India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக இதுவரை வெளியான அனைத்து கருத்துக்கணிப்புகளும் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. ஆனால் சமீபகாலமாக அதிமுகவின் தேர்தல் பரப்புரை மற்றும் விளம்பர யுக்தி அனைத்தும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது. இதனால், தனி மெஜாரிட்டி உடன் திமுக வெல்லும் என்ற இடங்களில் இருமுனை போட்டியாக மாறி வருகிறது. அதிமுக இன்னும் பிரசாரத்தை தீவிரப்படுத்தினால், நிலைமை இன்னும் கடுமையாகும்.

டி20 உலக கோப்பை இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்துக்கு 5 பேர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி இம்மாத இறுதியில் தேர்வு செய்யப்படவுள்ளது. தற்போது ஜிதேஷ் சர்மா, இசான் கிஷண், சஞ்சு சாம்சன், கே.எல். ராகுலுக்கு மாறி மாறி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்நிலையில் பண்டும் களத்தில் குதித்திருப்பதால், கீப்பர் இடத்துக்கு தேர்வாவதில் 5 பேர் இடையே போட்டி நிலவுகிறது.

அருணாச்சல் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை யாரும் மறுக்க முடியாது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். இந்தியாவின் 30 நிலப்பரப்புக்கு சட்டவிரோதமாக சீனா பெயரிட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. சீனா வரலாற்று உண்மைகளை மாற்ற முடியாது. இந்தியாவின் அங்கமாக அந்த மாநிலமும், மக்களும் இருக்கிறார்கள். பொய்களை கட்டவிழ்த்து விடுவதை சீனா தொடர்ந்து செய்து வருகிறது என X-இல் அவர் கூறியுள்ளார்.

பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்கள் ரூ.1 லட்சம் வரையும், வேட்பாளா்கள் ரூ.50,000 வரையும் எடுத்துச் செல்லலாம் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்பாளா்கள் மட்டுமின்றி, அவா்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் பேச்சாளா்களின் செலவுக் கணக்கும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு மேல் எடுத்துச் செல்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணமும் பறிமுதல் செய்யப்படும்.

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் நடக்கும் நேரத்தில், பெரும்பாலான மாநிலங்களில் வழக்கத்தைவிட வெயில் கடுமையாக இருக்கும். வழக்கமாக 4 முதல் 8 நாள்கள் வரை நீடிக்கும் வெப்ப அலையின் தாக்கம், நடப்பாண்டில் 10 முதல் 20 நாள்கள் வரை நீடிக்கும். எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திமுகவின் மூத்த தலைவர் T.R.பாலுவின் மகள் T.R.B.மனோன்மணி பாஜகவில் இணையவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இவர் T.R.பாலுவின் முதல் தாரத்து மகள். அமைச்சர் T.R.B ராஜாவுக்கு எதிராக இவரை முன்னிருந்த பாஜக திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே, திருச்சி சிவா மகன் திருச்சி சூர்யா பாஜகவில் இருக்கும் நிலையில், T.R.B.மனோன்மணியும் பாஜகவில் இணைவது திமுகவுக்கு நெருக்கடியாக மாறும்.

ரயில்வே வருமானம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில் சரக்குகள் கையாளுதல், பயணிகள் கட்டணம் மூலம் ரயில்வேக்கு ரூ.2.4 லட்சம் கோடி கிடைத்தது. இந்நிலையில் 2023-24ஆம் நிதியாண்டில் ரூ.2.6 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. 1,591 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றியும் சாதனை படைத்துள்ளது. ரயில்வேயின் அதிகபட்ச வருவாய் இது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

திரைப்படங்களில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் தன்னை உதவி இயக்குநர்கள் ஏளனம் செய்ததாக சீரஞ்சிவி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “திரைப்படங்களில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் சூப்பர் ஸ்டார் என்று நினைப்பா என என்னை பார்த்து உதவி இயக்குநர்கள் ஏளனம் செய்து, சத்தம் போட்டனர். நான் இந்த அளவு வளர, சூப்பர் ஸ்டாராக வேண்டுமென்று எனக்குள் இருந்த ஒரு வெறியும் காரணம்” என்று கூறியுள்ளார்.

அருணாச்சல பிரதேசத்திற்கு சொந்தமான சுமார் 30 இடங்களுக்கு சீன அரசு பெயர் மாற்றம் செய்து, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதை மறைக்கத்தான் கச்சத்தீவு பிரச்னையை மோடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கையில் எடுத்துள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும், ₹7000 கோடியை இலங்கைக்கு கொட்டி கொடுக்க தெரிந்த மோடிக்கு கச்சத்தீவை மீட்க தெரியவில்லையா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலை பொதுமக்களிடம் கன்னடத்தில் பேசி வாக்கு சேகரித்து ஆச்சரியப்படுத்தினார். கோவையில் போட்டியிடும் அவர், கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். வீரகேரளம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அவருக்கு குறும்பர் இன மக்கள் கம்பளியை பரிசாக அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட அண்ணாமலை கன்னட மொழியில் நன்றி தெரிவித்தார். இதனை கண்ட நிர்வாகிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.