India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தங்களது சொகுசு காருக்கு பேன்ஸி நம்பர் வாங்குவது பலரின் விருப்பமாக உள்ளது. ஆனால், துபாயைச் சேர்ந்தவர்கள் இதில் ஒரு படி மேல். முகமது பிங்கட்டி என்ற தொழிலதிபர், தனது குழுவை, கார் நம்பருக்கான ஏலம் எடுப்பதற்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு ‘DD 5’ என்ற பேன்ஸி நம்பரை ₹82 கோடிக்கு அந்த குழு ஏலம் எடுத்துள்ளது. கார் நம்பருக்காக ஏலத்தில் இவ்வளவு தொகை செலவு செய்வது இதுவே முதல்முறை.
மத்திய அமைச்சர்கள் 2024இல் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளில் 75% நிறைவேற்றப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங் கேள்விக்கு, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்தார். அப்போது 2024இல் அமைச்சர்கள் 160 வாக்குறுதிகள் அளித்ததாகவும், அதில் 39 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கார்கள் விலையை மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ் ஆகியவை விரைவில் உயர்த்தவுள்ளன. தயாரிப்பு செலவு அதிகரித்து விட்டதால், வரும் ஏப்ரல் மாதம் முதல் அனைத்து கார்கள் விலையையும் 4% உயர்த்த இருப்பதாக மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே காரணத்தை முன்வைத்து, வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வணிக பயன்பாடு கார்கள் விலையை 2% உயர்த்தப் போவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
ஏடிஎம் கார்டு திருடுப் போதல், வங்கிக் கணக்கில் பணம் மாயமாதல் போன்ற எந்த பிரச்னையாக இருந்தாலும், முதலில் கைக்கொடுப்பது வங்கிகள்தான். எனவே, வங்கிகளின் வாட்ஸ் அப் சேவை எண்கள் செல்போனில் இருத்தல் அவசியம். • எச்டிஎப்சி – 70700 22222. • எஸ்பிஐ – 90226 90226. • கனரா – 90760-30001 • ஐடிஎப்சி – 95555 55555. • இந்தியன் வங்கி – 87544 24242. ஐசிஐசிஐ – 86400 86400. • யூனியன் வங்கி – 96666 06060.
இளையராஜாவின் சாதனை மகுடத்தில் மற்றொரு வைரக்கல்லாய் அமைந்திருக்கிறது சிம்பொனி அரங்கேற்றம். இந்நிலையில், பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். பிரதமருடனான புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த இளையராஜா, மறக்க முடியாத சந்திப்பு எனக் குறிப்பிட்டுள்ளார். சிம்பொனி உள்பட பல விஷயங்கள் குறித்து தாங்கள் பேசிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
*நகைக் கடன் பெற RBI-யின் புதிய விதிமுறைகள்.
*இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் 342 பேர் பலி.
*அடுத்த 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்: IMD அறிவிப்பு.
*சிறுமியை பலாத்காரம்: காமெடி நடிகருக்கு 20 ஆண்டுகள் சிறை.
*செங்கோட்டையனுக்கு சப்போர்ட் பண்ண இபிஎஸ்: சட்டசபையில் சுவாரஸ்யம்.
*சக்திவாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்.
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 1,131 புள்ளிகள் இன்று ஒரே நாளில் உயர்வடைந்தன. சர்வதேச பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று ஆரம்பம் முதல் ஏற்றத்துடன் காணப்பட்டது. இது இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச்சந்தையில் வர்த்தக நேர முடிவில் 1,131 புள்ளிகள் உயர்ந்து 75,301ஆக வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 325 புள்ளிகள் அதிகரித்து 22,834ஆக வர்த்தகமானது.
*மிகப் பெரிய விழாவை நடத்திக் காட்டியிருக்கிறோம்: பிரதமர் மோடி பெருமிதம்.
*ஆண்டுக்கு ₹6,000 உதவித்தொகை பெற விவசாயிகள் அடையாள அட்டை பெற மார்ச் 31 கடைசி நாள்.
*நாளை அதிகாலை 3.30க்கு பூமியில் கால்பதிக்கிறார் சுனிதா.
*டெல்லி புறப்பட்டுச் சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
*உக்ரைன் போரை நிறுத்த டிரம்ப்- புடின் இன்று பேச்சுவார்த்தை.
முகலாய மன்னன் அவுரங்கசீப்பை புகழ்பவர்கள் துரோகிகள் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசியிருப்பது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்துள்ளது. அவுரங்கபாத்தில் உள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அவர் இவ்வாறு பேசியிருக்கிறார். இந்த பிரச்னையை மையமாகக் கொண்டு நேற்று நாக்பூரில் கலவரம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 59% MLAக்கள் மீது கிரிமினல் வழக்கு இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ஆந்திராவில் 79%, தெலங்கானா, கேரளாவில் 69%, பிஹாரில் 66%, மகாராஷ்டிராவில் 65% எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், 98 திமுக எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்கு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.