India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சவுக்கு சங்கர் முதல்வரை ஒருமையில் அழைத்ததை ஏற்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தன்மீதான குண்டாஸ் வழக்கை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், ஒரு மாநிலத்தின் முதல்வரை எவ்வித வரையறை இன்றி ஒருவர் பேசுவதை எப்படி ஏற்க முடியும் என்று கேள்வி எழுப்பினர். கருத்துரிமைக்கும் ஒரு எல்லை இருப்பதாக நீதிபதிகள் கூறினர்.

ரேஷன் கடைகளை குறிப்பிட்ட நேரத்தில் கண்டிப்பாக திறந்து வைத்திருக்க வேண்டும் என, பணியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் என ஏற்கெனவே பிறப்பித்துள்ள உத்தரவை சுட்டிக்காட்டிய கூட்டுறவுத்துறை, பணி நேரத்தில் ஒழுங்காக கடைகளை திறக்காத ரேஷன் கடை ஊழியர்கள் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொறுமையை சோதிக்காமல் எங்கிருந்தாலும் பிரஜ்வால் ரேவண்ணா நாடு திரும்ப வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா எச்சரித்துள்ளார். பாலியல் புகார் வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள தனது பேரன் பிரஜ்வாலுக்கு அவர் எழுதிய கடிதத்தில், எங்கிருந்தாலும் வந்து சட்டரீதியான விசாரணையை எதிர்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். தனது எச்சரிக்கையை காதில் வாங்காவிடில் குடும்பத்தினரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் எனவும் கூறியுள்ளார்.

ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளுவர் படம் அச்சிடப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் திருநாளையொட்டி, நாளை ஆளுநர் மாளிகையில் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளுவர் படம் அச்சிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, காவி உடையில் திருவள்ளுவர் படத்துடன் ஆளுநர் வாழ்த்து கூறியதற்கு கண்டனம் எழுந்தது.

தமிழ்நாட்டில் பிக்சல் ஸ்மார்ட்ஃபோன்கள், ட்ரோன்களை தயாரிக்க கூகுள் நிறுவனம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கூகுள், தனது பிக்சல் ஸ்மார்ட்ஃபோன்களை இந்தியாவில் டிக்சன் டெக்னாலஜிஸ் உடன் இணைந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது. முன்னதாக, Google for India நிகழ்வில் பேசிய அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, இந்தியாவில் கூகுள் பொருட்களை உற்பத்தி செய்ய விருப்பம் தெரிவித்திருந்தார்.

தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் தன்னை கைது செய்தது பாஜகவுக்கு பின்னடைவை அளித்துள்ளதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். PTI செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், தனது கைதுக்கு பின், ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரம் பாதிக்கப்படும், கட்சி சீர்குலையும், ஆட்சி கவிழும் என பாஜக நினைத்ததாகவும், ஆனால், அதற்கு நேர் மாறாக கட்சி பலமடைந்து, தொண்டர்கள் உற்சாகமாக பணியாற்றியதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், சில பகுதிகளில் வழுக்கும் சூழலும் உருவாகக் கூடும் என எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத் தன்மை இல்லாத சில கட்டடங்களில் லேசான சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சென்னை வர உள்ளனர். மாநிலத்தில் முதல் முறையாக ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து, கூகுள் நிறுவனத்தின் பிக்சல் தொழிற்சாலை அமைய உள்ளது. இதற்காக, அவர்கள் முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த தொழிற்சாலை அமைந்தால் உயர்கல்வி பெற்றுள்ள தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ப்ளே-ஆஃப் சுற்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய 2ஆவது வீரர் எனும் பெருமையை அஷ்வின் (21 விக்கெட்) பெற்றுள்ளார். நேற்று நடைபெற்ற பெங்களூருக்கு எதிரான போட்டியில், 2 விக்கெட் எடுத்ததன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். ப்ளே-ஆஃப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் சிஎஸ்கே முன்னாள் வீரர் பிராவோ (28) முதலிடத்திலும், மோகித் சர்மா (20) 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரளாவின் முயற்சியை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடும் கேரளாவின் நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசிடம் கேரள அரசு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.