India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட பட்டியலை மே 1ஆம் தேதிக்குள் அளிக்க ஐசிசி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அணித் தேர்வு தொடர்பாக இன்று ரோஹித் ஷர்மாவும், தேர்வுக்குழு தலைவர் அகர்கரும் ஆலோசனை நடத்தவுள்ளனர். நாளை அல்லது நாளை மறுநாள் இந்திய அணி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஹாசன் தொகுதியின் ஜேடிஎஸ் வேட்பாளரான பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களுடன் தகாத முறையில் இருப்பது போன்ற வீடியோக்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில், தற்போது அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே அவர் ஜெர்மன் நாட்டிற்கு சென்று தலைமறைவாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தனியார் வாகனங்களுக்கான நம்பர் பிளேட் கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதன்படி, அங்கீகரிக்கப்படாத நம்பர் பிளேட்டுகள், ஸ்டிக்கர், சின்னம் ஒட்டியிருக்கும் வாகன ஓட்டிகளுக்கு மே 2ஆம் தேதி முதல் ₹500 முதல் ₹1000 வரை அபராதம் விதிக்கப்படும் எனப் போக்குவரத்துக் காவல்துறை எச்சரித்துள்ளது. மே 1ஆம் தேதி வரை வாகன ஓட்டிகள் தங்களது நம்பர் பிளேட்டுகளை மாற்றிக்கொள்ளக் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஹரியுடன் விஷால் மூன்றாவது முறையாகக் கூட்டணியமைத்த ‘ரத்னம்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. ஹரியின் முந்தையப் படங்களின் சாயல் இப்படத்தில் எழுந்ததால் இதற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், ரத்னம் திரைப்படம் வெளியாகி இரண்டு நாள்களில் வெறும் ₹5 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியின் இஸ்லாமியர்கள் குறித்த கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ராஜஸ்தான் பாஜக சிறுபான்மை அணித் தலைவர் உஸ்மான் கனி அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இன்று வேறு ஒரு விவகாரத்திற்காக காவல் நிலையம் சென்ற அவர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அதனைத்தொடர்ந்து, காவல் நிலையத்தில் புகுந்து அமைதியைக் குலைத்ததாக போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான தலைமை பயிற்சியாளராக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பயிற்சியின் கீழ்தான் இந்திய அணி 2011 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரை வென்றது. மேலும், டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார்.

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கு மே 1ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்துவதால் மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கின்றனர். இந்த நிலையில், இன்று முதல் மே 1 வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும் என எச்சரித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 1ஆம் தேதி வழக்கத்தை விடக் கூடுதலாக அனல் காற்று வீசும் எனக் கூறியுள்ளது.

ராகுல் தொடர்பாக சர்ச்சைக் கருத்து தெரிவித்த கேரள சிபிஎம் எம்எல்ஏ அன்வர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. காந்தியின் பெயரை ராகுல் பயன்படுத்தக்கூடாது என்ற அன்வர், ராகுலின் டிஎன்ஏவை பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் மீது புகாரளிக்கப்பட்ட நிலையில், போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், மின்சார வாகனங்களின் 2ஆவது பெரிய சந்தையாக விளங்கும் சீனாவுக்குத் திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். நடப்பு ஆண்டில் அவர் 2ஆவது முறையாக சீனா சென்றுள்ளார். பன்னாட்டு வணிகத்துக்கான சீன கவுன்சிலின் அழைப்பின் பேரில் அவர் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, கடும் பணிச் சுமையால் அவர் இந்திய பயணத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், புற்றுநோயைத் தொடக்கத்திலேயே கண்டுகொண்டால் அதிலிருந்து எளிதாக விடுபடலாம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். பசியின்மை, திடீரென உடல் எடை குறைதல் அல்லது அதிகரித்தல், ரத்தத்தில் ஹீமோகுளோபின் மிகவும் குறைதல், சாப்பிட தொடங்கியதுமே வயிறு நிரம்பிய உணர்வு ஆகியவை புற்றுநோயின் பரவலான அறிகுறிகளாகும்.
Sorry, no posts matched your criteria.