India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

▶1818 – அமெரிக்கக் கொடியை ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் அங்கீகரித்தது.
▶1939 – இரண்டாம் பைசல் ஈராக்கின் மன்னரானார்.
▶1968 – அமெரிக்காவின் கருப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் படுகொலை செய்யப்பட்டார்.
▶1968 – நாசாவின் ‘அப்பல்லோ 6 விண்கப்பல்’ விண்ணுக்கு ஏவப்பட்டது.
▶1973 – இரட்டை கோபுரங்கள் (Twin Tower) நியூயார்க்கில் திறக்கப்பட்டன.
▶1975 – மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டது.

உலக அளவில் வாட்ஸ் அப் சேவை முடங்கியுள்ளதாக பயனர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவில் மட்டும் சுமார் 30,000க்கும் மேற்பட்ட பயனர்கள் மெசேஜ்களை அனுப்ப முடியவில்லை, பெற முடியவில்லை மற்றும் செயலியை பயன்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளனர். இதனை உறுதி செய்த வாட்ஸ் அப் நிறுவனம், “பிரச்னை சரி செய்யப்பட்டு, விரைவில் 100% சேவையை வழங்க பணியாற்றி வருகிறோம்” என தெரிவித்துள்ளது.

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடி காட்டியுள்ளார். 273 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய டெல்லி அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை தடுமாறி வந்தது. அப்போது பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர் வீசிய 12ஆவது ஓவரில் 4 6 6 4 4 4 என விளாசி அசத்தினார். ஒரே ஓவரில் 28 ரன்கள் குவித்த அவர், தோல்வி விளிம்பில் இருந்த அணிக்கு உயிர் கொடுத்தார்.

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: அடக்கமுடைமை
▶குறள் எண்: 125
▶குறள்: எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
▶விளக்கம்: பணிவு என்னும் பண்பு, எல்லோருக்கும் நன்மை பயக்கும். அதனால், ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு மேலும் ஒரு செல்வமாகும்.

தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதை படம் பிடித்து புகார் செய்வதற்கு, சி-விஜில் (cVIGIL) என்ற செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. கடந்த மார்ச் 16ஆம் தேதியில் இருந்து, இந்த செயலி மூலம் பலர் புகார்களை அனுப்பி வருகின்றனர். இதுவரை 2,193 புகார்கள் இந்த செயலிக்கு வந்துள்ளன. அவற்றில் 1,694 புகார்களின் உண்மைத் தன்மை அறியப்பட்டு ஏற்கப்பட்டன. அதிகபட்சமாக கரூர்-372, சென்னை-209 புகார்கள் ஏற்கப்பட்டுள்ளன.

அதிமுக இல்லையென்றால் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வந்திருக்காது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், “அதிமுக கொடுத்த தொடர் அழுத்தத்தால் தான் மகளிர் உரிமைத் தொகையை திமுக அரசு வழங்குகிறது. ரூ.1,000 உரிமைத் தொகையை யாராலும் நிறுத்த முடியாது, அதற்கு நான் பொறுப்பு. உரிமைத் தொகையை நிறுத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.

இன்று (ஏப்ரல் 4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

சென்னை – நாகர்கோவில் இடையே வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை, மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வரும் 25ஆம் தேதி வரை (வியாழக்கிழமைகளில்) சென்னை எழும்பூரில் இருந்து காலை 05.15 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். நாகர்கோவிலில் இருந்து மதியம் 02.50 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

பிரதமர் மோடி, தோல்வி பயத்தில் ஒவ்வொரு நாளும் பொய், புரளியை கிளப்பி வாக்கு வாங்க நினைக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், “பாஜக ஆண்டதும் போதும். மக்கள் மாண்டதும் போதும். அரசியல் சட்டம் காக்க, பாஜக அரசை முதலில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இது ஏப்ரல் மாதம் தான், பிரதமர் மோடியின் குழப்பம் ஜூன் மாதத்தில் தீர்ந்துவிடும்” எனத் தெரிவித்தார்.

இன்று (ஏப்ரல் 4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
Sorry, no posts matched your criteria.