News March 19, 2025

பக்தர் குடும்பத்திற்கு ₹10 லட்சம் வழங்குக: அண்ணாமலை

image

திருச்செந்தூர் கோயிலில் உயிரிழந்த பக்தர் ஓம் குமாரின் குடும்பத்திற்கு ₹10 லட்சம் வழங்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். மேலும் கோயில்களில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க, தமிழக அரசு முறையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். திருச்செந்தூர் கோயிலுக்கு தரிசனம் செய்யச் சென்ற ஓம் குமார், கூட்ட நெரிசலால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியானார்.

News March 19, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News March 19, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News March 19, 2025

நோன்பிலும் ரத்த தானம்… மதங்களை வென்ற மனிதம்!

image

என்னதான் சாதி, மதம்னு அடிச்சிக்கிட்டாலும் கடைசியா ஜெயிக்கிறது மனிதம்தான். அப்படி ஒற்றுமைக்கு உதாரணமான சம்பவம் கொல்கத்தாவுல நடந்திருக்கு. கிட்னி பாதிக்கப்பட்ட இந்து பெண் சங்கீதாவுக்கு அவசரமா ரத்தம் தேவைப்பட்டிருக்கு. இத தெரிஞ்சிகிட்ட முஸ்லீம் பையன் நசிம் மலிதா, ரம்ஜான் நோன்புக்கு நடுவுலயும் ரத்தம் கொடுத்து அந்த பெண்ணுக்கு உதவி இருக்காரு. மதங்கள தாண்டி நாம எல்லாம் எப்பவும் ஒன்னுதான்!

News March 19, 2025

மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்ய BJP முயற்சி: சேகர்பாபு

image

மதத்தை வைத்து அரசியல் செய்ய நினைத்தவர்களுக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் கோயில்களில் 2 பக்தர்கள் உடல்நலக் குறைவு காரணமாகவே உயிரிழந்ததாகவும், அதை திசைத் திருப்ப அண்ணாமலை போன்றோர் முயல்வதாகவும் அவர் சாடியுள்ளார். கூட்ட நெரிசலில் உயிரிழந்ததாக இந்து சமய அறநிலையத்துறை மீது பாஜகவினர் களங்கம் கற்பிப்பதாகவும் கூறியுள்ளார்.

News March 19, 2025

KL ராகுலுக்கு வந்த சோதனை… டெல்லியில் இப்படி மாற்றமா?

image

பேட்டிங்கில் எந்த வரிசையிலும் களமிறங்கி கலக்கக் கூடியவர் KL ராகுல். ஐபிஎல் தொடர்களில் ஓப்பனராக களமிறங்கி வரும் அவரை, டெல்லி அணி ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், டெல்லி அணியில் அவர் ஓப்பனர் இல்லையாம். டு பிளெசிஸ், அபிஷேக் போரெல் ஆகியோர்தான் ஓப்பனர்களாக களமிறங்குவர் என்றும், KL ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி உங்க கருத்து என்ன?

News March 19, 2025

போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறை

image

ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசையைச் சேர்ந்தவர் அருள்நேசன் (29). இவர் கடந்த 2017ஆம் ஆண்டு 14 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம், அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

News March 19, 2025

கோலி அதிருப்தி எதிரொலி: விதியை மாற்றும் பிசிசிஐ?

image

வெளிநாட்டு பயணங்களில் வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் தங்கலாம் என்ற விதியை BCCI மறுபரிசீலனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய நடைமுறை வீரர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் எனவும், குடும்பத்தின் ஆதரவு எப்போதும் முக்கியம் என்றும் கோலி அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில், விதியில் மாற்றம் கொண்டு வர BCCI முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

News March 19, 2025

2 குழந்தைகள் பெற்றால் வரி இல்லை… எங்கு தெரியுமா?

image

குழந்தை பெற்ற தாய்மார்கள் வரி கட்ட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது, இது இந்தியாவில் அல்ல, ஹங்கேரியில். மக்கள் தொகை குறைந்து வருவதால் அந்நாட்டு PM விக்டர் ஆர்பன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ‘1 குழந்தை பெற்ற பெண்கள் 30 வயது வரையும், 2 குழந்தைகள் பெற்றால் வாழ்நாள் முழுவதும் வருமான வரி கட்ட வேண்டாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த நிலை வருமா?

News March 19, 2025

நாக்பூர் கலவரம் திட்டமிட்ட சதி: பட்நாவிஸ்

image

நாக்பூரில் நிகழ்ந்த கலவரம் திட்டமிட்ட சதிச் செயல் என மஹாராஷ்டிரா CM தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கலவரம் குறித்து பேசிய அவர், அவுரங்கசீப்புக்கு எதிராக மக்கள் கொந்தளிக்க சாவா திரைப்படமே காரணம் என விளக்கம் அளித்தார். இக்கட்டான சூழலில் மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டார். கலவரம் பாதித்த பகுதிகளில் ஊரடங்கு அமலில் உள்ளதால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.

error: Content is protected !!