India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

எம்.பி தேர்தலில் காங்கிரஸ் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 328 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து தேர்தல்களிலும் 400 இடங்களை தாண்டியே அக்கட்சி போட்டியிட்டுள்ளது. 2004இல் குறைந்தபட்சமாக 417 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், தற்போது கூட்டணி கட்சிகளுக்காக அந்த எண்ணிக்கையை வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளது. 1996இல் காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 529 தொகுதிகளில் போட்டியிட்டது.

நாம் தமிழர் கட்சி தொடங்கிய நாள் முதல் தனித்துப் போட்டியிட்டு வருகிறது. அண்மையில் விஜய் ஆரம்பித்த த.வெ.க. கட்சியும் கூட்டணி சேராமல் உள்ளது. இதை கவனித்த சீமான், விஜய் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டால் கணிசமானத் தொகுதிகளில் வெற்றி பெறலாம் என நினைப்பதாகவும், ஆனால் வழிய சென்று பேசி, விஜய் மறுத்துவிட்டால் தர்மசங்கடமாகி விடும், ஆதலால் விஜய் அழைக்கட்டும் எனக் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமார், மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இதுபோல அவர் 3 முறை அணி மாறி முதல்வராகியுள்ளார். இந்த நிலைப்பாட்டை கண்டு அவர் மீதான நம்பிக்கையை பிகார் மக்கள் இழந்து வருவதாகவும், அது மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை மறுநாள் புயலாகவும், மே 26ஆம் தேதி தீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது இந்த ஆண்டில் உருவாகும் முதல் புயலாகும். இதற்கு ‘ரெமல்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்பெயரை ஓமன் நாடு பரிந்துரைத்துள்ளது. இதற்கு ‘மணல்’ என்பது அர்த்தமாகும்.

AAP பெண் எம்பி மாலிவாலை தாக்கியதாக கெஜ்ரிவாலின் உதவியாளர் விபவ் குமார் மீது வழக்கு பதிந்து டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அதிஷி, இந்த வழக்கு குறித்து விசாரிக்க கெஜ்ரிவாலின் வயதான பெற்றோரை போலீஸ் விசாரணைக்கு அழைத்திருப்பதாகக் குற்றம்சாட்டினார்.

+2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த SC, ST பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் துணைத் தேர்வு எழுத உதவும் வகையில் சிறப்பு வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பழங்குடியினர் நலப் பள்ளி மாணவர்கள் 100% உயர்கல்வியில் சேரும் வகையில் இந்நடவடிக்கையை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க உதவுமாறு ஆசிரியர்களிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் மீது அரசியல் கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் பிரதமர் மோடி, அமித் ஷா பேசுவதாகவும், அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், தான் கடவுளால் பூமிக்கு அனுப்பப்பட்டவன் எனக்கூறும் மோடி, கடவுள் பணியே செய்யட்டும் என்றும் அவர் சாடினார்.

ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பார்க்கிங்’ பட திரைக்கதையை, அகாடமி விருதுகளின் ஸ்கிரிப்ட் நூலகத்தில் வைக்க அழைப்பு வந்துள்ளதாக படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X பதிவிட்ட அவர், இந்த செய்தியை கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும், மிகப்பெரிய படைப்புகளுக்கு மத்தியில் தங்கள் படைப்பும் இடம்பெறுவது பெருமையாக இருக்கிறது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆஜராக அவகாசம் கோரிய நிலையில் கடந்த 21ஆம் தேதி கோவை கணபதி பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்ற அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணானத் தகவல் அளித்ததால், மீண்டும் சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

அதிமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் எப்போது வேண்டுமானாலும் இருக்கும் என அக்கட்சியின் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். தேர்தல் முடிவுக்கு பின் அதிமுக தலைமை மாறும் என்பதற்கு கிஞ்சித்தும் இடமில்லை என்றும், பொதுச்செயலாளர் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் மாற்றம் வரலாம் எனவும் அவர் தெரிவித்தார். தேர்தலின்போது சரியாக பணியாற்றாத நிர்வாகிகள் மாற்றப்பட உள்ளதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.