India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

டி20 போட்டிகள் பவுலர்களுக்கு கடினமாகவே இருக்கும் என பும்ரா கூறியுள்ளார். யார்கர் மட்டுமே வீசி எதிரணியை வெல்ல முடியாது என்ற அவர், தனித் திறமைகளை வளர்த்துக் கொள்வதே டி20 கிரிக்கெட்டில் வெற்றிக்கான முக்கிய வழி என்றார். தொடர்ந்து பேசிய அவர், வெற்றியோ, தோல்வியோ அதை நினைத்து தான் பெரிய அளவில் சந்தோஷம் பட மாட்டேன் எனக் கூறினார். ஆர்சிபிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

◾பால்: பொருட்பால்
◾அதிகாரம்: அறிவுடைமை
◾குறள்: 421
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
◾விளக்கம்:
பகையால் அழிவு வராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.

ஒரு காலத்தில் சின்ன கோடம்பாக்கமாக இருந்த ஊட்டியில், தற்போது படப்பிடிப்பும் நடப்பதில்லை என நடன இயக்குநர் கலா தெரிவித்துள்ளார். நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. ஆனால், அதை மறைக்கிறார்கள். இன்றைக்கு கவுன்சிலர்களை கூட உடனடியாக பார்க்க முடியாது. ஆனால், எல்.முருகனை எப்போதும் பார்க்க முடியும் என்றார்.

தமிழக அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கத்தரிக்காய்க்கு கால் முளைத்த மாதிரி அண்ணாமலை தன்னை பெரிய ஆளாக நினைத்துக்கொண்டு பேசி வருகிறார். அரசியல் என்றால் என்னவென்று தெரியாத அவர் அதிமுகவுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்ற அவர், பாஜக நோட்டாவை தாண்டுமா? என்று கேள்வி எழுப்பினார். அதிமுகவை அழிக்க நினைத்த ஜாம்பவான்களே இருக்கும் இடம் தெரியாமல் போனார்கள் என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 3 முறை டக் அவுட் ஆகியுள்ளார் க்ளென் மேக்ஸ்வெல். 6 போட்டிகளிலும் முறையே 0, 3, 28, 0, 1, 0 ரன்களை அடித்துள்ளார். இதுவரை எந்த ஐபிஎல் தொடரிலும் இல்லாத வகையில் மோசமான ஃபார்மில் அவர் உள்ளதாக ஆர்சிபி ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள். மேலும், ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலிலும் மேக்ஸ்வெல் முதலிடத்தில் உள்ளார்.

இன்று (ஏப்ரல் 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

அதிமுகவை யாரும் எதுவும் செய்ய முடியாது என இபிஎஸ் தெரிவித்துள்ளார். எத்தனையோ சோதனைகளை அதிமுக கடந்து வந்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசிர்வாதம் இருக்கும் வரை அதிமுகவை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்ற அவர், வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெறும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், பொய்களை மட்டுமே பேசி வரும் திமுகவுக்கு, மக்கள் தகுந்த தண்டனையை தேர்தலில் தருவார்கள் என்றும் கூறினார்.

பிறந்த குழந்தைக்கு பழைய துணிகளை முதலில் அணிவிப்பதை சிலர் சம்பிரதாயமாக வைத்துள்ளார்கள். நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்த பிறகே அணிவிக்க வேண்டும். சில இடங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் குழந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுத்தும்.

தேர்தலின் போது திமுக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார். நெல்லையில் பேசிய அவர், இந்தியாவை காப்பாற்ற அழைக்கும் முதல்வர் இதுவரை தமிழ்நாட்டை காப்பாற்ற எதையும் செய்யவில்லை என்றார். மேலும், மாநில உரிமைகளை பிரதமர் தொடர்ந்து பறித்துக்கொண்டு, தமிழ்நாட்டுக்கு வேட்டு வைத்துக்கொண்டு இருப்பதாக கூறிய அவர், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி வெல்லும் எனவும் கூறினார்.

இன்று (ஏப்ரல் 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
Sorry, no posts matched your criteria.