India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1947இல் பிரிட்டிஷார் சுதந்திரம் அளிக்கும் முன்பு, நாட்டை இந்தியா, பாகிஸ்தான் என 2 நாடுகளாக பிரித்தனர். அப்போது 1947 ஆகஸ்ட் 14இல் பிரிட்டிஷ் இந்திய ராணுவம் கலைக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்திய ராணுவ வீரர்கள், இந்தியா அல்லது பாகிஸ்தான் என விரும்பிய பக்கம் சேர வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது இந்திய ராணுவத்தின் பக்கம் 2.60 லட்சம் வீரர்களும், பாகிஸ்தான் பக்கம் 1.31 லட்சம் வீரர்களும் சேர்ந்தனர்.
கூர்க்கா படையை சரிபாதியாக இந்தியாவும், பிரிட்டனும் தங்களுக்குள் பிரித்து கொண்டன. பிரிட்டிஷ் விமானப்படையில் இருந்த 10,000 பேர் இந்திய விமானப்படையிலும், 3,000 பேர் பாகிஸ்தான் விமானப்படையிலும், பிரிட்டிஷ் கடற்படையில் இருந்த 8,700 பேரில் 5,700 பேர் இந்திய கடற்படையிலும், எஞ்சிய 3,000 பேர் பாகிஸ்தான் கடற்படையிலும் இணைந்தனர். இவை அனைத்தும் பிரிட்டிஷ் ராணுவம் மேற்பார்வையில் நடந்து முடிந்தது.
7 வயது சிறுமிக்கு எமனாக மாறிய கொடூர தந்தை பற்றிய செய்தி இது. உ.பி. காசியாபாத்தில் உணவு ஒவ்வாமையால் சிறுமி உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவள் ரேப் செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொடுமையை செய்தது சிறுமியின் தந்தை என்பதுதான் கொடூரத்தின் உச்சம். ஹோலி பண்டிகையன்று போதையில் இருந்த அவர், சிறுமியை ரேப் செய்துள்ளார். அப்போது, அவள் அலறியதால் கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்துள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படமும், தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK) படமும் பிப். 21-ல் திரையரங்குகளில் வெளியாகின. டிராகன் படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், NEEK படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. இந்நிலையில், மார்ச் 21 அன்று நெட்பிளிக்ஸில் டிராகன் படம் வெளியாகும் அதே நாளில் NEEK படம் அமேசானில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஃபேவரைட் படம் எது?
‘சுழல் 2’ வெப்சீரிஸில் நிர்வாண காட்சிகளில் சம்யுக்தா விஸ்வநாதன் நடித்துள்ளது பேசு பொருளாகியுள்ளது. இதுபற்றி கூறியுள்ள அவர், இந்த காட்சிகளில் நடிக்கும் முன், தன் தாயிடம் சொல்லி ஒப்புதல் பெற்றதாகவும், சிறையில் நடக்கும் சம்பவங்களை மிகவும் ராவாக இயக்குநர் படமாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் கட்டாயப் படுத்தவில்லை என்றும், கதைக்கு தேவைப்பட்டதால் அப்படி நடித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிஐஎஸ்எப் துணை ராணுவப் படையில் காலியாக உள்ள 1,161 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18 முதல் 23 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு முடித்து ஐடிஐ தேர்ச்சி, இதற்கு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாத சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு: https://cisfrectt.cisf.gov.in/
ஐபோன் 16e-க்கு இணையான அம்சங்களுடன் கூகுள் பிக்செல் 9a மாடல் நாளை அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், 48MP பின்பக்க கேமரா, 13MP செல்ஃபி கேமரா, 5,100mAh பேட்டரி திறன் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. மேலும், 8GB RAM, 256GB STORAGE, வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட சிறப்புகளும் உள்ளதாம். இதன் விலை ரூ.55,000 ஆக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தியதாக நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்ட வழக்கில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், ரன்யா ராவ் 2 ஆண்டுகளில் 52 முறை துபாய் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் தனது நண்பரும் நடிகருமான தருண் ராஜுடன் 26 முறை துபாய் சென்று தங்கம் கடத்தியதற்கான ஆதாரம் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை எம்பி சீட் தொடர்பாக வாக்குறுதி அளிக்கவில்லை என இபிஎஸ் கூறியதால் பிரேமலதா அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், பிரேமலதா பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2 விவகாரங்களையும் முடிச்சு போடும் கட்சியினர், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருப்பதாகவும், 2 கட்சிகளும் கூட்டணி வைக்கலாம் என்றும் சொல்கின்றனர்.
கேது பகவான் உத்திரம் நட்சத்திரத்தின் 3ஆம் பாகத்தில் இருந்து 2ஆம் பாகத்திற்கு சென்றுள்ளார். இந்த இடமாற்றம் கடகம், சிம்மம், துலாம் ஆகிய ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப் போகிறது. வாழ்க்கையில் பல இனிய மாற்றங்கள் நிகழும். ஆரோக்கியம் மேம்படும். எதை தொட்டாலும் பண வரவு இருக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்டநாள் கஷ்டங்கள் தீரும். முதலீடுகள் பெரும் லாபங்களை கொடுக்கும். குழந்தை யோகம் உண்டு.
Sorry, no posts matched your criteria.