India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திரிணாமுல் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு உடன்படாத காரியங்களில் அவர் ஈடுபட்டதால் அவர் வெளியேற்றப்படுவதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, கொல்கத்தா வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் தபஸ் ராயுடன் குணால் கோஷ் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, அவரைப் பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை கொண்டுவர பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என மம்தா தெரிவித்துள்ளார். முதல் 2 கட்ட வாக்கு விகிதம் திடீரென உயர்ந்துள்ளதாக கூறப்படுவது தொடர்பாக சந்தேகம் எழுப்பிய அவர், தேர்தல் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்த பாஜக மேற்கொள்ளும் சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்றா? என்ற சந்தேகம் எழுவதாக தெரிவித்தார். மே.வங்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சில காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் சமையல் சிலிண்டர் பயன்பாடு கடந்த ஏப்ரல் மாதம் 12% அதிகரித்துள்ளது. கடந்த மார்ச்சில் அதன் பயன்பாடு 2.67 மில்லியன் டன்னாக இருந்தது. ஆனால், ஏப்ரலில் 2.45 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த 2023 ஏப்ரலுடன் ஒப்பிடும்போது 12% உயர்ந்துள்ளது. மேலும், 2020 ஏப்ரலுடன் ஒப்பிடும்போது 26.9%, கடந்த 2022 ஏப்ரலுடன் ஒப்பிடும்போது 9% அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அந்த வகையில், சென்னை மீனம்பாக்கம், கடலூர், தருமபுரி, ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை நகரம், மதுரை விமான நிலையம், நாமக்கல், பாளையங்கோட்டை, சேலம், தஞ்சை, திருப்பத்தூர், திருச்சி, திருத்தணி, வேலூரில் இன்று 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. குறிப்பாக, கரூர் பரமத்தியில் 44 டிகிரி செல்சியஸ் வெயிலால் மக்கள் அவதியடைந்தனர்.

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 49ஆவது லீக் போட்டியில் சென்னை-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ், 10 போட்டிகளில் இதுவரை 9 முறை டாஸில் தோற்றுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தனது டாஸ் சாதனையை பார்த்த CSK வீரர்கள், நான் டாஸ் இழப்பேன் என்று தெரிந்து முதலில் பேட்டிங் செய்யத் தயாராகிவிட்டதாக நகைச்சுவையாகத் தெரிவித்தார். இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்

சென்னை மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அலுவலக பணியாளர், ஓட்டுநர் என மொத்தம் 125 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மே 27 ஆம் தேதி கடைசித் தேதியாகும். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ₹500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC, ST, SCA பிரிவினருக்கு கட்டணம் இல்லை. மேலும் தகவல்களுக்கு <

நாடு முழுவதும் கடந்த மாதம் பெட்ரோல் விற்பனை 12.3% அதிகரித்துள்ளது. கடந்த 2023இல் ஏப்ரல் மாதம் பெட்ரோல் விற்பனை 2.65 மில்லியன் டன்னாக இருந்தது. ஆனால், 2024இல் ஏப்ரல் மாதம் 2.97 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், டீசல் விற்பனை 2.3% சரிந்து 7 மில்லியன் டன்னாக இருந்தது. தேர்தல் பிரசாரத்துக்கு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதே பெட்ரோல் தேவை அதிகரித்திருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வால், மத்திய அரசு ஊழியர்களுக்கு 25% வரை சலுகை கிடைக்கவுள்ளது. மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு 50%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்விச் சலுகை, விடுதி கட்டண சலுகை 25% உயருகிறது. குழந்தை கல்வி சலுகையாக மாதம் ₹2812.5, விடுதி கட்டண சலுகையாக ₹8437.5, திவ்யாங் குழந்தை பராமரிப்புக்கு ₹5625 பெறுவர்.

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய 10 லட்சம் பேரில் 7 பேர் மட்டுமே பாதிப்பை சந்தித்ததாக ICMR முன்னாள் விஞ்ஞானி ராமன் கங்காகேத்கர் தெரிவித்துள்ளார். கோவிஷீல்டு செலுத்தியவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படும் என இங்கிலாந்து நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் கூறியது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த ராமன், தடுப்பூசி செலுத்திய 2-3 மாதங்களிலேயே பாதிப்பு ஏற்பட்டிருக்கும் எனக் கூறியுள்ளார்.

மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்போம் என அறிவிக்கும் தைரியும் உள்ளதா என்று காங்கிரஸுக்கு மோடி சவால் விடுத்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தால் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளதாகவும், அதை யாராலும் பறிக்க முடியாதென்றும் கூறினார். மத அடிப்படை இடஒதுக்கீடு அளிப்போம் என அறிவிக்கும் தைரியம் காங்கிரஸ், காங்கிரஸ் இளவரசருக்கு (ராகுல்) உள்ளதா என்றும் சவால் விடுத்தார்.
Sorry, no posts matched your criteria.