள்ளதுபோல், தமிழகத்திலும் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்குவது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இது குறித்து உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க..
சென்னையில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள CSK vs MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. ஆன்லைனில் டிக்கெட் வாங்க 2.50 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். அதேநேரம், சேப்பாக்கம் மைதானத்தில் 38,000 பேர் மட்டுமே அமர்ந்து பார்க்க முடியும். எனவே, முன்பதிவு செய்ய காத்திருக்கும் அத்தனை பேருக்கும் டிக்கெட் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். ஒருவரால் 2 டிக்கெட்கள் மட்டுமே புக் செய்ய முடியும்.
கோடைகாலத்தில் ஃபிரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீரை குடிப்பது உடல் நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இது செரிமான அமைப்பின் செயல்பாட்டை மெதுவாக்கி, மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். மேலும், தலைவலி, உடல் சோர்வு, சளி, தொண்டைப் புண், பல் சொத்தை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் டாக்டர்கள் அலெர்ட் கொடுக்கின்றனர். மண் பானை நீரைப் பருகுவது சிறந்தது எனவும் அறிவுறுத்துகின்றனர்.
டாஸ்மாக்கில் ₹1000 கோடி ஊழல் புகார் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது, அமைச்சர் <<15809905>>செந்தில் பாலாஜி<<>>க்கு பெரும் நெருக்கடியாக மாறியிருக்கிறது. மதுபான ஊழல் முறைகேடு வழக்கில், கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, கே.சி.ஆரின் மகள் கவிதா உள்ளிட்டோர் கைதாகினர். அவர்களை போலவே, டாஸ்மாக் ஊழல் புகாரில் செந்தில் பாலாஜி கைது செய்யப்படலாம் என்பதால் அவர் டெல்லி சென்றதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
உ.பி.யில் பெண் ஒருவர் தனது கணவரை கொடூரமாக கொன்றுள்ளார். லண்டனில் வணிகக் கப்பலில் அதிகாரியான சவுரப், தனது மனைவி முஸ்கானின் பிறந்தநாளுக்காக இந்தியா வந்துள்ளார். இதனிடையே, காதலனுடன் உறவில் இருந்த முஸ்கான், கணவனைக் கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி, காதலனுடன் சேர்ந்து சவுரப்பை கொன்று துண்டு துண்டாக வெட்டி, டிரம்மில் வைத்து சிமெண்டால் மூடியுள்ளார். போலீசார் விசாரணையில் இக்கொடூரம் தெரியவந்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி இரவோடு இரவாக டெல்லி சென்று திரும்பி இருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்ற அவர், சற்றுமுன் சென்னை திரும்பினார். டாஸ்மாக்கில் ₹1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக EDயின் புகாரை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அவர் டெல்லி சென்றதாகத் தெரிகிறது.
‘STR 49’ படத்தில் நடிக்க கயாடு லோஹர் கமிட்டாகி உள்ளார். ‘டிராகன்’ பட வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், தற்போது சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தை ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் கல்லூரி மாணவனாக சிம்பு நடிக்கிறார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 19) சவரனுக்கு ₹320 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,290க்கும், சவரன் ₹66,320க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹320 உயர்ந்த நிலையில், இன்றும் விலை உயர்வை சந்தித்துள்ளது. அதேபோல், வெள்ளி கிராமுக்கு ₹1 உயர்ந்து புதிய உச்சமாக ஒரு கிராம் ₹114க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,14,000க்கும் விற்பனையாகிறது.
Sorry, no posts matched your criteria.