India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நடிகர் ரஜினி எப்போதும் வாக்கு செலுத்தும் மத்திய சென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், சுமார் 5 நிமிடங்கள் மேல் வாக்குபதிவு நிறுத்தப்பட்டதால், நடிகர் கௌதம் கார்த்திக், பொதுமக்கள் காத்திருக்கின்றனர். வாக்கு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்கட்டத் தேர்தலில் இளம் வாக்காளர்கள் பெருவாரியாக திரண்டு வந்து வாக்களிக்க வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். X-இல் அவர் வெளியிட்டுள்ள பதிவில், வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இதில் சாதனை அளவாக அனைவரும் வாக்குப்பதிவு செய்ய வேண்டுமென்றும், இளம் வாக்காளர்கள், முதல்முறை வாக்காளர்கள் பெருவாரியாக வாக்களிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், திண்டுக்கல் 18வது வார்டு மற்றும் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காந்திநகரில் வாக்கு இயந்திரம் செயல்படவில்லை. இதனால், அங்கு சற்றுநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், வாக்கு செலுத்த ஆவலுடன் வந்த மக்கள், நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

மும்பைக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணியின் வெற்றிக்கு இளம் வீரர்கள் கடுமையாக போராடியுள்ளனர். சாம் கரண், ப்ரப்சிம்ரன், ரைலி, ஹர்ப்ரீத், ஜிதேஷ் ஷர்மா உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஷஷாங் சிங், அஷுதோஷ் ஷர்மா ஆகியோர், 4 Four, 10 Six என விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் கடைசி வரை போராடியும், பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. முதல் கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்தவகையில், அதிகாலையிலேயே ஜனநாயக கடமையாற்ற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தென் சென்னைக்கு உட்பட்ட திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று நடிகர் அஜித் முதல் ஆளாக தனது வாக்கை செலுத்தினார்.

102 மக்களவைத் தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. இதையடுத்து வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜனவரி முதல் இதுவரை 80 நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரில் பதுங்கியுள்ள நக்சல்களை பாதுகாப்புப் படையினர் தேடிப் பிடித்து வேட்டையாடி வருகின்றனர். அதன்படி ஜனவரி மாதம் முதல் இதுவரை 80 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 29 பேர் கடந்த 2 நாள்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டவர்கள். மேலும், 150 பேர் சரண் அடைந்துள்ளனர்

இந்திய கடற்படைக்கு புதிய தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படைத் தளபதி ஹரிகுமார் விரைவில் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அந்தப் பதவிக்கு துணைத் தளபதி தினேஷ் திரிபாதியை மத்திய அரசு நியமித்துள்ளது. தினேஷ் திரிபாதி, 1985ஆம் ஆண்டு முதல் கடந்த 40 ஆண்டுகாலம் கடற்படையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். அவர் வருகிற 30ஆம் தேதி கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்கவுள்ளார்.

பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில், மும்பை அணி பந்துவீச்சில் மிரட்டியது. முதலில் ஆடிய மும்பை அணி, 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி, மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 100 ரன்களுக்குள்ளேயே 6 விக்கெட்டுகளை இழந்தது. அபாரமாக பந்துவீசிய பும்ரா, கோட்ஸி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் மும்பை அணி, 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடிகர் விஜய், கடந்த சட்டமன்றத் தேர்தலில் கருப்பு – சிவப்பு வண்ணம் கொண்ட சைக்கிளில் வாக்கு செலுத்த வந்தார். தற்போது அவர், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியபின், முதல்முறையாக வாக்கு செலுத்த உள்ளார். இதனால், அவர் எந்தமாதிரியான குறியீடு உடன் வருவார், தனது கட்சி கொடியின் வண்ணத்தை மறைமுகமாக வெளிப்படுத்துவாரா என நெட்டிசன்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.