News March 18, 2025

எம்புரான் ட்ரெய்லரை பார்த்த ரஜினிகாந்த்!

image

நடிகர் மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் வரும் 27 ஆம் தேதி லூசிபர் 2 திரைப்படத்தின் 2ம் பாகமான எம்புரான் வெளியாகிறது. இந்த படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என x பக்கத்தில் பதிவிட்டு மோகன்லால் ரசிகர்களை பிரித்விராஜ் குஷிபடுத்தியுள்ளார். மேலும் படத்தின் ட்ரெய்லரை முதல் ஆளாக பார்த்து ரஜினி பாராட்டியதை என்றும் மறக்கமாட்டேன் என்ற மற்றொரு தகவலையும் பதிவிட்டுள்ளார்.

News March 18, 2025

அதிகாலை 3.30க்கு பூமியில் கால்பதிக்கிறார் சுனிதா!

image

சுனிதா வில்லியம்ஸ் குழு பூமிக்கு திரும்ப ஆயத்தமாகி வருகின்றனர். ஸ்பேஸ்X டிராகன் விண்கலத்தில் அவர்கள் அமர்ந்திருக்கும் காட்சியை நாசா நேரலையாக ஒளிபரப்பி வருகிறது. விண்கலம் தரையிறங்க 4 நிலைகளை கடக்க வேண்டும். 4 நிலைகளை கடந்து விண்கலம் நாளை அதிகாலை 3.30 மணிக்கு தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இண்டர்ஸ்டெல்லார் படத்தில் வருவது போல ஃபுளோரிடா கடற்கரையில் கேப்சூல் மூலம் வீரர்கள் இறங்குவார்கள்.

News March 18, 2025

நடிகை அகுஷ்லா செல்லையா காலமானார்

image

இலங்கையின் முதல் சூப்பர் மாடலும், நடிகையுமான அகுஷ்லா செல்லையா (67) காலமானார். ‘ஸ்லேவ் ஆஃப் தி கன்னிபல் காட்’, ‘டார்சன் தி ஏப் மேன்’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்து சர்வதேச அளவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் நாளை பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, நாளை மறுநாள் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

News March 18, 2025

ரோஹித் பொறுப்பேற்க வேண்டும்: கங்குலி

image

AUS, NZக்கு எதிராக தொடர் தோல்வி, WTC ஃபைனலுக்கு தகுதி பெறாதது என டெஸ்ட்டில் IND அணி சொதப்பி வருவதற்கு ரோஹித் பொறுப்பேற்க கங்குலி வலியுறுத்தியுள்ளார். இதற்கான காரணத்தை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும், இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடர் முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ரோஹித் போன்ற ஒரு வீரரிடம் இருந்து நிறைய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News March 18, 2025

திமுக, காங்., ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

image

நகைக் கடனுக்கான RBIயின் புதிய விதிகளின் பாதிப்பு குறித்து மக்களவையில் விவாதிக்கக்கோரி, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதேபோல், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்து, அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டுமென திமுக எம்.பி கனிமொழி நோட்டீஸ் கொடுத்துள்ளார். எனினும், இந்த ஒத்திவைப்பு தீர்மானங்களை மக்களவை சபாநாயகர் ஏற்பாரா என்பது தெரியவில்லை.

News March 18, 2025

நம்மால ஏன் செய்ய முடியல?

image

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, BC பிரிவினர் 56.36% இருப்பதாகக் கூறி, அவர்களுக்கான இடஒதுக்கீட்டை 42%ஆக உயர்த்தியிருக்கிறார் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி. பீகாரும், ஆந்திராவும் கூட மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திவிட்டது. அதேபோல, தமிழ்நாடு அரசு தானாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

News March 18, 2025

அலற வைக்கும் தங்கம் விலை

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு ₹66,000ஐ தொட்டுள்ளது. மார்ச் 14ஆம் தேதி ₹66,400ஐ தொட்ட தங்கத்தின் விலை, அதன்பின் சற்றே குறைந்து ஆசுவாசப்படுத்தியது. ஆனால், இன்று மீண்டும் ₹66,000ஐ தொட்டு, தங்கம் வாங்குவோரை அலற வைத்திருக்கிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவதே இதற்கு காரணம் என்கின்றனர் முதலீட்டாளர்கள்.

News March 18, 2025

வரி கட்டுவதில் ஷாருக், சல்மானை மிஞ்சிய அமிதாப்!

image

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் இந்த வயதிலும் சுறுசுறுப்பாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனால் அவரது வருமானம் பெருகிக் கொண்டே செல்கிறது. கடந்த 2024ல் மொத்தமாக ₹350 கோடி வருவாய் ஈட்டியிருந்த நிலையில், ₹120 கோடி வரியாக செலுத்தியிருக்கிறார். இதன் மூலம் வரி கட்டுவதில் ஷாருக்கானையும், சல்மான் கானையும் மிஞ்சி புதிய சாதனை படைத்துள்ளார். திரையுலகினருக்கும் முன்னுதாரணமாய் திகழ்கிறார்.

News March 18, 2025

விறுவிறுவென உயரும் பங்குச்சந்தை

image

கடந்த சில மாதங்களாக சரிவில் இருந்த இந்திய பங்குச்சந்தைகள், இன்று மீண்டு எழுந்துள்ளன. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கியவுடன், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 173 புள்ளிகள் உயர்ந்து, 22,682க்கு வர்த்தகம் ஆகிறது. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. தனியார் வங்கிகளின் பங்குகள் இன்று நல்ல ஏற்றத்தை கண்டுள்ளன. பஜாஜ் நிதி நிறுவனங்கள் இன்று சரிவை சந்தித்துள்ளன.

News March 18, 2025

டெல்லி புறப்பட்டுச் சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

image

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். மும்மொழி கொள்கை விவகாரம், ₹1,000 கோடி டாஸ்மாக் ஊழல், போராட்டம் நடத்திய பாஜக கைது என பல்வேறு விவகாரங்கள் தமிழகத்தில் சூடு பிடித்திருக்கும் நிலையில், அவரது இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. டெல்லியில் அவர் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரை சந்திக்கலாம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!