News May 22, 2024

செல்லூர் ராஜூவை சுற்றிவரும் சர்ச்சை

image

நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல் என செல்லூர் ராஜூ கூறியது அரசியல் ரீதியாக விவாதப்பொருளாக மாறியது. இதுதொடர்பாக தெளிவான விளக்கமளித்த பின்பும், அதிமுக மீது அதிருப்தியில் இருப்பதால் தான் அவர் இப்படி பேசியிருக்கிறார். அவர் மீது அதிமுக தலைமை நடவடிக்கை தயாராகி விட்டது என்ற ரீதியில் சிலர் பேசுகின்றனர். ஆனால், அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என அதிமுகவினர் உறுதிபடக் கூறுகின்றனர்.

News May 22, 2024

தொடர்ந்து அதிகரிக்கும் வெள்ளி விலை

image

ஆபரணத் தங்கத்தின் விலையை மிஞ்சும் அளவிற்கு வெள்ளி விலை அதிகரித்துள்ளது. நேற்று ஒருகிராம் வெள்ளி ₹99க்கு விற்பனையான நிலையில், இன்று ₹1.30 உயர்ந்து கிராம் ₹100.30க்கும், கிலோவிற்கு ₹1300 உயர்ந்து ₹1,00,300க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை ₹10 ஆயிரம் கடந்திருப்பது 2ஆவது முறையாகும். இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி கிராம் ₹6,860, சவரன் ₹54,880க்கு விற்பனையாகிறது.

News May 22, 2024

ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் 5 வீரர்கள்

image

ஐபிஎல் தொடர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் 5 பந்து வீச்சாளர்களை தெரிந்து கொள்வோம். முதலிடத்தில் உள்ள யுவேந்திர சஹல் 158 போட்டிகளில் 204 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 2ஆவது இடத்திலுள்ள பியூஷ் சாவ்லா 192 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இப்பட்டியலில் பிராவோ 183 விக்கெட்டுகள் , புவனேஷ் குமார் 181 விக்கெட்டுகள், சுனில் நரேன் 179 விக்கெட்டுகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

News May 22, 2024

தமிழகத்தில் அதிகபட்சமாக 15 செ.மீ. மழை

image

கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் ஆழியாரில் அதிகபட்சமாக 15 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்தபடியாக, திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் 14 செ.மீ., திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் 12 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியில் 9 செ.மீ., கோவை மாவட்டம் மாக்கினம்பட்டி & வாரப்பட்டி பகுதிகளில் தலா 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

News May 22, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

News May 22, 2024

சம்பளத்தை உயர்த்திய நடிகர் கவின்

image

புது முக நடிகரான கவின் அண்மையில் நடித்து வெளியான ஸ்டார் திரைப்படம் விமர்சன ரீதியில் பெரிதும் வரவேற்கப்படவில்லை. எனினும் நன்றாக வசூலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்து கொண்ட கவின், தனது சம்பளத்தை ₹5 கோடியாக உயர்த்தி விட்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும், உதவியாளர்கள் 2 பேரை நியமித்து அவர்கள் முதலில் கதைக்கு ஒகே சொன்னால்தான், நான் கதை கேட்பேன் எனக் கூறுவதாகவும் தெரிய வந்துள்ளது.

News May 22, 2024

X தளத்தில் ட்ரெண்ட் ஆகும் ‘விழித்தெழுங்கள் இந்துக்களே’

image

நடப்பு நாடாளுமன்றத் தேர்தல் ஒருவகையில் மதத்தை தழுவியே நடைபெறுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டு ராமர் கோயில் கட்டியதை முன்னிறுத்தி பாஜக பிரசாரம் செய்கிறது. மேலும், இந்துக்களின் சொத்துக்களை காங்கிரஸ் இஸ்லாமியர்களுக்கு தாரை வார்ப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். அந்த வகையில் ‘WAKE UP HINDUS’ (விழித்தெழுங்கள் இந்துக்களே) என்ற டேக் X தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

News May 22, 2024

ப்ளீஸ் Hi அனுப்பாதீங்க!

image

வாட்ஸ்ஆப் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து மின் வாரியத்தின் எண்ணிற்கு “ HI” என பலரும் மெசேஜ் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், மீட்டர் ரீடிங் எடுத்தவுடன், 500 யூனிட் மேல் உள்ளவர்களுக்கு மின்கட்டண லிங்க் அனுப்பப்படும். இது நுகர்வோரின் வரவேற்பைப் பொறுத்து மேம்படுத்தப்படும். எனவே, WhatsApp எண்ணில் Hi என ‘பேச’ முயற்சிக்க வேண்டாம் என்று மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

News May 22, 2024

ஜுன் 8ல் தேசிய லோக் அதாலத்

image

கிரிமினல் வழக்கு தவிர்த்து, சொத்து தகராறு, வரி பிரச்னை உள்ளிட்ட வழக்குகள் தேங்குவதை தடுக்க நீதித்துறையால், நாடு முழுவதும் தேசிய லோக் அதாலத் (தேசிய மக்கள் நீதிமன்றம்) நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜுன் 8ல் தேசிய லோக் அதாலத் நடத்தப்படவுள்ளத் தகவலை வெளியிட்டுள்ள தமிழ்நாடு சட்ட சேவைகள் ஆணைய உறுப்பினர் செயலாளர் நாஜிர் அகமது, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்கள் பயன்பெறும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

News May 22, 2024

ரயிலில் உள்ள இந்த விதி தெரியுமா?

image

ரயில் பயணம் பாதுகாப்பானதாகவும், சுகமானதாகவும் அமைய ரயில்வே பல்வேறு விதிகளை உருவாக்கியுள்ளது. அதில் ஒன்றாக, ரயிலில் சத்தமிட்டு பேசவோ, அதிக ஒலியுடன் பாட்டு கேட்கவோ, செல்போனில் பிறருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சத்தமாகப் பேசவோ கூடாதென ரயில்வே விதி உள்ளது. யாரேனும் இந்த விதியை மீறினால், டிக்கெட் பரிசோதகரிடம் அதுகுறித்து புகார் அளிக்கலாம் என்று ரயில்வே விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!