News April 14, 2024

80% தள்ளுபடி விலையில் மருந்துகள்

image

மக்கள் மருந்தகத்தில் 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். டெல்லி பாஜக தலைமையகத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அவர், பெண்கள், இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

News April 14, 2024

‘சச்சின்’ படம் வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவு

image

ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘சச்சின்’ படம் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் என பலர் நடித்திருந்த இப்படம், ஃபீல் குட் திரைப்படமாக இருந்து வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் அனைத்து பாடல்களும் இன்றும் பலரின் ஃபிளேலிஸ்டில் இடம் பிடித்துள்ளது. இப்படம் நல்ல வசூலை தராவிட்டாலும், விஜய் நடித்த நல்ல படங்களில் சச்சினுக்கு தனி இடம் உண்டு.

News April 14, 2024

இவர்களை முன்னிலைப்படுத்தி பாஜக தேர்தல் வாக்குறுதி

image

பாஜகவின் தேர்தல் அறிக்கையை நாடே எதிர்பார்த்து காத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தனது தேர்தல் அறிக்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் களத்தில் உத்தரவாதமாக அமல்படுத்தியுள்ளதாகக் கூறினார். நாட்டின் தூண்களான பெண்கள், இளைஞர்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளை முன்னிலைப்படுத்தி தேர்தல் அறிக்கையை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

News April 14, 2024

BREAKING: ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS

image

மேலும் 5 ஆண்டுகளுக்கு இலவச ரேசன் பொருள்கள் வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 70 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். ஏழைகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பது உறுதி செய்யப்படும். வேலைவாய்ப்பு, முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.

News April 14, 2024

மோடியின் உத்தரவாதம், 24 காரட் தங்கம் போன்றது

image

பிரதமர் மோடியின் உத்தரவாதம், 24 காரட் தங்கத்துக்கு சமம் என்று பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டபிறகு பேசிய அவர், இன்றைய இந்திய அரசியலில், மோடியின் உத்தரவாதமானது, 24 காரட் தங்கம் போல மிக தூய்மை வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது என்றார். உலக அரசியல் கட்சிகளில், பாஜக தேர்தல் அறிக்கைதான் சுத்தமான தங்கம் என்றும் அவர் கூறினார்.

News April 14, 2024

பாஜக தேர்தல் அறிக்கையை தயாரித்த 27 பேர்

image

2024 மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை 27 பேர் குழு தயாரித்துள்ளது. அந்தக் குழுவின் தலைவராக பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் செயல்பட்டார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருங்கிணைப்பாளராகவும், மற்றொரு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் துணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டனர். நாட்டு மக்கள் கருத்துகளை கேட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

News April 14, 2024

ஒரே நாடு, ஒரே தேர்தல்

image

ஒரே நாடு, ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவான வாக்காளர் பட்டியல் அறிமுகப்படுத்தப்படும். 2025ஆம் ஆண்டு பழங்குடியின பெருமை ஆண்டாக கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 14, 2024

நாளை இவர்களுக்கு ரூ.1000 கிடைக்காது

image

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்க எந்த தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டதால், குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் நாளை ரூ.1000 வந்து சேர்ந்துவிடும். சரியான பயனாளிகளுக்கு ரூ.1000 செல்கிறதா என்பதை அறிய, தற்போது வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் செலுத்தப்படுகிறது . அதே நேரம் தேர்தல் காரணமாக மேல்முறையீடு செய்த மகளிருக்கு இம்மாதம் ரூ.1000 வழங்கப்படாது. அவர்களுக்கு அடுத்த மாதம் வழங்கப்படும்.

News April 14, 2024

அம்பேத்கர் பிறந்தநாளில் தேர்தல் அறிக்கை

image

அம்பேத்கர் பிறந்தநாளில் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுவதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஜக எப்போதும் சமூக நீதிக்காகப் போராடுவதாக தெரிவித்தார். 4 லட்சம் பேரிடம் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார்.

News April 14, 2024

IPL 2024: அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் 3 வீரர்கள்

image

IPLஇல் இதுவரை நடந்த போட்டிகள் அடிப்படையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்களை பிசிசிஐ பட்டியலிட்டுள்ளது. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் யுவேந்திர சாஹல் 11 விக்கெட்டுகளுடன் (6 போட்டி) முதலிடத்தில் உள்ளார். மும்பை இந்தியன்ஸ் வீரர் பும்ரா 10 விக்கெட்டுகளுடன் (5 போட்டி) 2ஆவது இடத்திலும், சென்னை வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் 9 விக்கெட்டுகளுடன் (4 போட்டி) 3வது இடத்திலும் உள்ளனர்.

error: Content is protected !!