News March 18, 2025

ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு: சிபிஐ விசாரிக்க தடை

image

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பதவிக் காலத்தில் ஆவின் நிறுவனத்தில் ₹3 கோடி வரை முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் 400 பக்க ஆவணங்களை, மொழிபெயர்த்து தருமாறு ஆளுநர் கேட்பதாக உச்ச நீதிமன்றத்தில் TN அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் கேட்ட ஆவணங்களை 2 வாரத்திற்குள் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

News March 18, 2025

மொத்த விலை பணவீக்கம் உயர்வு

image

நாட்டின் மொத்த விலை பணவீக்கம், பிப்ரவரி மாதத்தில் 2.38% ஆக உயர்ந்துள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது, கடந்த ஜனவரி மாதத்தில் 2.31% ஆகவும், கடந்தாண்டு பிப்ரவரியில் 0.20% ஆகவும் இருந்தது. சமையல் எண்ணெய், குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்ந்ததே, பணவீக்கம் அதிகரிக்க முக்கிய காரணமாக இருந்தது. சமையல் எண்ணெய் 33.59%, குளிர்பானங்கள் 1.66% ஆகவும் உயர்ந்துள்ளன.

News March 18, 2025

அண்ணாமலைக்கு தவெக பதிலடி

image

லண்டன் ஸ்கூல் மாணவர் அண்ணாமலை அரசியலை சரியாக படிக்காமல் பாதியில் வந்துவிட்டு, BJP- DMK கள்ளக்கூட்டணி வெளிவரத் துவங்கியதும் விழி பிதுங்கி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதாக தவெக பதிலடி கொடுத்துள்ளது. மாநிலத் தலைவராக இல்லாவிட்டால், உங்களை மக்கள் கடுகளவும் மதிக்க மாட்டார்கள், கண்டுகொள்ளவும் மாட்டார்கள் . எத்தனை காலம் இது போல் பேசியும், சாட்டையால் அடித்தும் ஏமாற்றுவீர்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

News March 18, 2025

வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர தடை!

image

நாக்பூரில் அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காரணங்கள் தவிர, வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. வன்முறை பாதித்த பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டுள்ளன. முகமூடி அணிந்து வந்தவர்கள்தான் கலவரத்தில் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

News March 18, 2025

BREAKING: அதிகாலையில் மீனவர்கள் கைது

image

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், அதிகாலையில் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி விசைப்படகுடன் சிறை பிடிக்கப்பட்டனர். தொடரும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

News March 18, 2025

6 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம்

image

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், 6 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மார்ச் 23 வரை, TNஇல் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல மார்ச் 21 வரை, வெப்ப நிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News March 18, 2025

போர்… டிரம்ப்-புதின் இன்று பேச்சுவார்த்தை

image

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், USA அதிபர் டிரம்ப் இன்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ரஷ்யா-உக்ரைன் போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர, PM மோடி உள்பட பல நாட்டுத் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், டிரம்ப்-புதின் ஆகியோரது இன்றைய சந்திப்பு உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. போர் முடிவுக்கு வருமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

News March 18, 2025

தினம் ஒரு ஜூஸ்… எப்போதும் ஃபிரஷ்

image

*பச்சை காய்கறி சாறு உடலுக்கு வலிமை தருவதுடன், புற்றுநோய் அபாயத்தை தடுக்கும்.
*மாதுளம் பழச்சாறு ரத்த சோகையை நீக்குவதுடன், உடலுக்கு உடனடி ஆற்றல் தரும்.
*நெல்லிக்காய் ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, செரிமானத்தைத் தூண்டும்.
*பன்னீர் திராட்சை ஜூஸ் உடலில் ஏற்படும் நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும்.
*பிளம் ஜூஸ் வயிறு தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் நிவாரணம் அளிக்கும்.

News March 18, 2025

இங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

image

தருமபுரி மாவட்டம் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று (மார்ச் 18) அரூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பொதுத்தேர்வில் எவ்வித மாற்றமுமில்லை. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 29ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

News March 18, 2025

67 பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை

image

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் புதிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (LTTE), லஷ்கர்-இ-தொய்பா, காலிஸ்தான் ஜிந்தாபாத் படை உள்ளிட்ட 67 அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும், உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதற்காகவும் மேற்கண்ட அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!