India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகள் பாஜக ஆட்சியால் நாட்டுக்கு சாதனை என்று எதுவுமில்லை என்ற அவர், நாட்டின் மானம் தான் பறிபோனதாக விமர்சித்துள்ளார். மேலும், பாஜக என்றாலே அட்சதை மற்றும் காவி நிறம் மட்டுமே என்றும் அவர் கேலி செய்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கேசிஆர் மகள் கவிதாவை ED கைது செய்துள்ளது.

ஹர்திக் பாண்டியாவுக்கு அதிக முன்னுரிமை தர வேண்டியதில்லை என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சர்வதேச கிரிக்கெட்டில் பாண்டியா எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும், அதில் தோல்வியடைந்து விட்டார் என்றும் குறிப்பிட்டார். ஐபிஎல் கிரிக்கெட்டையும், சர்வதேசப் போட்டிகளையும் ஒன்றாகக் கருதி நாம் குழம்புவதாகவும், ஆனால் இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளதென்றும் பதான் கூறினார்.

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் பாண்டியா பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து DC அணி பேட்டிங் செய்ய உள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற DCக்கு எதிரான போட்டியில் MI வெற்றிபெற்றது. அந்த தோல்விக்கு இன்று டெல்லி பதிலடி கொடுக்குமா? இதுவரை ஆடிய போட்டிகளில் 4 வெற்றிகளுடன் DC 6 ஆவது இடத்திலும், 3 வெற்றிகளுடன் MI 9 ஆவது இடத்திலும் உள்ளது.

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அந்நிறுவனத்தில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், “2004 ஏப்ரல் 26 அன்று கூகுளில் பணிக்குச் சேர்ந்தேன். தொழில்நுட்பம், பயனர் எண்ணிக்கை, என் தலைமுடியின் நிறம் என நிறைய மாறிவிட்டது. ஆனால், நான் இன்றும் அதிர்ஷ்டசாலியாகவே உணர்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். சுந்தர் பிச்சை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தேர்தலுக்குப் பின் பாஜக டெல்லி தலைமையின் உத்தரவின் கீழ் உளவுத்துறை சர்வே ஒன்றை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த சர்வே மூலம், பாஜகவுக்குத் தேர்தல் வாக்குப்பதிவு சாதகமாக அமையவில்லை என்ற நிலவரத்தை மேலிடம் அறிந்துகொண்டுள்ளது. அத்துடன், வேட்பாளர்களிடம் கூடுதல் தகவலைச் சேகரித்த உளவுத்துறை, பணப் பரிவர்த்தனையில் நடந்த குளறுபடிகளை வாக்குமூலமாகப் பெற்று, அதையும் டெல்லிக்கு அனுப்பியுள்ளதாம்.

ஜப்பானில் சற்றுமுன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. போனின் தீவு பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மத்திய டோக்கியோவில் உணரப்பட்டுள்ளது. இதனால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

உ.பியில் அமேதி, ரேபரேலி உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில், டெல்லியில் இன்றிரவு நடக்கும் அக்கட்சியின் தேர்தல் குழுக் கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது. அதேசமயம், ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கேவிடம் கேள்வி எழுப்பியபோது, “இன்னும் சில நாட்கள் காத்திருங்கள்” என்றார்.

அரசியலமைப்புச் சட்டம் குறித்து பாஜக, மோடி இடையே முரண்பாடு நிலவுவதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். குஜராத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், அரசியலமைப்பை மாற்றுவோம் என பாஜக தலைவர்கள் தெரிவித்து வருவதாகவும், ஆனால் இதற்கு முரணாக மோடி பேசுகிறார் என்றும் தெரிவித்தார். நாட்டில் ஜனநாயகத்தையும், மக்களையும் பலவீனப்படுத்த அவர்கள் விரும்புவதாகவும் பிரியங்கா காந்தி சாடினார்.

இந்தியாவில் இருந்து 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. உள்நாட்டு சந்தையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யவும், அதன் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் டிச.8, 2023இல் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. தற்போது விலை கட்டுக்குள் வந்ததால், இலங்கை, வங்கதேசம், பூடான், உள்ளிட்ட 6 நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதியளித்துள்ளது.

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமின் வழங்க ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் மறுத்து விட்டது. நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனது மாமா இறந்து விட்டதால் இறுதி சடங்கில் கலந்து கொள்ள 13 நாள் ஜாமின்கோரி, நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமின் அளிக்க மறுத்து விட்டது.
Sorry, no posts matched your criteria.