India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமைச்சர் ஐ.பி.,க்கு சொந்தமான இடங்களில் ED சோதனை நடக்கிறது. ரெய்டில் இன்னும் பல அமைச்சர்கள் சிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தென் பகுதியில் இந்த ரெய்டு ஒரு புயலை கிளப்புமாம். அதாவது, அமைச்சர்கள் மூர்த்தி(மதுரை), KKSSR.ராமச்சந்திரன் (விருதுநகர்), பெரியகருப்பன்(சிவகங்கை) ஆகியோர் இந்த பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ரெய்டு தி.மலையில் என EPS கூறியதால் வேலுவும் பட்டியலில் இருக்கலாம்.
கிடைக்கும் யூடியூப் சேனல்களில் எல்லாம் நேர்காணல்கள், ஆடியோ லாஞ்ச்சில் துதிபாடல்கள், அல்டிமேட் ஸ்டார் காஸ்ட் என பல இருந்தும் சரியான திரைக்கதை இல்லாததால் ‘கூலி’ கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில், செப்.5-ல் ரிலீஸாகவுள்ள ‘மதராஸி’ படத்துக்கு அதிக புரமோஷன் செய்து ரசிகர்களுக்கு தேவையில்லாத எதிர்பார்ப்பை அளிக்கப் போவதில்லை என AR முருகதாஸ் கூறியுள்ளார். வெற்றி பெறுவாரா SK?
பாமகவின் சிறப்பு பொதுக்குழு இன்று(ஆக., 17) நடக்கவிருக்கிறது. இதில் ராமதாஸ் அதிரடி தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ராமதாஸ் அறிவித்திருந்த அன்புமணியின் செயல் தலைவர் பதவி பறிக்கப்படவுள்ளதாகவும், அனைத்து அதிகாரமும் நிறுவனர் ராமதாஸுக்கு மட்டுமே என விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட இருக்கிறதாம். மூத்த மகள் காந்திமதிக்கு முக்கிய பொறுப்பு வழங்க வாய்ப்பிருக்கிறது.
அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியுள்ளதாக ED தெரிவித்துள்ளது. சொத்து ஆவணங்கள், முதலீடு விவரங்கள், செல்போன் தகவல்கள், நிறுவனத்தின் வங்கிக் கணக்கு விவரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக சம்மன் அனுப்பி ஐ.பெரியசாமியை விசாரணைக்கு அழைக்கவும் ED திட்டமிட்டுள்ளது. தேர்தல் வரவிருக்கும் நிலையில், இது அவருக்கு பயங்கர நெருக்கடியாக மாறியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கொடிகட்டி பறந்த கே.பி.எஸ். (பழம்பெரும் நடிகை கே.பி.சுந்தராம்பாளால் கட்டப்பட்ட) திரையரங்கம் இடிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய 3 பேரும் ஒன்றாக வந்து திறந்து வைத்த வரலாற்று சிறப்பு இந்த திரையரங்கிற்கு இருக்கிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கருணாநிதியும், எம்ஜிஆரும் தியேட்டரை திறந்து வைக்க, ஜெயலலிதா குத்து விளக்கு ஏற்றினார்.
பாஜகவை மீண்டும் கழட்டி விட்டுவிட்டு தவெகவுடன் அதிமுக இணையலாம் என்ற தகவல் அரசியல் அரங்கில் உலாவுகிறது. ஆனால் அப்படி நிச்சயமாக நடக்காது, அதற்கு BJP-யும் அனுமதிக்காது என்கிறார் மைத்ரேயன். சமீபத்திய பேட்டி ஒன்றில், அதிமுக கூட்டணிக்கு 2026 தேர்தல் மிகப்பெரிய தோல்வியை தரும் என்றார். ADMK-விலிருந்து பலரும் வெளியேறக் காரணம், சரியான தலைமை இல்லாததே என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
எல்லாவற்றிலும் கமிஷன் கிடைப்பதால், விலைவாசி உயர்வு பற்றி திமுக அரசு கவலைப்படவில்லை என EPS விமர்சித்துள்ளார். வந்தவாசியில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், திமுகவை பொறுத்தவரை ஊழல் செய்வதற்கு தேசிய விருது கொடுக்கலாம் என சாடியுள்ளார். அதிமுக ஆட்சி அமையும்போது திமுக அரசின் 5 ஆண்டு ஊழல்களும் விசாரிக்கப்படும் என்றார். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப எதிரிகளைத் தோற்கடிக்க அமைக்கப்படுவது எனக் கூறினார்.
நடிகை மலைக்கா அரோரா தனது 2-வது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார். தான் மிகவும் ரொமான்டிக் எனவும் தனக்கு காதல் மீது நம்பிக்கை இருப்பதாகவும், ‘So never say never’ என தெரிவித்தார். 51 வயதான மலைக்கா, 1998-ல் அர்பாஸ் கானை திருமணம் செய்து கொண்டு, 2017-ல் விவாகரத்து பெற்றார். 2018-ல் அவர் நடிகர் அர்ஜுன் கபூரை டேட்டிங் செய்ததாகவும் கூறப்பட்டது. இவர் தமிழில் ‘தையா தையா’ பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
தருமபுரிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள CM ஸ்டாலின், இன்று விவசாயிகளுக்கு உடனடி பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தை சற்றுமுன் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஆன்லைனில் விண்ணப்பித்தால், வங்கி கணக்கில் நேரடியாக ₹5 லட்சம் வரை கடன் பெற முடியும். இந்த திட்டத்தின் மூலம் தேவையற்ற அலைச்சல், காலதாமதம் குறையும் என்பதால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
திமுகவை வீழ்த்த, NDA கூட்டணியில் PMK மற்றும் DMDK இணைய வேண்டும் என நடிகை கஸ்தூரி விருப்பம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பாஜகவில் இணைந்த அவர் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என நினைக்கவில்லை எனவும், தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.