News March 18, 2025

வீட்டில் குழந்தைகள் இருக்கா? அப்போது இது முக்கியம்..

image

கேரளாவில் 3 வயது சிறுமி டூத் பேஸ்டுக்கு பதில் எலி பேஸ்டை பயன்படுத்தி <<15791111>>உயிரிழந்தாள்<<>>. அதுபோல் பிளீச்சிங் தூள், சோப்பு தூள் போன்றவையும் கூட குழந்தைகளுக்கு எமனாக மாறலாம் என்பதால் அதை குழந்தைகளின் கைக்கு எட்டாத இடங்களில் வைப்பது அவசியம். அதேபோல் கத்தி, கத்தரிக்கோல், சிறிய நட்டுகள், பட்டன்கள், சில்லரை காயின்கள் போன்றவையும் அவர்களின் பார்வைக்கு படும்படி வைக்கக்கூடாது. Share it…

News March 18, 2025

உடலுறவு காட்சிகள்.. மனம் திறந்த நடிகை கரீனா கபூர்

image

பிரபல இந்தி நடிகையும், நடிகர் சயீப் அலிகானின் மனைவியுமான கரீனா கபூர், படங்களில் வரும் உடலுறவு காட்சிகள் குறித்து மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். பொதுவாக உடலுறவு காட்சிகள், படத்தின் கதையை முன்னோக்கி கொண்டு செல்லாது என்பது தனது கருத்து என்று கூறியுள்ளார். ஆதலால் அத்தகைய காட்சிகள் தேவையில்லை என தான் கருதுவதாகவும், எனவே தாம் அக்காட்சிகளில் நடிப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 17, 2025

அண்ணாமலை மீது வழக்கு பதிவு

image

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எச். ராஜா, தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அண்ணாமலை உள்ளிட்ட 107 பாஜகவினரை இரவு 7 மணிக்கு தடுப்புக் காவலில் இருந்து விடுவித்த போலீசார், அவர்கள் அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News March 17, 2025

பெண் முன்பு ஆபாசம்: நாடு எங்கே போகிறது?

image

மே.வங்கத்தில் ரயில் நிலையத்தில் இளம்பெண் முன், இளைஞர் ஒருவர் சுயஇன்பம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேகம்பூர் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் பிளாட்பாரத்தில் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்ப்பக்க பிளாட்பாரத்தில் நின்ற இளைஞர் ஒருவர், திடீரென யாரையும் பொருட்படுத்தாமல் இந்த அருவருப்பான செயலை செய்தார். இம்மாதிரி நபர்கள் இருந்தால், நாட்டில் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்?

News March 17, 2025

திமுகவுடன் கூட்டணியா?- உடைத்து பேசிய பிரேமலதா!

image

தமிழக பட்ஜெட்டிற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வரவேற்பு தெரிவித்ததால் திமுகவுடன் கூட்டணி சேர திட்டமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காக பட்ஜெட்டுக்கு வரவேற்பு தெரிவிக்கவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். அதே நேரத்தில், தேர்தல் வருவதற்குள் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் பிரேமலதா குறிப்பிட்டுள்ளார்.

News March 17, 2025

வங்கி சேவைகள் 4 நாள்கள் முடங்கும் அபாயம்!

image

வாரத்தில் 5 நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதற்கு முந்தைய 2 நாள்கள் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமையாக உள்ளன. இதனால், 4 நாட்கள் வங்கி சேவைகள் முடங்க வாய்ப்புள்ளது. அதனால், பொதுமக்கள் தங்களது வங்கி பணியை வரும் 22ம் தேதியே முடித்துக் கொள்வது நல்லது.

News March 17, 2025

சாலை விபத்தில் கேரள பாடகர் பலி

image

கேரளாவில் பாடப்படும் முஸ்லிம் நாட்டுப்புற பாடல்களை அடிப்படையாக கொண்டது மாப்பிளாப்பாட்டு பாடல். இப்பாடலை பாடி புகழ்பெற்றவர் பைஜாஸ் உலியில். புன்னாட்டில் காரில் அவர் நேற்றிரவு பயணித்தபோது, எதிரே வந்த காரில் மோதி விபத்தில் சிக்கினார். இதில் காயமடைந்த பைஜாஸ் உலியில், ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றபோது பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டனர்.

News March 17, 2025

ஹிந்தி தேசிய மொழி… சந்திர பாபு அதிரடி

image

ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு சட்டப்பேரவையில் மும்மொழி கொள்கையை ஆதரித்து பேசியுள்ளார். மொழி வெறுப்பதற்கான ஒன்று அல்ல எனக் கூறிய அவர், ஆந்திராவில் தாய்மொழி தெலுங்கு, தேசிய மொழி ஹிந்தி, சர்வதேச மொழி ஆங்கிலம் எனக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே துணை முதல்வர் பவன் கல்யாண் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பேசியுள்ள நிலையில் தற்போது சந்திர பாபு நாயுடுவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

News March 17, 2025

IPL கேப்டன்களுக்கு அழைப்பு… பிசிசிஐ புதிய திட்டம்!

image

IPL திருவிழா வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், 10 அணிகளின் கேப்டன்களுடன் கூட்டம் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதற்காக வரும் 20-ல் மும்பையில் நடைபெறும் கூட்டத்தில் கேப்டன்கள், அணிகளின் மேனேஜர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில், IPL-ல் புதிதாக செய்யப்பட்டுள்ள மாற்றம் குறித்து தெரிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதன் பின் கேப்டன்களுக்கான போட்டோஷுட் நடத்தப்பட உள்ளது.

News March 17, 2025

‘MBA டிகிரியின் காலகட்டம் முடிந்துவிட்டது’

image

எம்பிஏ குறித்து பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் CHRO சீமா ரகுநாத் கூறியிருக்கும் விஷயம் அதிர்ச்சி அளித்துள்ளது. திறமையும், சிந்திக்கும் ஆற்றலும் இல்லாத எம்பிஏ பட்டதாரிகளே தற்போது நிரம்பியுள்ளனர். எம்பிஏ டிகிரியை புறந்தள்ளிவிட்டு, உண்மையான அறிவையும், திறமையையும் பார்க்கும் காலம் வந்துவிட்டது. அடிப்படை ஐக்யூ கூட இல்லாமல் இருக்கும் எம்பிஏ பட்டம், இனி டாய்லெட் பேப்பருக்கு சமம் என அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!