India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விவசாய நிலங்களைப் பிரித்து மனைகளாக விற்க அனுமதியில்லை என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், விவசாய நிலத்தைப் பிரித்து வீட்டு மனையிடங்களாக மாற்ற முடியாது என்றார். மேலும், நிலங்களைப் பதிவு செய்வதைப் பொருத்தவரை, கிராம நத்தமாக உள்ள இடங்களைப் பொதுமக்களின் வசதிக்காக எந்த மாற்றமும் இல்லாமல் பதிவு செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை சிறையில் ஏற்கனவே தமிழக மீனவர்கள் 110 பேர் உள்ளனர். சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கவும், கைது நடவடிக்கைகளை தடுக்க கோரியும் பல முறை CM ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனாலும் பல ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்னைக்கு விடிவுகாலம் பிறக்கவே இல்லை.
குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க உள்ளதாக அமைச்சர் K.N.நேரு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர் சென்னை, கோவை, மதுரையில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகக் கூறினார். மேலும், நகரங்களை விரிவாக்கம் செய்யும்போது குப்பைகள் கொட்டும் இடம் மையப்பகுதிக்கு வந்துவிடுவதாகக் குறிப்பிட்ட அவர், குப்பைகள் வெளியே பறக்காமல் இருக்க, குப்பைக் கிடங்கைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது என்றார்.
குழந்தைகளுக்கு கல்லீரல் சுருக்கம், கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கும் ‘Hepatitis B’ தடுப்பூசி விலை பல மடங்கு விலை உயர்ந்துள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். 3 தவணைகளாக செலுத்தப்படும் இது, ஒரு டோஸ் ₹20 – ₹50க்கு விற்கப்பட்டது. திடீரென 3 டோஸ் கிட்டத்தட்ட ₹1,700 வரை விலை உயர்ந்துள்ளதால், நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், TNஇல் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மார்ச் 25 வரை TNஇல் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் சிலப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
*உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் சிகிச்சைக்கு உதவுகிறது.
*செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.
*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
*இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.
*சருமத்தை பாதுகாத்து தலை முடியை வலுவாக்கும்.
*சொரியாசிஸ் நோய் சிகிச்சைக்கு நல்லது.
*காயம் குணமடைய உதவும்.
2026 தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், திரைமறைவில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. ADMK தலைமையில் பலம் வாய்ந்த கூட்டணி அமைக்க வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. அதில், பாஜக அல்லாமல் PMK, DMDK, NTK, TVK உள்ளிட்ட கட்சிகள் (அ) BJP, PMK, DMDK, NTK உடன் கூட்டணி எனப் பேச்சு அடிபடுகிறது. சீமானின் அண்மைக் கால பேச்சுகள் கூட்டணியை நோக்கி நகர்வதையே காட்டுகிறது. உங்கள் கருத்து என்ன?
1993 முதல் 2020 வரை சென்னை பகுதியில் கடல் மட்டம், ஆண்டுக்கு 4.31 மில்லி மீட்டர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு இந்த தகவலை பதிலாக அளித்துள்ளது. இதே காலகட்டத்தில் மும்பையில் 4.59 மி.மீ., கொச்சியில் 4.10 மி.மீ., பாராதீப்-ல் 4.43 மி.மீ., அளவுக்கு கடல் மட்டம் உயர்ந்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
*பச்சை மிளகாய் – சருமப் பிரச்னைகளை தடுக்கும்.
*கொத்தவரங்காய் – சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
*மொச்சைக்காய் – ரத்த கொதிப்பை குறைக்கும்.
*நூக்கல் – உடல் எடையை குறைக்கும்.
*மாங்காய் – கொழுப்பை குறைக்க உதவும்.
*வாழைக்காய் – சிறுநீரக பாதிப்பை தடுக்கும்.
*சின்ன வெங்காயம் – நோய் தொற்று வராமல் தடுக்கும்.
கேப்டன் பொறுப்பையும், பேட்டிங் செய்வதையும் தனித்தனியாக பார்ப்பதுதான் நல்லது என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். களத்திற்கு வெளியே கேப்டன் பொறுப்பு குறித்து அதிகமாக சிந்திப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பேட்டிங் செய்யும் போது அதில் மட்டுமே கவனம் செலுத்துவது சிறந்ததாக அமையும் என்றார். நடப்பு ஐபிஎல் சீசனில், குஜராத் அணியை ஷுப்மன் கில் வழிநடத்துவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.