News March 18, 2025

4,092 எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள்

image

நாடு முழுவதும் 4,092 எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு, 28 மாநிலங்களில் உள்ள 4,123 எம்எல்ஏக்களின் பிரமாணப் பத்திரத்தை ஆய்வு செய்தது. அதில், 1,205 எம்எல்ஏக்கள் மீது கொலை, கடத்தல் வழக்கு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக ஆந்திராவில் (79%) 138 எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 18, 2025

IPL பிளேஆப் சுற்றுக்கு செல்லும் அணிகள் எவை? ஜகாதி கணிப்பு

image

2025 IPL தொடரில் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து முன்னாள் CSK வீரர் சதாப் ஜகாதி தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார். சென்னை, கொல்கத்தா, குஜராத் ஆகிய 3 அணிகளும், டெல்லி மற்றும் லக்னோ அணிகளில் ஏதாவது ஒன்றும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என கணித்துள்ளார். வரும் 23ஆம் தேதி தொடங்கும் IPL தொடரில் முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியை KKR அணி எதிர்கொள்கிறது. உங்க கணிப்பு என்ன? கமெண்ட் பண்ணுங்க.

News March 18, 2025

3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்: IMD

image

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமானது வரை மழை பெய்ய கூடும் என IMD கணித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஆனால், அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 2–3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே, குழந்தைகள், முதியவர்கள் வெயிலில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை.

News March 18, 2025

ரஷ்யாவை மிரள வைக்கும் ரகசியம் என்ன? (1/2)

image

போர்க்களம் மாறலாம், போர்கள் தான் மாறுமா? என்பார்கள். ஆனால் போர் வடிவம் இப்போது மாறிவிட்டது. அதற்கு உக்ரைன் – ரஷ்யா இடையே நடக்கும் போர் உதாரணம். அமெரிக்காவுக்கே ரஷ்யா அச்சுறுத்தலாக இருந்தாலும், தன்னிடம் இருக்கும் நவீன தொழில்நுட்பத்தை வைத்து ரஷ்யாவையே மிரள வைத்து வருகிறது உக்ரைன். அப்படி என்ன மாதரியான ஆயுதத்தை இந்த போரில் உக்ரைன் பயன்படுத்தி இருக்கிறது தெரியுமா? ட்ரோன்கள்தான்…

News March 18, 2025

ரஷ்யாவை மிரள வைக்கும் ரகசியம் என்ன? (2/2)

image

ட்ரோன்களை தரையில் பயன்படுத்தும் உத்திதான் உக்ரைனுக்கு கச்சிதமாக கைகொடுத்திருக்கிறது. அதில் மிக முக்கியமானது டிரக்குகள் போல இருக்கும் ட்ரோன்கள். இவை ரஷ்ய எல்லைக்குள் புகுந்து குண்டுகள் வைப்பது, கண்ணிவெடிகளை புதைப்பது என மிரள வைக்கிறது. வீரர்களுக்கு தேவையான உணவு, ஆயுதங்களையும் கொண்டு செல்கிறது. தொழில்நுட்பங்கள் வளர, வளர, போர் தந்திரங்களும் மாறுகின்றன!

News March 18, 2025

ஒரு நாளில் 24 மணி நேரம்… எப்படி வந்தது தெரியுமா?

image

ஒரு நாளில் 24 மணி நேரம் என்பதை நாம் அறிவோம். அது எப்படி நிர்ணயிக்கப்பட்டது என தற்போது பார்க்கலாம். பூமி தன்னைத் தானே சுற்றியபடி, சூரியனை சுற்றி வருகிறது. இதில் பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்ற சரியாக 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. அப்போது பகல், இரவு ஆகியவை மாறி மாறி வரும். இந்த 24 மணி நேரம்தான், ஒருநாள் என கணக்கிடப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு மணி நேரமும் 60 நிமிடங்கள் ஆகும்.

News March 18, 2025

புதுச்சேரியில் போராட முடியுமா? செல்வப்பெருந்தகை

image

புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட அண்ணாமலை போராட்டம் நடத்துவாரா என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். 2026 தேர்தலுக்கு முன்பாக செந்தில் பாலாஜியை முடக்க வேண்டும் என்ற நோக்கில் EDஐ பயன்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், போராட்டங்களை தேடி அலைந்து, அதை நடத்தி, விளம்பர வெளிச்சத்தை வேண்டுமானாலும் அண்ணாமலை பெறலாமே தவிர தமிழக மக்களின் ஆதரவை பெற முடியாது எனவும் சாடியுள்ளார்.

News March 18, 2025

பிரபல காமெடி நடிகருக்கு 20 ஆண்டுகள் சிறை

image

யூடியூப்பில் காமெடி வீடியோ பதிவிட்டு புகழ்பெற்றவர் நகைச்சுவை குள்ள நடிகர் தர்ஷன். ஹரியானாவைச் சேர்ந்த இவர் மீது பட வாய்ப்பு கேட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என கோர்ட் அறிவித்து அபராதத்துடன் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. மேலும், சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

News March 18, 2025

மீண்டும் சென்னையில் கால் பதிக்கும் FORD

image

சென்னையில் FORD நிறுவனம் கார் இன்ஜின் உற்பத்தி, ஏற்றுமதியை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அதிகாரிகளுடன் சமீபத்தில் அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு இந்தியாவில் உற்பத்தியை நிறுத்திய நிலையில், 2024ல் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், FORD நிறுவன அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

News March 18, 2025

திட்டமிட்டே கலவரத்தில் ஈடுபட்டனர்: பாஜக

image

நாக்பூர் கலவரம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. இந்துக்களின் வீடுகள், கடைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், வேலைவாய்ப்பின்மை போன்ற உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்பவே, ‘சாவா’ படத்தை புகழ்ந்தும், அவுரங்கசீப்புக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தும், கலவரத்திற்கு மூல காரணமாக பாஜக செயல்பட்டதாக காங். சாடியுள்ளது.

error: Content is protected !!