India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உக்ரைன் போர், காஸா விவகாரத்தில் ஐ.நா.வால் உறுதியான முடிவை எடுக்க முடியவில்லை எனக் கூறிய அவர், ஐ.நா.வில் இந்தியா நிரந்தர உறுப்பினராக உலகம் முழுவதும் ஆதரவு குரல் எழுந்துள்ளது என்றார். மேலும், அதற்கான வேலைகளில் இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, எகிப்து நாடுகள் ஈடுபடுவதாகவும் கூறினார்.

பெங்களூரு அணிக்கு எதிரான 15ஆவது ஐபிஎல் போட்டியில், 29 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில், 153 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பெங்களூரு அணி தோல்வி அடைந்தது. அபாரமாக பந்துவீசிய மயங்க் யாதவ், 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

டிக்கெட் பரிசோதனையின் போது டிக்கெட் பரிசோதகர் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா செல்லும் விரைவு ரயிலில் டிக்கெட் பரிசோதகர் பயணி ஒருவரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது நடந்த வாக்குவாதத்தில் அந்த பயணி, டிடிஆரை கீழே தள்ளிவிட்டதில் டிடிஆர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாஃபர் சாதிக்குடன் இருந்த தொடர்பு குறித்து, இயக்குநர் அமீரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. டெல்லியில் உள்ள தேசிய போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தில் இன்று காலை ஆஜரான அமீரிடம் NCB அதிகாரிகள் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். முன்னதாக, ஜாஃபர் சாதிக் தயாரிப்பில் ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்ற படத்தை அமீர் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

சுக்கிர பகவானின் சொந்த ராசியான ரிஷப ராசியில் குரு பகவான் நுழையப் போகிறார். இதனால் மேஷ ராசியினருக்கு போதிய பண வரவு, கடக ராசியினருக்கு புதிய வேலை வாய்ப்பு, மிதுன ராசியினருக்கு வெளிநாடு செல்லும் யோகம், கன்னி ராசியினருக்கு தொழில் தொடங்கும் வாய்ப்பு மற்றும் துலாம் ராசியினருக்கு செய்யும் செயலில் எல்லாம் வெற்றி கிடைக்கப் போகிறது. இந்த பலன்கள் குறிப்பிட்ட நட்சத்திற்கு ஏற்றார் போல மாறுபடும்.

பெங்களூருவில் இன்று நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டியில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சீசனில் மட்டும் இதுவரை 250 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. சிராஜ் வீசிய பந்தை சிக்சருக்கு தூக்கி அடித்த லக்னோ வீரர் டி காக், நடப்பு சீசனில் 250வது சிக்ஸரை அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். நடப்பு சீசனில் இதுவரை அதிகபட்சமாக SRH வீரர் க்ளாசென் 17 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.

லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் RCB வீரர் மேக்ஸ்வெல் ஒரு மோசமான சாதனை படைத்துள்ளார். இன்றைய போட்டியில் டக் அவுட்டான அவர், ஐபிஎல்லில் அதிகமுறை (16) டக் அவுட்டான வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். ரோஹித் ஷர்மா, தினேஷ் கார்த்திக் இருவரும் 17 முறை டக் அவுட்டாகி இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர். மந்தீப் சிங், பியுஷ் சாவ்லா, சுனில் நரைன் 15 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

தமிழ்நாட்டில் I.N.D.I.A கூட்டணி 39 தொகுதிகளிலும் அபார வெற்றி பெறும் என்று இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. கடந்த முறை அதிமுக ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்த நிலையில் இந்த முறை அதுவும் கிடைக்காது என்று இந்தியா டுடே நாளேடு தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து வந்திருக்கும் பாஜகவுக்கும் ஒரு தொகுதி கூட கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல், கடன் வாங்குவது, போதைப்பொருள் விற்பனையில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் கனவில் வீடு கட்டும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக விமர்சித்த அவர், திமுக அளித்த 520 வாக்குறுதிகளில் 10 சதவிகிதம் கூட நிறைவேற்றப்படவில்லை என்றார். மேலும், மக்கள் சிந்திக்காவிட்டால் தமிழகத்தை காப்பாற்ற முடியாது எனவும் அவர் எச்சரித்தார்.

பார்பி பொம்மை போல மாற ஆசைப்பட்டு 43 அறுவை சிகிச்சைகள் செய்த பெண்ணின் நிலைமை மோசமாகியுள்ளது. ஈராக்கை சேர்ந்த டாலியா நயீம் (30) என்ற இளம்பெண் பார்பி போல மாற ஆசைப்பட்டு முகம், மூக்கு மற்றும் மார்பகங்களில் அறுவை சிகிச்சை
செய்துள்ளார். சிகிச்சைக்குப் பின் உதடுகள் வீங்கி முகம் வித்தியாசமாக மாறியுள்ளது. மக்கள் அவரை ஜாம்பி, டெவில் என தற்போது அழைக்கின்றனர். அவரது முகம் எப்படி உள்ளது என நீங்களே கூறுங்கள். 
Sorry, no posts matched your criteria.