News March 19, 2025

மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்ய BJP முயற்சி: சேகர்பாபு

image

மதத்தை வைத்து அரசியல் செய்ய நினைத்தவர்களுக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் கோயில்களில் 2 பக்தர்கள் உடல்நலக் குறைவு காரணமாகவே உயிரிழந்ததாகவும், அதை திசைத் திருப்ப அண்ணாமலை போன்றோர் முயல்வதாகவும் அவர் சாடியுள்ளார். கூட்ட நெரிசலில் உயிரிழந்ததாக இந்து சமய அறநிலையத்துறை மீது பாஜகவினர் களங்கம் கற்பிப்பதாகவும் கூறியுள்ளார்.

News March 19, 2025

KL ராகுலுக்கு வந்த சோதனை… டெல்லியில் இப்படி மாற்றமா?

image

பேட்டிங்கில் எந்த வரிசையிலும் களமிறங்கி கலக்கக் கூடியவர் KL ராகுல். ஐபிஎல் தொடர்களில் ஓப்பனராக களமிறங்கி வரும் அவரை, டெல்லி அணி ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், டெல்லி அணியில் அவர் ஓப்பனர் இல்லையாம். டு பிளெசிஸ், அபிஷேக் போரெல் ஆகியோர்தான் ஓப்பனர்களாக களமிறங்குவர் என்றும், KL ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி உங்க கருத்து என்ன?

News March 19, 2025

போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறை

image

ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசையைச் சேர்ந்தவர் அருள்நேசன் (29). இவர் கடந்த 2017ஆம் ஆண்டு 14 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம், அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

News March 19, 2025

கோலி அதிருப்தி எதிரொலி: விதியை மாற்றும் பிசிசிஐ?

image

வெளிநாட்டு பயணங்களில் வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் தங்கலாம் என்ற விதியை BCCI மறுபரிசீலனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய நடைமுறை வீரர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் எனவும், குடும்பத்தின் ஆதரவு எப்போதும் முக்கியம் என்றும் கோலி அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில், விதியில் மாற்றம் கொண்டு வர BCCI முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

News March 19, 2025

2 குழந்தைகள் பெற்றால் வரி இல்லை… எங்கு தெரியுமா?

image

குழந்தை பெற்ற தாய்மார்கள் வரி கட்ட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது, இது இந்தியாவில் அல்ல, ஹங்கேரியில். மக்கள் தொகை குறைந்து வருவதால் அந்நாட்டு PM விக்டர் ஆர்பன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ‘1 குழந்தை பெற்ற பெண்கள் 30 வயது வரையும், 2 குழந்தைகள் பெற்றால் வாழ்நாள் முழுவதும் வருமான வரி கட்ட வேண்டாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த நிலை வருமா?

News March 19, 2025

நாக்பூர் கலவரம் திட்டமிட்ட சதி: பட்நாவிஸ்

image

நாக்பூரில் நிகழ்ந்த கலவரம் திட்டமிட்ட சதிச் செயல் என மஹாராஷ்டிரா CM தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கலவரம் குறித்து பேசிய அவர், அவுரங்கசீப்புக்கு எதிராக மக்கள் கொந்தளிக்க சாவா திரைப்படமே காரணம் என விளக்கம் அளித்தார். இக்கட்டான சூழலில் மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டார். கலவரம் பாதித்த பகுதிகளில் ஊரடங்கு அமலில் உள்ளதால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.

News March 19, 2025

4 பேர் தற்கொலைக்கு இதுதான் காரணமா?

image

சென்னையை சேர்ந்த டாக்டர் பாலமுருகன், தனது மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. வட்டிக்கு கடன் வாங்கிய பாலமுருகனிடம், ஒரே நாளில் ரூ.1 கோடி தர வேண்டும் என கந்துவட்டிக்காரர்கள் மிரட்டியுள்ளனர். ஆனால், ஒருநாளில் ரூ.1 கோடி திரட்ட முடியாததால், பயத்தில் குடும்பத்துடன் அவர் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

News March 19, 2025

ஐபிஎல் சாம்பியன்கள் யார்-யார்?

image

2008 முதல் ஐபிஎல் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளை பார்க்கலாம். *ராஜஸ்தான் ராயல்ஸ் (2008) *டெக்கான் சார்ஜர்ஸ் (2009)*சிஎஸ்கே (2010) *சிஎஸ்கே (2011)* கேகேஆர் (2012)*மும்பை (2013)*கேகேஆர் (2014)*மும்பை (2015)*ஹைதராபாத் (2016) *மும்பை (2017) *சிஎஸ்கே (2018) *மும்பை (2019 ) *மும்பை (2020) *சிஎஸ்கே (2021) *குஜராத் (2022) *சிஎஸ்கே (2023) *கேகேஆர் (2024).

News March 19, 2025

JOB ALERTS: இந்தோ திபெத் படையில் வேலைவாய்ப்பு

image

இந்தோ-திபெத்திய பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 133 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன. இதற்கு கல்வித் தகுதி 10ஆம் வகுப்புத் தேர்ச்சி. வயது வரம்பு 18-23 வரை. வேலையில் சேர விரும்புவோர் இந்தோ-திபெத்திய பாதுகாப்புப் படை இணையதளமான <>இதில் <<>>விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 2ஆம் தேதி கடைசி நாளாகும். SHARE IT.

News March 19, 2025

இஸ்ரேல் தாக்குதலில் 400 பேர் பலி: ஹமாஸ்

image

இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 400 பேர் பலியாகி இருப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. 59 பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் நிபந்தனை விதித்ததால், 2 மாத சண்டை நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் ஹமாஸ் தலைவர் உள்ளிட்ட 400 பேர் உயிரிழந்து இருப்பதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இதனிடையே, தாக்குதலை தீவிரபடுத்த போவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

error: Content is protected !!