India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வரும் ஆண்டில் இருந்து ஒரு டன் கரும்புக்கு ₹4,000 வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். கரும்பு ஊக்கத்தொகை குறித்த அதிமுக எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும், நிலுவையில் இல்லாமல் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள துக்காச்சியம்மன் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது வழங்கி கெளரவித்துள்ளது. 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலின் தொன்மை மாறாமல், புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், விருது வழங்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த கோயிலில் துர்கை அம்மன் இறைவனை வழிபட்டதால், துர்க்கை ஆட்சி என்ற பெயர் துக்காச்சி என மருவியதாக சொல்லப்படுகிறது.
பட்ஜெட் ப்ரெண்ட்லியான பைக் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குத்தான் இந்த செய்தி. ரூ.68,767-க்கு SHINE 100 என்ற பைக்கை அறிமுகம் செய்துள்ளது ஹோண்டா நிறுவனம். கருப்புடன் பச்சை, மஞ்சள், ஊதா உள்ளிட்ட 5 வண்ணங்களில் இந்த புதிய பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 65 கி.மீ. மைலேஜ், அலாய் வீல், 9 லி. கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளிட்ட அம்சங்களுடன் சந்தையில் ஹோண்டா SHINE 100 களமிறக்கப்பட்டுள்ளது.
சிறார் ஆபாச வீடியோ இணையளத்தில் பதிவேற்றும் குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் அளித்த புள்ளி விவரங்களில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2023இல் 2,957 குற்றங்கள் என பதிவாகியிருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் இது 6,079ஆக அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் வியாபார நோக்கில் ஆபாச படம் & வீடியோ பதிவிறக்கம் செய்வோர் கைது செய்யப்படுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பால் கொள்முதல் குறித்து பேரவையில், MLA நந்தகுமார் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், பால் விற்பனையில் தனியாரை விட ஆவின் ₹16 குறைவாக விற்பதாக கூறினார். மேலும், ஆவின் நிறுவனத்தை நட்டம் இல்லாமல் நடத்த வேண்டும் எனக்கூறிய அவர், பால் விற்பனை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆட்சியை விட தற்போது 11 லட்சம் லிட்டர் கூடுதலாக பால் கொள்முதல் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள DMK கொடிகளை 15 நாள்களுக்குள் அகற்றிவிட்டு விவரங்களை தலைமைக்கு அனுப்ப துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத ரீதியிலான அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்றக் கடந்த 6ஆம் தேதி ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் எப்போது வழங்கப்படும் என பேரவையில், MLA சேகர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக ஆட்சி அமைந்த பிறகு பதிவு செய்து காத்திருந்த 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், மீதமுள்ள விவசாயிகளுக்கு CMன் அனுமதி பெற்று முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்படும் என்றார்.
இலங்கை கடற்படையுடன் இந்திய கடற்படையும் கைகோர்த்து தமிழக மீனவர்களுக்கு எதிராக செயல்படுவதாக வைகோவின் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்திய கடற்படை மீதான குற்றச்சாட்டை வைகோ திரும்ப பெற வேண்டும்; அந்த பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்திய நிர்மலா, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
நெல்லையில் ஓய்வு பெற்ற SI ஜாகிர் உசேன் கொலை சம்பவத்தில் கொலையாளிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என CM ஸ்டாலின் கூறியுள்ளார். பேரவையில், அதிமுக கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசிய அவர், கொலை செய்யப்படுவதற்கு நிலப் பிரச்சனையே காரணம் என்றும், கொலைக்கு முன்னர் அவர் வெளியிட்ட வீடியோ குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
CSK vs MI மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கிய நிலையில், 1 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்தன. 38,000 பேர் மட்டுமே அமரக் கூடிய வசதி கொண்ட சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், ஆன்லைன் புக்கிங் செய்ய 2.50 லட்சம் பேர் காத்திருந்தனர். இதில் பலருக்கும் டிக்கெட் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். வரும் 23ஆம் தேதி போட்டி நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.