News April 9, 2024

IPL: தோனியின் புதிய சாதனை

image

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி புதிய சாதனையை படைத்திருக்கிறார். இதுவரை மொத்தம் 28 ஐபிஎல் போட்டிகளில் அணியை வெற்றிப் பாதைக்கு தோனி அழைத்துச் சென்றிருக்கிறார். அதாவது, கடைசி பந்து வரை ஆட்டமிழக்காமல் இருந்திருக்கிறார். இந்த சாதனையின் இரண்டாவது இடத்தில் 27 போட்டிகளுடன் ஜடேஜா இருக்கிறார். 23 போட்டிகளுடன் தினேஷ் கார்த்திக் மூன்றாம் இடம் பிடிக்கிறார்.

News April 9, 2024

கூத்தாண்டவர் கோயில் திருவிழா தொடங்கியது

image

கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இன்று முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை (18 நாள்கள்) இத்திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்வு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இத்திருவிழாவிற்காக நாடு முழுவதும் இருந்து ஏராளமான திருநங்கைகள் கூவாகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

News April 9, 2024

எந்த முகத்துடன் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்?

image

தமிழகத்திற்கு எதையுமே செய்யாத பிரதமர் மோடி, எந்த முகத்துடன் தமிழகத்திற்கு வருகிறார் என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை பிரசாரத்தில் பேசிய அவர், எதிர்க்கட்சியினர் ஆளும் மாநிலங்களுக்கு மோடி தொல்லை கொடுப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், தேர்தலுக்குப் பின் வரவுள்ள நாட்டின் புதிய பிரதமர் தற்போதை பிரதமர் போல இல்லாமல், தமிழக மக்கள் மீது பாசம் கொண்டவராக இருப்பார் என அவர் உறுதி அளித்தார்.

News April 9, 2024

நாளை மாலை இறுதிச்சடங்கு

image

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் (98) இன்று காலமானார். இவரது உடலுக்கு அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இவரது உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும், மாலை 4 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

News April 9, 2024

BREAKING: ஏப்ரல் 11ஆம் தேதி ரம்ஜான்

image

தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் 11ஆம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். இன்று பிறை தெரியாததால் ரம்ஜான் பண்டிகை 11ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் அரசு விடுமுறையாக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிக் கல்லூரிகள் அன்றைய தினம் இயங்காது.

News April 9, 2024

விஷ்ணு விஷால், சூரி மீண்டும் இணைந்தனர்

image

சினிமாத்துறையில் பல ஆண்டுகளாக நீடித்துவந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்திருக்கிறது. மிக நெருக்கமாக இருந்துவந்த நடிகர்கள் விஷ்ணு விஷாலுக்கும் சூரிக்கும் இடையே நிலம் வாங்கிக் கொடுப்பது தொடர்பான பிரச்னை எழுந்தது. விஷ்ணு விஷாலும் அவரது தந்தையும் தன்னை ஏமாற்றிவிட்டதாக சூரி 2020ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், அவர்கள் மூவரும் இணைந்து தற்போது ஃபோட்டோ வெளியிட்டுள்ளனர்.

News April 9, 2024

சீனாவின் வளர்ச்சியை மிஞ்சிய இந்தியா

image

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் புவிசார் அரசியலில் இந்தியா முக்கிய இடத்தை வகிக்கும் என்று ஐரோப்பிய நாடாளுமன்ற கொள்கை நிபுணர் ஆஞ்சலோஸ் டெலிவோரியஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “சீனாவின் வளர்ச்சி விகிதத்தை இந்தியா குறுகிய காலத்தில் விஞ்சிவிட்டது. 2026 இல் சீனாவின் ஜிடிபி 4.6%-ஐ எட்டும்போது, இந்தியாவின் ஜிடிபி 7 சதவீதத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

News April 9, 2024

ஒரே குடும்பத்தில் 17 பேருக்கு ஒரே நேரத்தில் திருமணம்

image

ஒரு குழந்தைக்கு திருமணம் செய்துவைக்கவே பெற்றோர்கள் திண்டாடும் நிலையில், ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேருக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சுர்ஜராம் கோதாரா என்ற நபர் தனது பேரன்கள் 12 பேர், பேத்திகள் 5 பேர் என 15 பேரின் திருமணத்தை 2 நாட்களில் முடித்து வைத்துள்ளார். அனைவருக்கும் 2 நாள்களில் திருமணம் நடந்ததால் செலவும் குறைந்துள்ளது.

News April 9, 2024

சாவு எப்படி எல்லாம் வருது பாருங்க

image

புதுக்கோட்டையில் எச்சரிக்கை இல்லாத வேகத்தடையில் தடுக்கி விழுந்து காவல் ஆய்வாளர் ப்ரியா உயிரிழந்திருக்கிறார். புதிய பேருந்து நிலையம் அருகே புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் வேகத் தடையில் வெள்ளை நிறம் பூசப்படாமலும், எச்சரிக்கை பலகை வைக்கப்படாமலும் இருக்கிறது. இரு சக்கர வாகனத்தில் சென்ற பிரியா, வேகத்தடையில் நேற்று தவறி விழுந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News April 9, 2024

அடிக்கடி நிறம் மாறக்கூடியவர் டிடிவி தினகரன்

image

டிடிவி தினகரன் அடிக்கடி நிறம் மாறக்கூடியவர் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தேனி பிரசாரத்தில் பேசிய அவர், நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி தான் பாஜக எனக் கூறிய தினகரனே தற்போது அந்தக் கூட்டணியில் இருப்பதாக விமர்சித்தார். மேலும் தனது சுயநலத்திற்காக கட்சி மாறிச் சென்றவர்களுக்கு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!